திருக்குறள்

27/06/2015

அகஇ-2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான கதை புத்தகங்களுக்கான ஓவியங்கள் வரைதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல்


CLICK HERE-LETTER TO DISTRICT REGARDING DRAWING...

26.06.2015 அன்று -போதைப் பொருள் எதிர்ப்பு தினம் அனுசரித்தல்-தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

CLICK HERE--International Day against Drug Abuse Reg

11.07.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான(ENRICHMENT TRAINING ON CCE IN SABL') குறு வளமைய பயிற்சி அட்டவணை

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளிகளில் படிக்கும் 60 லட்சம் முதல் 70 லட்சம் மாணவ- மாணவிகளின் விவரங்களை ஆதாரில் இணைக்க வேண்டி யிருப்பதால் பள்ளிகளில் அதற் காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகளின் விவரங் களை உரிய படிவத்தில் பெற்று பூர்த்தி செய்து ஜூன் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாய மாக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் விவரங்களை பள்ளி நிர்வாகத்திடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை


அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அந்த கடிதத்தில் மாணவர்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தும் வகையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களான பாலாடை கட்டி, தயிர் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு வழங்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. எனவே அதே போன்று பிற மாநிலங்களும் அந்த நடைமுறையை பின்பற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக பால் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து பாலை கொள்முதல் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய கால்நடைத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் எழுதிய அந்த கடிதத்தில், மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையின் மூலம் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் ஏராளமானோர் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

P.F சந்தாதாரர்களுக்கு விரைவில் இணையத்தில் கணக்கு அறிக்கை

தமிழக அரசு ஊழியர்களின் 2014-2015 நிதி ஆண்டுக்கான பொது வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எஃப்.) ஆண்டு கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயரின் நிர்வாக வலைதளத்தில் ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. சந்தாதாரர்கள் பொது வருங்கால வைப்பு நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே இந்த வலைதளத்தில் இருந்து தங்களது 2014-2015-ஆம் ஆண்டு கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சந்தாதாரர்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை இந்த வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த ஆண்டில் இருந்து, ஆண்டு கணக்கு அறிக்கை சீட்டு அலுவலகத்திலிருந்து விநியோகிக்கப்பட மாட்டாது. சந்தாதாரர்களின் கணக்கு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தாலோ அல்லது விடுபட்ட சந்தா தொகை அல்லது விடுபட்ட கடன் தொகை ஆகியவற்றுக்கு விவரங்கள் இருப்பின் தங்களது அலுவலகத்தின் மூலம் கீழ்க்கண்ட தகவல் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, மாநில கணக்காயர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள் விவரம்: துணை மாநில கணக்காயர், தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலுவலகம் (கணக்கு, பணி வரவு), 361, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை, 600018 என்ற முகவரியிலும், 044-24314477, 24342812 என்ற தொலைபேசி எண்களிலும், www.agae.tn.nic.in என்ற வலைதளத்திலும், aggpf@tn.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்

மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளியாக மாற்றும்படி, அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

நடப்பு கல்வியாண்டில், மாற்றுத்திறனாளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளிகளை உருவாக்க, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு, ஒரு அரசு பள்ளியை தேர்வு செய்து, அதை மாற்றுத்திறன் கொண்டவர்கள், மற்ற மாணவர்களுடன் அமர்ந்து படிக்கும் வகையில், வகுப்பறை சூழலை மாற்றுதல், சிறப்பு ஆசிரியர் நியமனம், சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள், குடிநீர் வசதி, சாய்தளங்கள் போன்றவற்றை ஏற்படுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

எளிய படைப்பாற்றல் கல்வி - கற்றல் படி நிலைகளின் தொகுப்பு

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2015-16ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவு துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் அறிவுரை

GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2014-2015 DOWNLOAD....

CPS:பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 

இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்துஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), இவற்றுக்கான அகவிலைப்படி ஆகிய கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்குச் சமமான தொகையை அரசு தன் பங்காக செலுத்தும்.

இதற்கென ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் பிரத்யேக சிபிஎஃப் எண் கொடுக்கப்பட்டு அந்த கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படும். சிபிஎப் கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 8.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஊழியரின் கணக்கில் சேரும் தொகை, அவர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். எஞ்சிய 40 சதவீத தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரையில், ஊழியர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதியில் (ஜிபிஎப்) இருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு கடன்பெறலாம். கடனை திருப்பி செலுத்திய பிறகு மீண்டும் கடன் பெறமுடியும். மேலும் 15 ஆண்டு பணி முடிவடைந்ததும் ஜிபிஎப் நிதியில் இறுதித்தொகையின் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஜிபிஎப் போன்று கடன்பெறும் வசதியோ, பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியோ இல்லாமல் இருந்துவந்தது. 


இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்கள் 10 ஆண்டுகள் பணியைமுடித்திருந்தால் அவர்கள் சிபிஎப் கணக்கில் தாங்கள் செலுத்திய தொகையில் இருந்து 25 சதவீதத்தை திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்று புதிய ஓய்வூதிய திட்டத்தை கவனித்து வரும் அமைப்பான ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. எனினும், இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி, சந்தாதா ரர்கள், தங்கள் பணிக் காலத்தில் 3 முறை சிபிஎப் தொகையை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமண செலவு, வீடு அல்லதுஅடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, மருத்துவ செலவினங்களுக்கு (புற்றுநோய், சீறுநீரக குறைபாடு, இதய நோய் போன்றவை) இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறைக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். 


இருப்பினும், மருத்துவ செலவினத்துக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள் ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். எனினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிபிஎப் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை. இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறும்போது, “2003-க்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களைப் போல சிபிஎப் திட்டத்திலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை கடன்பெறவும், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் இறுதித் தொகையில் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார்.

ஜூன் 29 முதல் பி.எட்., விண்ணப்பம் வினியோகம்:காமராஜ் பல்கலை அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான(2015-16) பி.எட்., (இளங்கலை கல்வியியல்) படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 29 முதல் வினியோகிக்கப்படுகின்றன.

இரண்டாண்டு படிப்பான இதற்கு தொடக்கக் கல்வியில் நேரடி பயிற்சிபெற்று அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் பணி அனுபவத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள் பல்கலை மாணவர் சேர்க்கை மையம், மதுரை அழகர்கோவில் ரோடு பல்கலை வளாக மாணவர் சேர்க்கை மையம் ஆகிய இடங்களில் வழங்கப்படும். மேலும் www.mkudde.org என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து உரிய கட்டணத்துடன் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்கள் 0452- 253 5973 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டுக்கொள்ளலாம் என தொலை நிலைக் கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23/06/2015

எப்போது வேண்டுமானாலும் இனி 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம்

பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் வசதிக்காக, 10ம் வகுப்பு தேர்வை, எப்போது வேண்டுமானாலும், ஒவ்வொரு பாடமாக எழுதி தேர்வு பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மத்திய மனிதவள அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள், உயர்கல்வி கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் வசதிக்காக, 10ம் வகுப்பு தேர்வை, எப்போது வேண்டுமானாலும், நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் எழுதி, தேர்ச்சி அடைவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி, ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களையும் எழுத வேண்டிய அவசியமில்லை. தங்கள் வசதிக்கேற்ப, ஒவ்வொரு பாடமாக எழுதி தேர்ச்சி பெறலாம்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், 'மாசிவ் ஆன் - லைன் ஓபன் கோர்ஸ்' என்ற திட்டத்தின் கீழ், இந்த தேர்வை எழுதலாம். தேசிய திறந்தநிலை பள்ளி பயிற்சி மையம், இதை திட்டத்தைகண்காணிக்கும்.

இதுதொடர்பான பாடங்கள் அனைத்தையும், இணையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து படிக்கலாம். ஐந்து பாடங்களி லும் தேர்ச்சி பெற்ற பின், சான்றிதழ் அளிக்கப்படும். இவ்வாறு, அந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை நன்முறையில் பின்பற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்
















ஆசிரியர் நலனுக்காக முதன்முதலில் இயக்க நிறுவனர் மாஸ்டர் இராமுண்ணி அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்னும் பேரியக்கம்

இப்பேரியக்கத்தின் போராட்ட காலத்திலும் இயக்கத்தின் சோதனை காலத்திலும் இயக்கமும் ஆசிரியர் நலனுமே முக்கியம் என பாடுப்பட்ட இயக்க பாதுகாவலர் ஜே.எஸ்.ஆர் அவர்கள் வழியிலும்

தன்னலம் பாராது ஆசிரியர் நலனுக்காகவும் இயக்கத்திற்காகவும் பாடுப்பட்ட இயக்க காவல்தெய்வம் ஐயா ஈசுவரன் காட்டிய வழியில் நடக்கும் நமது இயக்க பொறுப்பாளர்களுடன் இணைந்து செயல்படுவோம் இயக்க பெருமை காப்போம்

பொதுச்செயலாளர் அண்ணன் திரு.ந.ரெங்கராஜன் அவர்களின் நல்லாசியுடனும் வழிகாட்டுதலுடனும் அரியலூர் மாவட்ட கிளை சிறப்பாக செயல்படுகிது.

இப்பேரியக்கத்தின் 2015-2016ஆம் கல்வியாண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை இம்மாதம் முதல் நடைபெறுகிறது.எனவே இயக்க உறுப்பினர் அனைவரும் தவறாமல் தங்களது உறுப்பினர் பதிவை புதுப்பித்து மாபெரும் இவ்வியக்கத்தின் குடும்ப உறுப்பினராக ஆகுவீர்.

அரியலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.இ.எழில் அவர்கள் மற்றும் அனைத்து வட்டாரச் செயலாளர்களின் முழு ஒத்துழைப்புடன் அரியலூர் வட்டாரச் செயலாளர் திரு.ஆ.சண்முகம் தயாரித்த தமிழ்நாட்டில் முதல் முதலாக இயக்க உறுப்பினர் அட்டையுடன் கூடிய மாதவாரியாக பள்ளிவேலை நாட்கள் விவரம் மற்றும் ஆசிரியர் சார் விவரம் இணைந்த சிறிய கையடக்க நூல் அனைத்து இயக்க உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்


இளமையின் புதுமையும்
முதுமையின் அனுபவமும்
இயக்கத்தின் வளர்ச்சியையும்
பெருமையையும் பறைச்சாற்றும்

இயக்கச்செய்திகளை உடனுக்குடன்
இணையத்தளத்தில் பார்த்திட

தாய்மொழி தழிழ் கல்வியின் அடிப்படை அறிவு
முழுமையாக பெற்றிட

இயக்கச் செய்தியை இல்லத்தில் படித்திட ஆசிரியர் கூட்டணி மாத இதழ்

சமூக வலைத்தளத்தில் இணைந்திட

வாட்ஸ்அப்,டெலிகிராமில்
9443603066
Facebook,Twitter பிறவற்றில் இணைந்து கருத்துக்களை பதிவிட

இவண்
ஆ.சண்முகம்
வட்டாரச்செயலாளர்
அரியலூர் வட்டாரக்கிளை
அரியலூர் மாவட்டம்
9443603066
7402499499

18/06/2015

கழிவறையைக் கழுவிய மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

திருநெல்வேலியில், பள்ளி மாணவிகள் இரண்டு பேரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், இரண்டு மாணவிகளுக்கும் ஏன் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கூடாது என்று கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில், மாணவிகளை பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த விசாரணையில், பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் அன்றைய தினம் பணிக்கு வராததால், அதே பள்ளியில் படிக்கும், அவரது மகளை, கழிவறையை சுத்தம் செய்யுமாறு தலைமை ஆசிரியர் கூறியுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் நபருக்கு வாரத்துக்கு ரூ.20 ஊதியமாக வழங்குவது குறித்து குறிப்பிட்ட மனித உரிமைகள் ஆணையம், இதுபோன்ற வேலைகளை செய்யும் நபர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வகை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

GANDHI PEACE PRIZE-2015 NOMINATION CALLED FOR-REGARDING...PRINCIPAL SECRETARY LETTER...






LOANS AND ADVANCES BY THE STATE GOVERNMENT – Advances to Government Servants – Advance for Education of the Children of Government Employees – Further continuance of the Scheme for a further period of three years from 01-06-2015 – Orders issued.

7வது ஊதியக்குழு 01.01.2016 முதல் அமுல்படுத்தப்படும் என தகவல்


BRC Training list of 2015-16 -Name of the Training

�Strengthening Reading Writing skills in Tamil-2 days

�Maths usage of SLM kit box and solving Mental Maths- 3 days 

�Physical Education Activities linked with CCE -1day 

�Discussion on children's achievement- 2 days (Both primary and Upper primary) 

�Remedial Activities for late bloomers danguages & Maths)-1day 

�Everyday science and simple Projects on CCE- 1day 

�Rich ment Training on CCE in SABL 

�Teaching of science through ALM (Experimental & Projects) -3 days 

�Teaching of Maths through ALM- 3 days 

�workshop on enriching reading and writing sals in Tamil-1 day 

�understanding History and map drawing skills- 1day 

�Enrichment Traning on ALM and Applying CCE in in ALM- 1 day 

�Remedial Activities for late bloomers dangu & Math -1day 

�Preparation for competitive and Talent search examination -1day 

�school sanitation -1 day (Both Primary and Upper primary

454 புதிய ஆசிரியர் தேர்வுப்பட்டியல் வெளியீடு

ஆதிதிராவிட பள்ளிகளில் இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கான, 454 பேர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர்; 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், 669 இடை நிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது.

கடந்த 2013ல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இதில், ஆதிதிராவிடர் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரையும் நிரப்பக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம், தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது. பின், கடந்த ஏப்., 16ம் தேதி இடைக்கால தடை நீக்கப்பட்டு, 70 சதவீதம், அதாவது, 468 ஆசிரியர்களை பணியில் சேர்க்கலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்வு முடிவுகளை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், 454 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்காக, 14 இடங்கள், 'ரிசர்வ்' செய்து வைக்கப்பட்டுள்ளன

தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள மழலையர் பள்ளிக்கான வரைவு விதி

அங்கீகாரம் ஏற்கனவே தொடங்கப்பட்ட, புதிதாக தொடங்கப்பட உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளும், இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் தங்களது பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறவேண்டும். இந்த அங்கீகாரங்களை வழங்கும் அதிகாரம் கொண்ட அதிகாரி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆவார். அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று அந்தந்த மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி), உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் கொண்ட கமிட்டி ஆய்வு செய்யவேண்டும். அதன்பின்னர் அந்த பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவதா? அல்லது நிராகரிப்பதா? என்பதை ஒரு மாதத்துக்குள் முடிவு செய்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
தரைத்தளம்
இவ்வாறு வழங்கப்படும் அங்கீகாரத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட பள்ளிகள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறினாலோ, தவறாக பயன்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அதிகாரிகள் திரும்பப் பெறலாம்.

மழலையர் பள்ளிகள் சொந்த கட்டிடம் அல்லது குத்தகைக்கு கட்டிடத்தில் இயங்கவேண்டும். குத்தகை கட்டிடம் என்றால், அந்த குத்தகை ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டியிருக்க வேண்டும். முள்வேலி, பிறவகை வேலிகள் அமைக்கக் கூடாது. வகுப்பு அறையில் ஒரு குழந்தைக்கு 10 சதுர அடி இடம் ஒதுக்கப்படவேண்டும். வகுப்புகள் அனைத்தும் தரைத்தளத்தில் இருக்க வேண்டும். வகுப்பறையில் இரண்டு நுழைவு வாயில்கள் இருக்க வேண்டும். அந்த கதவுகள், ஜன்னல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.

குற்ற பின்னணி
தண்ணீர் வசதியுடன் கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள், திறந்த வெளி நிலம், விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் நுழைவு வாயில், வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையை ஒட்டியும், குப்பை கொட்டும் பகுதிக்கு அருகிலும் இருக்கக்கூடாது. தீயணைப்பு எந்திரங்கள் வைத்திருக்க வேண்டும். 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு உதவியாளர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள், உதவியாளர்கள், ஊழியர்கள் ஆகியோரை நியமிப்பதற்கு முன்பு அவர்கள் குற்ற பின்னணி உடையவர்களா? என்பதை உள்ளூர் போலீசாரிடம் பள்ளி நிர்வாகம் சரி பார்க்கவேண்டும்.

அவர்கள் தொற்று நோய் எதுவும் இல்லை என்பதை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும்.
மருத்துவ வசதி
இந்த பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ந் அன்று ஒன்றரை வயது பூர்த்தியான குழந்தைகளை மட்டும் சேர்க்க வேண்டும். வயது வரம்பில் எந்த விலக்கும் அளிக்கக்கூடாது. ஒரு வகுப்பு அறைக்கு 15 குழந்தைகளை மட்டுமே சேர்க்கவேண்டும். அதற்குமேல் குழந்தைகளை சேர்க்க தடை விதிக்கப்படுகிறது.
பள்ளியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் வசிக்கும் குழந்தைகளை மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும். காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை வேலை நேரமாக இருக்கவேண்டும்.

ஒரு மணி நேரத்துக்கு 15 நிமிடம் இடைவேளை வழங்க வேண்டும். பள்ளிக்குள் நுழையும்போது, வீட்டுக்கு செல்லும்போதும் குழந்தைகள் குறித்த விவரங் களை பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். முதலுதவி வசதி, மருத்துவ வசதி இருக்க வேண்டும்.
அடித்தால் வழக்கு
பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளை ஒருபோதும் அடிக்கக்கூடாது. ஒருவேளை குழந்தைகளை அடித்தால், அந்த பள்ளி நிர்வாகம் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குழந்தைகளின் பெற்றோரின் வீட்டு முகவரி, இ-மெயில், தொலைப்பேசி எண் ஆகியவை வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டு, இசை, மழலை பாடல்கள், கலை உள்ளிட்டவைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் பயணம் நேரம் இருக்கக்கூடாது. வாகனத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்க வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இந்த பள்ளிகளை எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்.
இவை உள்பட ஏராளான விதிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தமிழக அரசுத்துறையில் பணியாற்றுவோர் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது. தமிழக அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத் துறையின் இந்த அறிவிப்பு அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது.

இதனால், இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து அவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முழுமையான அளவில் முடிக்கப்படவில்லை. இதனால், எந்தத் துறையிலும் ஆதார் எண்ணை இதுவரை கட்டாயமாக்கவில்லை. கருவூலத் துறையின் திடீர் உத்தரவு: எந்தப் பணிகளுக்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் கருவூலத் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் அரசு ஊழியர்களை அச்சமடையச் செய்துள்ளது.

இதுகுறித்து கருவூலத் துறை வெளியிட்ட கடித விவரம்: தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களின் ஊதியப் பட்டியல்கள் இணையதளத்தில் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. அதில், பணியாளர்கள் அனைவரின் அடிப்படை விவரங்களும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண் விபரத்தையும் பதிவேற்றம் செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, இணையதளத்தில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலகங்களும் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் அடிப்படை விபரங்களில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணியை ஜூன் மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்கும்போது முழுமையாக முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

சம்பளம் கிடைக்குமா? அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, 19-ஆம் தேதிக்குள் கருவூலத் துறையிடம் வழங்கப்பட்டு விடும். இந்த நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் இல்லாத காரணத்தால் அதை இந்த மாதத்துக்குள்ளே (ஜூன்) முடிக்க முடியுமா என்று அரசு ஊழியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால், ஜூன் 30-ஆம் தேதி சம்பளம் கிடைக்குமா என்று தெரியவில்லை எனவும், ஆதார் எண்ணை சமர்ப்பிக்க போதிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதிக கட்டண விவகாரம் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதியசட்டம்

தமிழகம் அதிக கட்டண விவகாரம் தனியார் பள்ளிகளை கட தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஏழை மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையையும், மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறையையும் கொண்டு வந்தது. அது வந்த பிறகும் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் எதுவும் இதுவரை இல்லை. ஏற்கனவே உள்ள பழைய சட்டம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் பள்ளிக்காக ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. எனவே, தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு பல முறை கடிதம் எழுதியும் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் பள்ளிகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் பெற்றோர், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மாணவர்கள் சேர்ககையின்போது பள்ளிகள் தன்னிச்சையாக செயல்படுகிறது. எனவே தனியார் பள்ளிகளை அரசு கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை வகுத்து சட்டம் இயக்கவேண்டும் இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு, ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி புஷ்பாசத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக் கல்வித்துறை இணை செயலாளர் அழகேசன் சார்பாக அரசு சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பள்ளிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டங்கள் கொண்டு வர உயர்நிலை குழு அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய சட்டம், சமச்சீர் கல்விச் சட்டம், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஆகியவைகளை உள்ளடங்கியதாக இருக்கும். எனவே, இந்த உயர் நீதிமன்றம் கால நிர்ணயம் செய்யும்பட்சத்தில், அந்த காலத்துக்குள் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அவர் பதில் மனுவில் கூறியிருந்தார். பின்னர் இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல்கள் வி.செல்வராஜ், கே.பாலு ஆகியோர் ஆஜராகி, உயர் நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் அரசு அதை அமல்படுத்தவில்லை. எனவே கால கெடு நிர்ணயிக்கவேண்டும் என்றனர்.

உடனே தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி, தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர எவ்வளவு கால கெடு தேவை என்று அரசிடம் கேட்டு பதில் அளிக்கிறேன் என்றார். இதை கேட்ட நீதிபதிகள் நாளைய தினம், கால கெடுவை அரசு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்

14/06/2015

போலி மாணவர்கள் விவகாரம்: அனைத்து தொடக்கக் கல்வித் துறை அலுவலகங்களிலும், கணினி பயன்பாட்டு, 'பாஸ்வேர்டை' மாற்ற உத்தரவு

கல்வித் துறை அலுவலகங்களில் உள்ள கணினியில், 'பாஸ்வேர்டை' மாற்றுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக கல்வித் துறையில், 10க்கும் மேற்பட்ட இயக்குனரகங்கள் உள்ளன. 

இவற்றின் கட்டுப்பாட்டில், ஆதிதிராவிட நலத்துறை, பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிக் உள்ளிட்ட பல பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக, அந்தந்த துறை சார்ந்த அலுவலகங்களில் இருந்து, சுற்றறிக்கை; அரசின் உத்தரவுகள் அனுப்பப்படும்.

சமீப காலமாக, தொடக்கக் கல்வித் துறையில் நிலவும் பல குளறுபடிகள் குறித்து, வெளிப்படையாக புகார் எழுந்துள்ளன. ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஓராசிரியர் பள்ளிகள், ஆங்கில ஆசிரியர் இல்லாமை, மாணவர் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட, பல பிரச்னைகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள், ஒவ்வொரு நாளும், பலவித உத்தரவுகளை வழங்கி வருகின்றனர். இந்த உத்தரவுகள், உடனடியாக ஆசிரியர்கள் சங்கங்களுக்கு கிடைத்து விடுவதால், அவற்றின் மூலம், தொடக்கக் கல்வித் துறைக்கு, பல பிரச்னைகள் ஏற்படுவதாக, அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.

அரசு உதவிபெறும் பள்ளிகளில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலியாகச் சேர்க்கப்பட்டது குறித்து, தமிழக அரசிடம் இருந்து, கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள், அனைத்து தொடக்கக் கல்வித் துறை அலுவலகங்களிலும், கணினி பயன்பாட்டு, 'பாஸ்வேர்டை' மாற்றுமாறும், ஆசிரியர் சங்கங்களுக்கு சுற்றறிக்கை தரக் கூடாது எனவும், வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

இதன் மூலம், தொடக்கக் கல்வித் துறையின் உத்தரவுகள், இனி, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு கிடைக்காது எனக் கருதி, அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

13/06/2015

தொடக்க , நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் மாதவாரியாகப் பள்ளி வேலை நாட்கள் விவ‌ரம் வெளியீடு

















District level Training as well as for the CRC level...power point show

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப்பட்டியல்-2015

பணிப்பதிவேட்டினை பராமரித்தல் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான அரசின் அறிவுரைகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.


இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.


ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பண்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடு தல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்: காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அமைய வேண்டும்.

ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா? :கண்காணிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில், இலவசப் பொருட்கள் வழங்குதல், ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட ஆவணங்களை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும்' என, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:


* ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலரும், ஜூன் முதல் ஏப்ரல் வரை, குறைந்தது, ஒரு மாதத்தில், 18 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.

* மாணவர், ஆசிரியர் வருகைப் பதிவேடு, இலவசத் திட்டங்களின் செயல்பாடு, பயனாளிகளின் விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என, பார்க்க வேண்டும்; அதன் நகலைப் பெற வேண்டும்.
* பள்ளியில், ஒரு வேலைநாள் முழுவதும் இருந்து, பள்ளியின் நடவடிக்கை, ஆசிரியரின் கற்பித்தல், மாணவரின் கற்றல், கட்டமைப்பு வசதி, தேர்ச்சி விகிதம், குறைபாடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து, அறிக்கை தயார் செய்ய வேண்டும்.
* மாணவர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்க வேண்டும்.
* கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் பராமரிப்பு நிலை, கணினி உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடுகள் குறித்து கண்டறிய வேண்டும்.
* ஆபத்தை ஏற்படுத்தும் திறந்தவெளிக் கிணறுகள், இடிந்த, இடியும் நிலைக் கட்டடங்கள், உயரழுத்த மின் கம்பங்கள் போன்றவற்றால் பிரச்னை இருந்தால், உடனடியாக அறிக்கைத் தாக்கல் செய்து, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் உள்ள போலி மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்:அரசு உதவி பெற தனியார் பள்ளிகளின் குட்டு அம்பலம்

தனியார்களும், தொண்டு நிறுவனங்களும் நிர்வகிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சரிக்கட்டவும், அரசின் உதவி திட்டங்களை தொடர்ந்து பெறவும், 2 லட்சம் போலி மாணவர்களை கணக்கு காட்டியிருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இ.எம்.ஐ.எஸ்., எனப்படும் கல்வி மேலாண்மை மற்றும் தகவல் திட்டம் மூலம் இந்த முறைகேடு அம்பலமாகி உள்ளது.தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு 14 வகை இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவை முறையாக சென்றடைகிறதா, பயன்பெறும் மாணவ, மாணவியர் யார் போன்ற விரிவான விவரங்கள் கல்வித்துறையால் கணக்கெடுக்கப்படுகிறன.
இந்த பணி தமிழக அரசின் இ.எம்.ஐ.எஸ்., திட்டம் மூலம் மாணவர்களின் விவரங்கள் சேகரிப்பு அடிப்படையில் நடந்துள்ளது. இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 57 ஆயிரம் பள்ளிகள் 1.35 கோடி மாணவர்கள், 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்கள், http:/emis.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இந்த இணையதள தகவல்களை பொதுமக்கள் பார்க்க முடியாது. ஆனால் கல்வித்துறையினருக்கு மட்டும் தனி நுழைவு ஐ.டி., வழங்கப்பட்டு தகவல்களை பதிவேற்றி வருகின்றனர்.
இந்த திட்டத்தில் 2011, 2012 மற்றும், 2013ம் கல்வி ஆண்டுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை பள்ளிகளின் பதிவேடு விவரங்களுடன் கல்வி அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்ததில் பள்ளிகளில் போலியான மாணவர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது 


கண்டறியப்பட்டுள்ளது.
தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் குறிப்பாக அரசு உதவிபெறும் குறிப்பிட்ட பள்ளிகளில் இரண்டு லட்சம் போலி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கணினி தகவல் மற்றும் பள்ளிகளின் பதிவேடு தகவல்களை ஒப்பிட்டதில் இரண்டு விதமான மாணவர் எண்ணிக்கை கிடைத்துள்ளது.இதனால் அனைத்து பள்ளிகளிலும் பதிவேட்டின் படி மாணவர்கள் இருந்தனரா, இருக்கின்றனரா என நேரடி ஆய்வு நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் பிறப்பித்துள்ள உத்தரவு:அனைத்து கல்வி மாவட்டங்களிலும் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொடக்கப் பள்ளிகள் குறிப்பாக அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று வருகைப் பதிவேடு மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை, உண்மையில் அரசின் இலவசத் திட்டங்களை பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


சரி கட்டப்படும் அதிகாரிகள்:


இப்பிரச்னை குறித்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:பல இடங்களில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கடுமையாக சரிந்துவிட்டது. மாணவர் எண்ணிக்கை குறைந்தால் பள்ளிக்கான அரசின் உதவிகள் பெருமளவு குறைந்துவிடும்; அரசு உதவி இணைப்பு சான்றிதழும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.
பள்ளியின் அரசு உதவிபெறும் அங்கீகார இணைப்பு, ஆசிரியர் நியமனம், அரசின் நிதித்திட்டங்கள், ஆசிரியர் மானியம் போன்றவற்றை தக்க வைத்துக் கொள்ள கூடுதலாக மாணவர் இருப்பது போல் போலி பெயர்களை காட்டியுள்ளனர்.
அரசு நிதியில் கணக்குக் காட்டிய ஆசிரியர்களை தங்களின் தொண்டு நிறுவனங்களின் வேறு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்வதும் நடக்கிறது.இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் 42 வித


மாணவர் விவர பட்டியலை இந்த பள்ளிகளால் வழங்க இயலவில்லை. அதனால் இ.எம்.ஐ.எஸ்., திட்ட மாணவர் எண்ணிக்கையும் வருகைப்பதிவேடு மாணவர் எண்ணிக்கையும் பெரிய அளவில் வேறுபாடாக உள்ளது.
அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது பள்ளிகளை அலங்கரித்து அவர்களை சரிக்கட்டி ஆவணம் மற்றும் மாணவர் எண்ணிக்கையை சரிபார்க்காமலேயே அனுப்பி விடுகின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


போலி மாணவர் சேர்ப்பு ஏன்:


* அரசு உதவிபெறும் பள்ளிகளில் அந்தந்த பள்ளிகள் மற்றும் மாவட்டங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட மாணவர் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
* குறிப்பிட்ட எண்ணிக்கை குறைந்தால் அரசு உதவி கிடைக்காது.
* அரசு வழங்கும் சம்பளத்தில் ஆசிரியர் நியமனம் செய்தது ரத்தாகிவிடும்.
* அரசின் நிதிஉதவி மற்றும் மாணவர் உதவித்தொகை கிடைக்காது.
* தொண்டு நிறுவன செயல்பாடுகளுக்கு பிரச்னை ஏற்படும்.




திட்டத்தில் சேகரிக்கப்படும் தகவல்கள்:


* மாணவர், பெற்றோர் பெயர், முகவரி, தாலுகா, மாவட்டம்.* மாணவர் சேர்க்கை, ஐ.டி., பஸ் பாஸ், உதவித்தொகை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் எண்கள்* பிறந்த தேதி, பள்ளியில் சேர்ந்த தேதி, ஏற்கனவே படித்த பள்ளி, தற்போது படிக்கும் பள்ளி, வங்கி கணக்கு எண்.* ரத்தப்பிரிவு, உடன் பிறந்தோர் எண்ணிக்கை, அங்க அடையாளம், மதம், இனம், நாடு போன்ற 42 வகை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.


8,250 பள்ளிகள்:


தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய பிரிவுகளில் 8,250 பள்ளிகள், அரசு நிதியுதவியுடன் இயங்கி வருகின்றன; இந்த பள்ளிகளில், ஆவண கணக்கின் படி 33 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; 95 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

Department Permission Application For Government Housing Loan....

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்புக்கிணங்க அரசு பள்ளகளின் கழிப்பறை களை சுத்தம் செய்யும் பணி நகர மற்றும் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து கல்வித்துறை செயலாளர் ஆணை வெளியீடு










09/06/2015

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்.பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சிறப்பு ஆய்வு நடவடிக்கைகளை தொழிலாளர் துறை மேற்கொண்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் (குழந்தைகளின் சுதந்திரமான கட்டாய கல்வி உரிமைச் சட்டம்) 2009-இன் படி, 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதைத் தடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் பணியை தொழிலாளர் நலத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்.), 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து குழந்தைத் தொழிலாளர்கள் விவரங்களைச் சேகரித்து புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் 44 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், அந்தப் பட்டியலில் 2.75 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களுடன் தமிழகம் 10-ஆவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புள்ளி விவரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தீவிர மறு ஆய்வு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்படுவதால், 8-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமையன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 9-ஆம் தேதி கையெழுத்து இயக்கமும், 10,11 தேதிகளில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. 12-ஆம் தேதி நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

அகஇ - 20/06/2015 மற்றும் 27/06/2015 ஆகிய நாட்களில் ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - பயிற்சி ஏடு (MODULE)

07/06/2015

பிறந்த தேதியை மாற்ற பணியில் சேர்ந்த 5 ஆண்டுக்குள் மனு செய்ய வேண்டும் அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு



மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத, 615 சங்கங்களை அதற்கான பதிவு பட்டியலில் இருந்து நீக்குவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது

தமிழகத்தில், கல்வி, கலை, சமூக மேம்பாடு போன்ற காரணங்களுக்காக துவங்கப்படும் சங்கங் கள் மற்றும் மன்றங்கள் அனைத்தும், 1975ம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட வேண்டும்.இதன்படி, தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 1.52 லட்சம் சங்கங்கள் உள்ளன. இதில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சங்கங்கள், உரிய கால இடைவெளியில் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ளன.

இது போன்று, நிதி நிர்வாகம் குறித்த ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் மீது பதிவுத்துறை உரியநடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது.இந்நிலையில், பதிவு மாவட்டம் வாரியாக, ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் தெரிய வரும் சங்கங்களின் பெயர்களை பதிவேட்டில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

1988 - 94 வரை பதிவு செய்யப்பட்ட சங்கங்க ளின் நிலவரம் ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் அறிக்கை தாக்கல் செய்யாத, 615 சங்கங்களின் பெயர்களை பதிவு ஏட்டில் இருந்து நீக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்த அறிவிப்பு, அரசிதழில் வெளியாகி உள்ளது.

06/06/2015

மாணவர்களுக்கு பஸ் பாஸ்.பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய மாணவர்களுக்கு அடுத்த மாதமும் பழைய மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதலும் 'பஸ் பாஸ்' வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கி உள்ளன. ஆனால் மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் அட்டை இன்னும் வழங்கவில்லை. இதனால் பஸ்களில் மாணவ மாணவியர் கட்டணம் இல்லாமல் பயணிப்பது சவாலாக உள்ளது. 'பல பஸ்களில் நடத்துனர்கள் பாஸ் காட்ட வேண்டும்;

இல்லையென்றால் டிக்கெட் எடுக்க வேண்டும்' என வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்து உள்ளன.ஆனால் மாணவர்களின் விவரங்களை சேகரித்து பஸ் பாஸ் பெறுவதற்கான பணிகளில் கல்வித் துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.'மாணவர் விவரங்களை அளித்தால் மட்டுமே பஸ் பாஸ் அட்டை தயாரித்துத் தர முடியும்' என போக்கு வரத்துத் துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளி இயக்குனரகத்தில் இருந்து நேற்று புதிய உத்தரவு வந்துள்ளது. இதன்படி ஏற்கனவே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பழைய மாணவர்கள் பஸ் பாஸ் வைத்திருந்தால் அந்த பட்டியலில் பள்ளியில் இருந்து சென்ற மாணவர்கள் முகவரி மாற்றம் மற்றும் பஸ் தடம் எண் மாற்றம் குறித்து தகவல்களை புதுப்பிக்க வேண்டும். 

இந்த பட்டியலை வரும் 9ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.பின் இந்த விவரங்களை தாமதிக்காமல் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் கொடுத்து ஒரு வாரத்திற்குள் பாஸ் அட்டை வாங்கி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதே போல் புதிதாக பல்வேறு வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களின் பட்டியலை தனியாகத் தயாரித்து இம்மாத இறுதிக்குள் போக்குவரத்துத் துறையில் கொடுக்க வேண்டும்.அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் அவர்களுக்கும் பஸ் பாஸ் அட்டை வாங்கித் தர வேண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

இதன்மூலம் புதிய மாணவர்களுக்கு அடுத்த மாதமும் பழைய மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதலும் பஸ் பாஸ் கிடைக்கும் என தெரியவந்து உள்ளது.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு:2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், 
அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது.

சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில்தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 ஆண்டு அவகாசம் என்பது மத்திய அரசின் இலவச கல்விச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆகஸ்ட் முதல் கணக்கிடப்படுமா, தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 நவம்பர் முதல் கணக்கிடப்படுமா என்ற குழப்பம், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 முதல்தான் அந்த 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பான உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக் கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடவேண்டும். அதுவரையிலும் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா, ஆசிரியராகப் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழப்பார்களா என்பது குறித்து அந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை.

05/06/2015

உலக சுற்றுச்சூழல் தினம்



ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக (World Environment Day) கொண்டாடப்படுகிறது. 'உங்கள் குரலை உயர்த்துங்கள் கடல் மட்டதுக்கு அல்ல' என்ற வாசகத்தை இந்த ஆண்டு(2014) ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும். 1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. 

முடிவில் ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றுச் சூழல் (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச் சூழலை மனிதன் பாதூக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. 

சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன. 

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.

சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன. புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

- See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=95153#sthash.z0cXzGa8.dpuf

04/06/2015

இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்தல் - இணைய வசதி இல்லாத உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள் அருகில் உள்ள இணைய வசதி உள்ள வட்டார வள மையத்தில் இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்ய இயக்குனர் உத்தரவு

அகஇ - குழந்தைகள் சாதனைகள் மற்றும் 2015-16 திட்ட வடிவுகள் சார்பான கலந்துரையாடல் என்ற தலைப்பில் ஒரு நாள் குறுவளமைய அளவில் பயிற்சி நடத்த இயக்குனர் உத்தரவு



CRC LEVEL TRAINING:

CRC Training Dist level 16.06.15 & 17.06.15
CRC Training primary 20.06.15
Upper Primary 27.06.15



பள்ளிக்கல்வி - விலையில்லா பேருந்து பயண அட்டைகள் 2015-16ஆம் கல்வியாண்டிற்கு மாணவ / மாணவிகளுக்கு பெற்று வழங்குவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

பள்ளிக்கல்வி - மாணவர்கள் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது நன்கொடை வசூல் செய்யக்கூடாது என இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - விலையில்லா பேருந்து அட்டையில் விவரங்களை பதிவு செய்தல் சார்பாக ஆசிரியர்களுக்கு 10.06.2015 பயிற்சி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 21 தமிழ், 25 தலைமையாசிரியர், 100 இடைநிலை ஆசிரியர்கள், 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடை நிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 31.12.2015 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு நடத்த உத்தரவு



WORLD environment day


bghUŸ           R‰W¢NHš R‰W¢NHš éê¥òz®Î k‰W« ghJfh¥ò cyf R‰W¢NHš Âd« - 2015 #]‹ 5š bfh©lhLtJ - rh®ò.

gh®it            br‹id R‰W¢NHš nkyh©ik Kfik cW¥Ãd® bray® mt®fë‹ e.f.v©.1500/njgg/2015, ehŸ 22.5.2015.
---
            gh®itæš fhQ« foj¤Âš bjçé¡f¥g£LŸsthW, cyf R‰W¢NHš Âd« - 2015 #]‹ 5š bfh©lhLtJ rh®ghd Ñœfh© m¿ÎiufŸ tH§f¥gL»wJ.
            I¡»a ehLfŸ rigæ‹ R‰W¢NHš brašÂ£l FGé‹ rh®ghf Ï›th©L cyf R‰W¢NHš Âd¤Âid “Sustainable consumption and production” v‹w bghUëid ika¡ fU¤jhf it¤J “Seven Billion Dreams. One Planet. Consume with Care” v‹w KH¡f¤Jl‹ ãfœ¢Áfis V‰ghL brŒa tèÍW¤ÂÍŸsJ.  vdnt nk‰R£oa bghUëid ika¡ fU¤jhf it¤J, gŸëfëš #]‹ 5« ehs‹W 
1. nguâfŸ, 2. kåj r§»è, 3. NHš F¿¤j ngh£ofŸ , 4. fU¤ju§FfŸ / fU¤J g£liwfŸ 5. fiy ãfœ¢ÁfŸ 6. f©fh£ÁfŸ ngh‹w ãfœ¢Áfis V‰ghL brŒJ Áw¥òl‹ el¤JkhW jiyikahÁça®fŸ nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.
bfh©lh£l§fëš mid¤J njÁa gRik¥gil gŸë khzt, khzh¡f®fis jtwhJ <LgL¤JkhW«, 
ãfœ¢Áfis cŸsh£Á ÃuKf®fŸ k‰W« kht£l xU§»iz¥ghs®fŸ fyªJ bfhŸS« bghU£L V‰ghL brŒÂl m¿ÎW¤j¥gL»wJ.

பி.எப் பண பட்டுவாடா புதிய சட்டப்பிரிவு தொடக்கம்

பி.எப் சேமிப்பிலுள்ள தொகையினை உரிய தொழிலாளிக்கு பட்டுவாடா செய்வது குறித்த புதிய சட்டப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக மண்டல ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய நிதி சட்டம் 2015ல் வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலுள்ள தொகையினை உரிய தொழிலாளிக்கு பட்டுவாடா செய்வது குறித்த புதிய பிரிவு 192எ சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவு கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு குறைவாக பணிக்காலம் உடைய தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு ெதாகையானது 30 ஆயிரம் மற்றும் அதற்கு கூடுதலாக கணக்கு முடிப்பு பட்டுவாடா செய்யப்படும் போது வருமான வரி கீழ்கண்ட விகிதத்தில் மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும். அதன்படி, ெதாழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை சமர்ப்பித்திருந்தால் மூலத்தொகையிலிருந்து வருமான வரி பிடித்தமானது 10 சதவிகிதமாக இருக்கும். அவர், படிவம் எண் 15ஜி, 15எச்-ஐ சமர்ப்பித்திருந்தால் வருமான வரியானது மூலத்தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படமாட்டாது.

அதேபோல், தொழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண் மற்றும் படிவம் எண் 15ஜி, 15எச்-ஐ சமர்ப்பிக்க தவறினால் அதிகபட்ச சதவிகித அளவிலான (34.608) வருமான வரியானது மூலத்தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும். சட்டமாற்றத்திற்கு உட்பட்ட வகையில் வருங்கால வைப்புநிதி திட்ட உறுப்பினர்கள் தங்களது பி.எப் கணக்கு முடிப்பு படிவம் எண் 19ஐ சமர்ப்பிக்கும்போது, பணி முடிப்பு பற்றியதான சரியான விவரம் மற்றும் வருமானவரி நிரந்தரகணக்கு எண் (பான் கார்டு) விவரத்தையும் உரிய பகுதியில் அளிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

படிவம் எண் 15ஜி, 15எச்-ஐ பி.எப் கணக்கு முடிப்பு படிவ எண் 19 உடன் இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள பி.எப் அலுவலகங்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.