திருக்குறள்

23/06/2013

தமிழகத்தில் பள்ளி நேரத்தில் மாற்றம் இல்லை: பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் வேலைநேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது.

பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது.


இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அதனை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. எனவே, பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக வெளிவந்த தகவல் தவறானது என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அனைத்து கட்ட ஆலோசனைக்குப் பின்பே, பள்ளி நேர மாற்றம்‌ தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர் கல்விச் சான்றுகள் ரத்து : தமிழக அரசு எச்சரிக்கை


பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு:பள்ளி ஆசிரியர்கள் காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். புதுமையில் நாட்டம் உள்ளவர்களாகவும், திறமைகளை வளர்த்து கொள்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். பாடங்களுடன் பொது அறிவு, நாட்டு நடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்ற ஆற்றல்களையும் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாணவ, மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வகையில் உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஆலோசகர், உதவியாளர், நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22/06/2013

மந்தைகளை உருவாக்கும் கல்வி தேவையில்லை!

அனைவருக்கும் இடைநிலை கல்வியில் 18 வயது இளைஞர்களிடையே பிரசாரம்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு முதல் இடைநின்ற இளைஞர்களை பள்ளி,கல்லூரிகளில் சேர்க்கும் பிரசாரம் துவங்கியுள்ளது.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், 2009 முதல் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம், செயல்பாட்டில் உள்ளது. இத் திட்டத்தில் பள்ளிசெல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டுவரை 14 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், இந்த கல்வியாண்டு (2013-2014) முதல், 18 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 15 முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களுக்கான திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் (ராஷ்டீரிய மத்தியமா சிக்ஷா அபியான்) செயல்படுத்துகிறது.
இந்தாண்டு கணக்கெடுப்பில், 15 முதல் 18 வயது நிரம்பிய மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாத மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களிடம் தற்போது பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. 
எதிர்கால கல்வியின் முக்கியத்துவம், கல்விக்கு அரசு செய்யும் உதவிகள், பல்வேறு திட்டங்களில் பெறப்படும், உதவித் தொகைகள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது. பல மாணவர்களை, அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க, முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
பொருளாதார நிலையால், சேரமுடியாத மாணவர்கள் குறித்த அறிக்கையும், அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம் (தற்காலிக விவரம்)

           


எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை (SABL) நடைமுறைப்படுத்த SSA மாநில திட்ட இயக்குநர் உத்த‌ரவு

தமிழ் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் கல்வியியல் கல்லூரியில் இளங்கல்வியியல் (பி.எட்.,) சேர்க்கை அறிவிப்பு

தஞ்சை தமிழ் பல்கலை பி.எட்., படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்கள், அனைத்து வேலை நாட்களிலும், ஜூன் 28 வரை வழங்கப்பட இருக்கிறது. இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் போன்ற பிரிவுகளின் கீழ் பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், இளங்கலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை நேரில் பெற விரும்புவோர் ரூ.600 பணமாகச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்திப்பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் சான்றிதழ் அளித்தல் வேண்டும்

படிவத்தை நேரிலோ, தபாலிலோ அல்லது www.tamiluniversity.ac.in என்ற பல்கலை இணையதளத்திலோ பெற்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 28.

விபரங்களுக்கு 04362 227 782, 226 720 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

2013-14 பள்ளி வாரியான மாணவர் சேர்க்கை ஒன்றிய/ மாவட்ட அளவில் விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தர வு

21/06/2013

அரியலூர் மாவட்டம் திருமானூரில் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் பயிற்சி வகுப்பு செல்ல அனுமதி வழங்காததால் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்



திருமானூர் ஒன்றிய பகுதியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் திருமானூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

உள்ளிருப்பு போராட்டம்

திருமானூர் ஒன்றியத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அரசு அனுமதியோடு பி.எட் படிப்பில் சேர்ந்துள்ளனர். அவர்கள் சுமார் 40 நாட்கள் பயிற்சி வகுப்பு செல்ல வேண்டும். பயிற்சி வகுப்பு செல்லும் 40 நாட் களுக்கும் பாதி சம்பளம் வழங்கப்படும். இவர்கள்பயிற்சி வகுப்பு செல்ல கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் அதற்கான அனுமதியினை கேட்டுள்ள னர். அவர் அனுமதி வழங்காத தால் நேற்று மாலை 5 மணி யளவில் 4 பெண் ஆசிரியைகள் உள்பட 10 இடைநிலை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உள்ளிருப்பு போராட் டம் தொடர்பாக போராட் டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஹென்றி, பாஸ்கரன், ஜான்சன், பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் கூறும்போது, நாங்கள் அரசு மற்றும் அதிகாரிகளின் அனுமதியோடு தொலைதூரக் கல்வியில் பி.எட் படித்து வருகின்றோம். அதற்கான பயிற்சி வகுப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான அனுமதியை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் சுமார் 1 வார காலமாக கேட்டு வருகிறோம். என்ன காரணமோ அவர் எங்களுக்கு அனுமதி வழங்க வில்லை. இதற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள் ளோம்.

இதே அலுவலகத்தில் உதவி தொடக்க கல்வி அதிகாரியாக உள்ளவர் அவரிடம் விண் ணப்பம் கொடுத்த ஆசிரியர் களுக்கு அனுமதி வழங்கும் போது அதே பொறுப்பில் உள்ள இந்த கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரி எங்களுக்கு ஏன் அனுமதி தர மறுக்கிறார் என தெரியவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

உதவி தொடக்க கல்வி அதிகாரி அனுமதி

இந்த போராட்டம் தொடர் பாக மாவட்ட கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருமானூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலக உதவியாளர் உங்களது விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலர் வாங்க சொல்லி விட்டார். உங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித் துள்ளார் என கூறியதன் பேரில் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு செல்வதற்கான அனுமதி விண்ணப்பங்களை அவரிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். திருமானூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத் தில் மாலை 5 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை நடைபெற்றது.

TET தேர்வு அறிவிப்பின் முழு விவரம்

இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் (Right of Children to Free and Compulsory Education (RTE) Act # 2009) என்ற முக்கியமானதோர் சட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது. 

இந்த சட்டத்தில் 6- 14 ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டுமென கூறப்பட்டது. அதற்கு தரமான ஆசிரியர்கள் இருந்தால்தான் குழந்தைகளுக்கான கல்வியும் தரமானதாக இருக்கும் என கொள்கை வகுக்கப்பட்டது.

இச்சட்டத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் நாடு முழுவதும், 10 இலட்சம் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவை. அப்போதுதான் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தை உறுதி செய்ய முடியும் எனவும் அந்த ஆசிரியர்கள் தரமிக்கவர்களாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு என இந்த சட்டம் வலியுறுத்துகிறது. அதற்கு தரமிக்க ஆசிரியர்களை உருவாக்க நாடு முழுவதும் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டுமென சட்டம் தெளிவாக கூறுகிறது.

ஆக, அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இதற்காக கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மத்திய அளவில் நாடு முழுவதும் (காஷ்மீர் மாநிலம் நீங்கலாக) ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (National Council for Teacher Education# NCTE) வழிக்காட்டுகிறது. அந்த வழிகாட்டுதலை அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்து மத்திய ஆட்சிப் பகுதிகளும் பின்பற்ற வேண்டும். ஆண்டுக்கொருமுறை அனைத்து மாநிலங்களின் கல்வி செயலர்களும் தகுதித் தேர்வு பற்றி விரிவான ஆலோசனை மற்றும் ஆண்டறிக்கையை என்.சி.டி.இ. கூட்டத்தில் அளிக்க வேண்டும்.

இந்திய அளவில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

(Central Teacher Eligibility Test # CTET) நடத்தப்படுகிறது. இத்தேர்வினை சி.பி.எஸ்.சி (Central Board of Secondary Education) நடத்தி வருகிறது.

இதில் நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப்பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் எழுத வேண்டும். மாநிலங்கள் தோறும் அந்தந்த மாநில அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை (Teacher Eligibility Test# TET) நடத்துகின்றன. அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் வாரியம் (TRB# Teacher Recruitment Board) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வை (Tamilnadu Teacher Eligibility Test# TNTET) நடத்துகிறது.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் 1 முதல் 8 வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசின் கல்வித்துறை செயலாளர்களுக்கு தகவல் 11.02.2011 அன்று அனுப்பப்பட்டது. அதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டுமென கூறி, அதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியது.

இந்திய அரசின் மத்திய பள்ளிகள் வாரியத்தின் (சி.பி.எஸ்.சி) கீழ் இணைப்பு பெற்ற பள்ளிகளில் (கேந்திரிய வித்யாலய சங்காதன், நவோதயா வித்யாலயா சமிதி, மத்திய இடை நிலைக் கல்வி வாரியம்) பணியாற்றுவதற்கான ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது. இந்திய அரசின் மத்திய பள்ளிகள் வாரியம் (சி.பிஎஸ்.சி) இத்தேர்வுகளை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழி காட்டுதலின் படி, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இந்தத் தேர்வுக்கான அரசாணையை (G.O. (M.S) சர். 181- 15.11.2012) இல் வெளியிட்டது. இதன்படி, இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள் (Secondary Grade Teachers) மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் ஆசிரியர்(Graduate Assistants) மட்டுமே தகுதித் தேர்வை எழுத வேண்டும்.

கல்வித்தகுதி

* ஆசிரியர் கல்விக்கான தேசியக் குழுவின் (என்.சி.டி.இ.,) அறிவிக்கை நாள், 23.8.2010க்குப் பின், அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி., தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

* இந்த தேதிக்குப் பின், பணி நியமனம் பெற்றிருந்தாலும், பணி நியமன நடவடிக்கைகள், மேற்கண்ட தேதிக்கு முன் துவங்கியிருந்தால், அவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.

* குறிப்பிட்ட தேதிக்குப் பின், பணி நியமன வேலைகள் துவங்கி, வேலையில் சேர்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆர்.டி.இ., விதிப்படி, ஐந்து ஆண்டுகளுக்குள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

* நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் இறுதித் தேர்வை எழுதுபவர்களும், டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது.

* தாள்-I: 1- 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் களுக்கானது. டீ.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுத தகுதியானவர்கள். இத்தேர்வில் குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களைக் கொண்டது.

* தாள்-II: 6 - 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இது. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுத தகுதியானவர்கள். இத் தேர்வில் அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களுடன், கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்டதாக வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே வினாத்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலிலில் இருந்து 60 வினாக்கள் அமைந்திருக்கும்.

* முதல் தாளினை 1 முதல் 5 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது ஆசிரியப் பயிற்சி முடித்தவர்கள், இரண்டாம் தாளினை 6 முதல் 8 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது இளங்கலைப் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் எழுத வேண்டும். இரண்டிலும் தகுதிப் பெற விரும்புபவர்கள் இரண்டு தாளினையும் எழுதலாம். இறுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களும் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்ச்சிப் பெற 60% மதிப்பெண் (90 மதிப்பெண்) பெற வேண்டும் வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும்.

* ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அமைந்திருக்கும் (மொழிப் பாடங்கள் தவிர). நெகடிவ் மதிப்பெண் வழங்கப் படமாட்டாது. முதல் தாளானது 1 முதல் 5 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத காத்திருப்பவர்களுக்கு, குழந்தை வளர்ப்பு மற்றும் கற்பிக்கும் பகுதி-I (6 முதல் 11 வயது); மொழி பகுதி-II (தமிழ்/ தெலுங்கு/ மலையாளம்/ கன்னடம்/ உருது); மொழி பகுதி -III (ஆங்கிலம் - இதில் அடிப்படைகள், கம்யூனிகேஷன், காம்ப்ரிகென்சன்); கணிதம் பகுதி-IV; சுற்றுச்சூழல் கல்வி பகுதி-V(இதில் கோட்பாடுகள், தீர்வு காணும் திறன், கற்பிக்கும் முறை) ஆகியவற்றில் 30 கேள்விகள் வீதம் 150 வினாக்கள் கேட்கப்படுகிறது.

* இரண்டாம் தாளானது 6-வது முதல் 8-வது வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர் களுக்கு, குழந்தை வளர்ப்பு மற்றும் கற்பிக்கும் முறை பகுதி-I (11 முதல் 14 வயது); மொழி II (தமிழ்/தெலுங்கு/ மலையாளம்/ கன்னடம்/ உருது), மொழி III (ஆங்கிலம்- இதில் அடிப்படைகள், கம்யூனிகேஷன், காம்ப்ரிகென்சன்) இந்த 3 பிரிவும் அனைவருக்கும் பொதுவானது. இதிலிருந்து தலா 30 வினாக்களும், கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு இவற்றில் 60 வினாக்களும்; சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அதில் 60 வினாக்களும் மற்ற பாட ஆசிரியர்கள் இதில் (கணிதம்-அறிவியல் அல்லது சமூக அறிவியல்) ஏதாவது ஒன்றினைத் தெரிவு செய்ய வேண்டும்.

தகுதி சான்றிதழ்

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம். ஆனால் தகுதித் தேர்வு சான்றிதழ் பெற எத்தனைமுறை தேர்வை எழுதலாம் என எதுவும் குறிப்பிடவில்லை. ஒருவர் இந்தத் தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்றால், மீண்டும் தகுதித் தேர்வை எழுதி தனது மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பம்

வரும், ஜூன், 17-ஆம் தேதி, காலை, 10 மணி முதல், ஜூலை, 1-ஆம் தேதி, மாலை, 5:30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 50 ரூபாய் கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தேர்வு கட்டணம்

* எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவு தேர்வர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் 250 ரூபாயும், இதர பிரிவு தேர்வர்கள், 500 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

* தேர்வுக்கட்டணத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளைகளில் அல்லது இந்திய ஓவர்சீஸ் வங்கி அல்லது கனரா வங்கி வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் செலுத்தலாம்..

* விண்ணப்ப தகவல் கையேட்டில் உள்ள சலான் (Challan) மூலமே தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ""ஆன்-லைன்' வழியாகவோ, தபால் மூலமாகவோ, பேக்ஸ் மூலமாகவோ தமிழ்நாடு ஆசிரியர் வாரியத்திற்கு அனுப்பக்கூடாது. நேரடியாக அந்தந்த டி.இ.ஓ., (District Educational Office)அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் (ஜெராக்ஸ்) எடுத்துக்கொண்டு அனுப்பி வைக்கவும். அது பின்னர் தகவலுக்கு தேவைப்படும்.

தேர்வு மையங்கள்

மாநிலம் முழுவதும், 66 கல்வி மாவட்ட தலைநகரங்களில் (Educational District Headquarters), தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

முக்கிய தேதிகள்

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டி.இ.ஓ., அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 1-7-2013

* தேர்வு தேதிகள்: இடைநிலை ஆசிரியர் பணிக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வு ஆகஸ்ட், 17-ஆம் தேதி (17-8-2013); பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட், 18-ஆம் தேதி (18-8-2013) நடக்கின்றன.

* இரு தேர்வுகளும், காலை, 10:00 மணி முதல், நண்பகல், 1:00 மணி வரை நடக்கும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி /நலத்திட்டம் வழங்கப்படுவதை உறுதி செய்திடுமாறு.. தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், "இனிமே நாங்க தான்' எனும் சினிமாவை திரையிட்டு காட்ட வேண்டும்

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், "இனிமே நாங்க தான்' எனும் சினிமாவை திரையிட்டு காட்ட வேண்டும் எனவும், அதற்காக, 10 ரூபாய் கட்டணம் வசூலித்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் வைப்பு நிதி கணக்குத் தணிக்கையை விரைவு படுத்துமாறு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.

பள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட்அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு .

தமிழ்நாடு பள்ளி பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேனிலை பள்ளிக்கு 14.06.2013 அன்று திடீர் விசிட் செய்து அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்தார் .இத்தேர்வில் தலைமைஆசிரியர் உட்பட எந்த ஒரு ஆசிரியரும் விவரங்களை சரிவர தெரிவிக்கவில்லை.
எனவே இவ் அரசணை உட்பட அணைத்து விவரங்களையும் தலைமைஆசிரியர் மற்றும்  ஆசிரியர்களும் தெரிந்து வைத்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள் .

இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், வெறும், 4,500 பேர் மட்டும், விண்ணப்பித்துள்ளனர்.ஆசிரியர் பயிற்சி படிப்பின் பரிதாப நிலை?

தமிழகத்தில், 550 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்காக, மே, 27 முதல், கடந்த, 12ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடைசி நாள் வரை, 5,000 விண்ணப்பங்கள் விற்பனை ஆனபோதும், 4,500 விண்ணப்பங்கள் மட்டுமே, பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டன. விண்ணப்பித்த அனைவருக்கும், "சீட்' உறுதி என்ற நிலை உள்ளது. எனினும், 4,500 பேரும், கலந்தாய்வுக்கு வருவார்களா என்பது தான், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறைக்கு, சந்தேகமாக உள்ளது. 10 சதவீதம் முதல், 20 சதவீதம் வரை, "ஆப்சென்ட்' ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, 3,000 மாணவர்கள், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தாலே, பெரிய சாதனையாக இருக்கும் என, துறை வட்டாரங்கள் கருதுகின்றன.குறைந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதால், அனைவருக்கும், "ஆன்-லைன்' மூலம், கலந்தாய்வை நடத்த, இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவ, மாணவியரை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வரவழைத்து, கலந்தாய்வை நடத்தி, சேர்க்கை உத்தரவை வழங்க, இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.