திருக்குறள்

29/11/2014

AIDS awarness competition


தேசிய திறனாய்வு தேர்வு: கீ - ஆன்சர் வெளியீடு

சென்னை: அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு: சமீபத்தில் நடந்த, தேசிய திறனாய்வு தேர்வுக்கான, விடைகள், ஆன் - லைனில், டிச., 12ம் தேதி வரை, அரசு தேர்வுகள் இயக்ககத்தின், www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர், தங்கள் கருத்துகளை, dgedirector@gmail.com என்ற முகவரிக்கு, இ - மெயில் வாயிலாக, அனுப்பலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டையை பணிபதிவேட்டில் பதியப்பட வேண்டும்

Inclusion of Aadhaar (Unique Identification) number in Service Book of Government servants —

No.Z-20025/9/2014-Estt.(AL)
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions

Department of Personnel & Training

Block-IV, Old JNU Campus,
New Delhi, November 3rd 2014

OFFICE MEMORANDUM

Subject: Inclusion of Aadhaar (Unique Identification) number in Service Book of Government servants —

The undersigned is directed to invite attention to the provisions of the Supplementary Rules which relate to maintaining records of service of a Government employee. As per provisions of SR 199 every step in a Government servants’ official life must be recorded in his Service Book and each entry attested by the Head Of Office. As per SR 202, Heads of Offices are to obtain the signatures of the Government servants in token of their having inspected their Service Books annually. Further Rule32 of the CCS (Pension) Rules 1972 provides for issuing a communication on completion crf 18 years of service, as part of preparatory work for sanctioning pensionary benefits. The Service Books at present contains details of bio data, posting details, qualifying service, security details, HBA, CGHS, CGEGIS, LTC, etc.

2. It has been decided to include the respective Aadhaar numbers also of all Government servants in their Service Books. The e-Service Book format already provides fields for Aadhaar number of the Government servant.

3. All Ministries/Departments of the Government of India are requested to ensure that the Service Books of all employees have an entry of the employees’ Aadhaar number. The attached and subordinate offices under their control may also be suitably instructed for compliance,

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்:

குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் வாசிப்பு திறன் தொடர்பாக, மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்துமாறு, கல்வித்துறை அலுவலர்களுக்கு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது. துவக்கப் பள்ளிகள், நடு நிலைப் பள்ளி மாணவர்களில் சிலர், படிப்பில் பின்தங்கியவர்களாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் திட்டமாக, இந்த ஆய்வு நடத்தப்பட்டது. எளிமையான கேள்விகள் கொண்ட வினாத்தாள் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, மாணவர்களுக்கு முன்சோதனை தேர்வு நடத்தப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கிராமப்புறங்களை காட்டிலும், நகரப்புற மாணவர்களிடம் வாசிப்பு திறன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. பல குழந்தைகளின் பெற்றோர், வெளி மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களாக இருப்பதால், அடிக்கடி வசிப்பிட மாற்றம் அவர்களின் கல்வியை பாதிக்கிறது. படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களுடன் நட்பு கொள்ளும்போது, படிப்பை விட்டு கவனம் சிதறுகிறது. நெருக்கடியும், போக்குவரத்தும் அதிகமாக உள்ள அமைதியற்ற வாழ்விட சூழலால், வீடுகளில் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கைவிடுகின்றனர். சினிமா நடிகர்கள் மீதான ஆர்வம், டிவி பார்க்கும் பழக்கம், கிரிக்கெட் போன்றவற்றில் இருக்கும் அபரிமிதமான ஆர்வம், படிப்பில் மாணவர்களின் கவனத்தை குறைத்து விடுகிறது. எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால், மாணவர்களை கட்டாயப்படுத்தி படிக்கச் சொல்லும் மனநிலை, சில ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் பிறந்ததினக் கொண்டாட்டம்: மத்திய அரசு அறிவிப்பு


திருவள்ளுவர் பிறந்த தினம் அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா உறுப்பினர் தருண்விஜய் முன்வைத்த கோரிக்கையை ஏற்பதாக மாநிலங்களவையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய தருண்விஜய், திருவள்ளுவர் பிறந்த தினத்தை நாடுமுழுவதும் சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், நாட்டின் மிகப்பழமையும், சிறப்பும் வாய்ந்த செம்மொழியான தமிழுக்கு, வட மாநிலங்கள் உரிய மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவரது இந்தக் கருத்தை, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாதி உறுப்பினர் ராம் கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் அஹமத் ஹசன், திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உட்பட அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

உடனடியாக இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஸ்மிருதிராணி, தருண்விஜயின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதுடன், திருக்குறளைக் கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்மிருதி ராணி உறுதியளித்தார்.

"முழு சுகாதார தமிழகம்"-பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சுத்தம் சுகாதாரம் சார்ந்து பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல் சார்பு -மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறை.






28/11/2014

4 மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்பு EMIS மாணவர்களின் விவரம் சேகரிப்பு பயிற்சி முகாம்


தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் வீட்டுமனை வாங்குவதற்கான கடன் தொகையின் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, கடன் தொகையின் உச்சவரம்பானது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வீட்டுக் கடன், முன்பணத் தொகை பெறாத அரசு ஊழியர்கள் அவற்றைப் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக் கடன் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.12.5 லட்சமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (பொறுப்பு) செயலாளர் பணீந்திர ரெட்டி புதன்கிழமை பிறப்பித்தார்.

மூன்று தவணைகள் எப்படி? வீட்டு கடன் பெற தகுதி படைத்தவர்களுக்கு மூன்று தவணைகளாக கடன் தொகைகள் வழங்கப்படும். முதல் தவணையாக, அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் 50 சதவீதத் தொகை அல்லது வழிகாட்டி மதிப்பின்படி ஒரு நிலத்தின் மதிப்பு அல்லது விண்ணப்பதாரர் கோரிய தொகை ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை முதல் தவணையாக அளிக்கப்படும்.

இதன்பின், வீட்டுக் கூரை வரை கட்டுமானத்தை எழுப்புவதற்காக இரண்டாவது தவணைத் தொகை அளிக்கப்படும். அது அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் பாதியாக இருக்கும். இறுதி மற்றும் மூன்றாவது தவணைத் தொகையானது கட்டுமானம் முழுவதையும் முடிப்பதற்காக அளிக்கப்படும். இந்த மூன்று தவணைத் தொகைகளும் 10 மாதங்களுக்குள் அளிக்கப்பட வேண்டும். அதாவது முதல் தவணைத் தொகை 2 மாதங்களுக்குள், அடுத்தடுத்த தவணைத் தொகைகள் தலா 4 மாத இடைவெளிகளுக்குள்ளும் அளிக்கப்பட வேண்டும்.

முதல் தவணைத் தொகையைப் பெற்ற அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிலத்தில் வீட்டுக்கான கட்டுமானத்தைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் அதனை அரசு அடமானத்தில் எடுத்துக் கொள்ள விண்ணப்பதாரர் சம்மதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM CELL PETITION- REG-COMPUTER TRS POSTING


Grievance :கணினி ஆசிரியர் பணியிடம் வேண்டுதல்
• 2012-2013 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை2488. -(Source : Performance Statistical Information of School Education,Page.6) 2013-2014 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.
2014-2015 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகதரம்உயர்த்தப்பட்டது. 

மொத்த மேல்நிலைப் பள்ளிகள் – 2688 • 2008-2009 இல் 1878 கணினிஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் 1686 கணினிஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். (1686 இல் 652 பேர் போதிய கல்விதகுதியின்றி உச்ச நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டு புதிதாககல்வி தகுதியுடைய கணினி ஆசிரியர்கள் 2014 இல் நியமிக்கப்படஉள்ளனர் G.O.Ms.No.130.) . 2010 இல் 192 கணினி ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். மொத்தம் நியமிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள்1686192=1878. • காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்கள் 2688-1878= 810 கோரிக்கைகள் • காலியாக உள்ள 810 கணினி ஆசிரியர்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 01 முதல் 10ஆம் வகுப்புவரை கணினி அறிவியலை பாடமாக அறிமுகபடுத்தி வேலைவாய்ப்பற்ற 20000 கணினி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பைவழங்க வேண்டும்.காலியாக உள்ள 810 கணினி ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ?

Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN

Reply: நிராகரிக்கப்பட்டது - 2012-13 நிலவரப்படி 1880 கணினிஆசிரியர்கள் நியமனம் ஒப்பளிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் மற்றும்உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள்வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி நியமனம் செய்யப்படுவார்கள்.பிற கோரிக்கைகள் அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதுஎன்பதை தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74274/வி1/14 நாள்20.11.2014

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது

திண்டுக்கல்: கிராஜூவிட்டியை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர். திண்டுக்கல்லில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து, கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். தனக்கு வர வேண்டிய கிராஜூவிட்டி ரூ.9 லட்சத்தை பெறுவதற்காக உதவி தொடக்க கல்வி அலுவலர் கலைச்செல்வியை அணுகினார். இதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ரூ.20ஆயிரம் லஞ்சம் தர ஒப்புக்கொண்ட சந்திரசேகர், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்டில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கலைச்செல்வியை லஞ்ச ஒழிப்புபோலீசார் கைது செய்தனர்.

குறைந்த மாணவர்களைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

மாணவர் சேர்க்கை 25க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சிபள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி, வரும் கல்வியாண்டு முதல்சேர்க்கையை அதிகரிக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன், ஒருலட்சத்திற்கும் மேல் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 80ஆயிரமாக குறைந்துள்ளது.

தனியாருக்கு எது?
குறிப்பாக, திருவல்லிக்கேணி, சேத்துபட்டு, தி.நகர் ஆகிய பகுதிகளில்உள்ள மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாககுறைந்துள்ளது. ஒட்டுமொத்த வகுப்பிலும் சேர்த்து 50 மாணவர்கள்மட்டும் உள்ள பள்ளிகள் நகரில் அதிகமாக உள்ளன.

மொத்தம் 25 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் ஏழு பள்ளிகள்தற்போது இயங்கி வருகின்றன. அந்த பள்ளிகளை மூட விரும்பாதமாநகராட்சி நிர்வாகம், 25க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ளபள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி, சேர்க்கையை அதிகரிக்கதிட்டமிட்டுள்ளது.

அதற்காக, மும்பை, டில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ளபெரிய கல்வி நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தியமாநகராட்சி கல்வித்துறை, ஏழு பள்ளிகளை தேர்வு செய்து,அப்பள்ளிகளை வரும் கல்வியாண்டு முதல் தனியார்நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி பள்ளிகட்டடம், உபகரணங்கள், மின் கட்டணம், பராமரிப்பு,மாணவர்களுக்கான சலுகைகள் வழங்குவது ஆகிய பணிகளைமாநகராட்சி மேற்கொள்ளும்.

நிர்வாகம், ஆசிரியர்கள் நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியபணிகளை, பள்ளியை நடத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும்.அதற்காக ஒரு மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டிற்குசெலவிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

எந்தெந்த பணிகள்?
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தி.நகர்.,திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு உள்ளிட்ட தனியார் பள்ளிகள்ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களில், மாணவர் சேர்க்கை குறைவாகஉள்ளது. இந்த பகுதிகளில் மட்டும் ஏழு பள்ளிகளை தனியாரிடம்ஒப்படைக்க தேர்வு செய்யப்பட்டது.

கல்வியாண்டு துவங்குவதற்கு முன், இந்த பள்ளிகளை நடத்த உள்ளநிறுவனங்கள் விரும்பும் வகையில், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திதரப்படும். சீருடை மாற்றம் குறித்து முடிவு செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக்க பகுதிக்கு விடிவு எப்போது?
சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியபள்ளிகள், நகராட்சி பள்ளிகளை, மாநகராட்சி கல்வித்துறைகட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்க, தொடர்ந்து பொதுமக்கள்கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசாணைவெளியிட, மாநகராட்சி, அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளது. ஆனால்,இதுவரை அனுமதி கிடைக்காததால், விரிவாக்க பகுதி பள்ளிகள்பரிதாப நிலையில் உள்ளன. அரசு கல்வித்துறையை காட்டிலும்,மாநகராட்சி கல்வித்துறை மூலம், மாணவர்களுக்கு அதிகமானசலுகைகள் வழங்கப்படுவதால், விரைவில் விரிவாக்க பகுதிபள்ளிகளை, மாநகராட்சியோடு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைவலுத்துள்ளது.

27/11/2014

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்

CPS ACCOUNT SLIP - AVAILABLE - JUST TYPE CPS NUMBER AND DATE OF BIRTH

CLICK HERE

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட தேவையான புதிய படிவம்




CPS MISSING CREDIT - WEBSITE LINK AND LOGIN DETAILS


DETAILS TO ENTER CPS WEBSITE

USER ID ; TREASURY CODE (4 DIGITS) UNDERSCORE DDO CODE (4 DIGITS)

PASSWORD ; TREASURY CODE (4 DIGITS) UNDERSCORE DDO CODE (4 DIGITS) UNDERSCORE 123

EXAMPLE ;
UID : 0000_SB000
PW  : 0000_SB000_123


அரசு பணியில் பணிபுரிபவர்கள் TNPSC தேர்வு எழுத துறை முன்அனுமதி அவசியம்

TNPSC DEPARTMENTAL TEST BULLETIN – 2014

DOWNLOAD

DEPARTMENTAL TEST BULLETIN – 2014

Departmental Test Bulletin


Bulletin No.View/Download
Bulletin No. 18 dated 16th August 2014(contains results of Departmental Examinations, May 2014)View
Bulletin No. 17 dated 7th August 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, May 2014)View

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி அவர்களையும்,இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக திரு.கார்மேகம் அவர்களையும்,ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனராக திரு.பாலமுருகன் அவர்களையும்,மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக திருமதி.ஸ்ரீதேவி அவர்களையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 27.12.2014 அன்று தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் 04.12.2014 வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

தொடக்கக் கல்வி - அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை / விழுப்புரம் மண்டல் அலுவலர்களுக்கு முறையே 02 & 03ம், 04 & 05.12.2014 அன்றும் வழங்கப்படவுள்ளது.

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துறை முன் அனுமதி பெற்று / பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் கோரும் நேர்வுகள் குறித்து அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

அகஇ - 2015-16ம் ஆண்டுக்கான புதிய தொடக்க / உயர் தொடக்கப் பள்ளிகள் தொடங்க கருத்துருக்கள் பெறுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

அகஇ - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதிய உயர்வு நவம்பர் 2014 மட்டும் வழங்கவும், நிலுவைத் தொகையை நிதி நிலைமை கருத்தில் கொண்டு வருகின்ற மாதங்களில் வழங்கப்படும் என உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் இன்று 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வுக் கூட்டத்தில், உயர்திரு பள்ளிக்கல்வி துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் உயர்திரு.பூஜா குல்கர்னி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆய்வு கூட்டத்தில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்தனர்.காலாண்டுத் தேர்வில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் 95% தேர்ச்சி இலக்கை அடையவேண்டும் அதற்கான முழு முயற்சிகளை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
6,7,8 ஆகிய வகுப்புகளில் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்கள் மாணவர்களுக்கு அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் தொகை திரும்ப வழங்குவது குறித்து அரசாணை மற்றும் தெளிவுரைகள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

தொடக்கக் கல்வி - உதவிபெறும் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டு பணியாளர் நிர்ணயம் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குனரின் அறிவுரைகள்

தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் எம்.பில்., பி.எச்.டி., ஆகிய மேற்படிப்புகளை அஞ்சல் வழிக் கல்வி மூலமாகவோ / பகுதி நேரமாகவோ / மாலை நேர வகுப்பு மூலமாகவோ பயின்றிட சார்ந்த உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே அனுமதி வழங்கிட இயக்குனர் உத்தரவு

TNOU - ADMISSION TO Ph.D., PROGRAMMES


ஆசிரியர் டிரான்ஸ்பர் நிறுத்தம் கல்வித்துறை செயலர் உத்தரவு


23/11/2014

INCOME TAX - மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார்.

மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார். டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: மாதச்சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள்நேரடியாக அதிக வருமான வரி செலுத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து வருமான வரி வசூலிப்பதை குறைத்தால், சம்பளப் பணம் அவர் களுக்கு முழுமையாகச் செல்லும். அவர்கள் அதிகம் செலவும் செய்வார்கள். இதன் மூலம் மறைமுகமாக வரியை பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம், வரி ஏய்ப்பு செய்பவர்களை தப்பவிடக்கூடாது. அரசுக்கு கிடைக்கும் வரி வருமானத்தில் பாதி அளவுக்கு மறைமுக வரிதான். அதாவது உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சேவை வரி என பல வரிகள் செலுத்தி வருகிறார்கள். என் உதவியாளர் எந்த அளவுக்கு மறைமுக வரி செலுத்துகிறாரோ, அதே அளவுக்கு நானும் மறைமுக வரி செலுத்துகிறேன். செலுத்தும் அளவுகளில் மாற்றம் இருக்குமே தவிர, நாம் அனைவரும் மறைமுக வரி செலுத்துகிறோம். கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொகை 2 லட்ச ரூபாயிலிருந்து 2.5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்போதைக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வரி செலுத்த தேவை இல்லை. மற்ற இதர விலக்குகளை சேர்த்துக்கொண்டால் 3.5 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை வரி இல்லாமல் சமாளிக்கலாம். 35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நபர், சரியான சேமிப்பை செய்தால் அவர் வரி கட்டத் தேவை இல்லை. ஆனால், வாடகை, குழந்தைகளின் செலவு ஆகிய காரணங்களால் இந்த எல்லைக்குள் இருப்பவர்கள் பலரால் சேமிக்க முடியவில்லை. மேலும் வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க, தற்போது இருக்கும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பை குறைக்கும் திட்டம் இல்லை. அது சரியான வழியும் அல்ல. இந்த நிலையில், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த விலக்கினை இன்னும் அதிகரிக்கலாம். நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால் தற்போதைய அரசின் வருமான சூழ்நிலையில் இது சவாலான விஷயம். கடந்த முறை என்னுடைய எல்லைகளை தாண்டியும் பல சலுகைகளை வழங்கினேன். நேரடியாக வருமான வரியாக வசூல் செய்வதை விட, அவர்கள் செலவழிக்கும் பட்சத்தில் பொருளாதார பரிவர்த்தனைகள் அதிகரித்து, மறைமுக வரி வருவாய் உயரும். கிசான் விகாஸ் பத்திரம் கிசான் விகாஸ் பத்திரங்களை மீண்டும் அறிமுகம் செய்திருப்பது கருப்புப் பணத்தை ஊக்குவிப்பதுபோல் அமைந்துள்ளது என்று சில கட்சிகள் அச்சம் தெரிவித்திருப்பது தேவையற்றது. அந்தப் பத்திரத்தை வாங்கும் முதலீட்டாளர்கள் தங்களின் பெயர், விலாசம், பான் அட்டை எண்ணை கண்டிப்பாக அளிக்க வேண்டும். எனவே இந்தப் பத்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியாது. தீவிரவாத அமைப்புகள் கிசான் விகாஸ் பத்திரங்களை வாங்கக்கூடும் என்று எழுப்பப்படும் அச்சங்களும் தேவையற்றது. அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்

  1. சாதி சான்றிதழ்
  2. வருமான சான்றிதழ்
  3. பிறப்பிடச் சான்றிதழ்
  4. இருப்பிடச் சான்றிதழ்
  5. வேளாண் சேவை இணைப்பு படிவம்
  6. விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
  7. புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
  8. பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
  9. பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
  10. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்  உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
  11. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்   புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
  12. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  13. சமூக நலம்

பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அணைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெறப்பட்ட தகவல்கள் Data Center CPS Amount Transfer to AG Office – Date17.1.2013

RTI - சேலம் விநாயகா பல்கலைக்கழக எம்.பில் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியில்லை.

சேலம் விநாயகா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பெறப்படும் உயர்கல்வியான எம்.பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் பெற தகுதியுடையதா?

BHARATHIYAR UNIVERSITY -B.Ed., Admission Notification 2015-2017


Notification -> Click here to View…

Application -> Download…

Prospectus -> Download…

வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் RTI - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்



அடுத்த கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், யோகாவை ஒரு பாடமாக சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் கூறியதாவது:

கடிதம்:

யோகா கலையை கற்பதன் மூலம் இளம் தலைமுறையினர், எதிர்காலத்தில் நல்ல பண்பு மற்றும் உடல் நலம் உள்ளவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக, அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் யோகாவை ஒரு பாடமாக சேர்க்கும்படி, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு, சாதகமான பதில் கிடைத்தால், வரும் ஜூன் மாதத்திற்குள், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஆலோசனை:

பிரதமர் நரேந்திர மோடியும், இந்த திட்டத்துக்கு சம்மதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கப்படும். நம்முடைய பாரம்பரிய கலைகளையும், மருத்துவ முறைகளையும் மறந்து விட்டோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் நம்முடைய கலைகளையும், மருத்துவ முறைகளையும் பின்பற்றி, வளர்ச்சி அடைந்து விட்டன. அடுத்தகட்டமாக, அனைத்து கிராமங்களிலும் ஆயுர்வேத மையங்களையும் துவக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

சர்வதேச யோகா தினம்:

* சமீபத்தில், ஐ.நா., பொதுச் சபையில் பேசிய பிரதமர் மோடி, 'சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க வேண்டும்' என்றார்.
* மத்திய பிரதேச மாநில பா.ஜ., அரசு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, அனைத்து பள்ளிகளிலும் யோகாவை ஒரு பாடமாக சேர்த்து, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
* மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப் பாடமாக சேர்க்க, சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.
*இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது யோகா குறித்த தகவல் வெளியாகியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாம் பாலின குழந்தைகளை பள்ளியில் சேர்க்க மறுக்கக்கூடாது : பள்ளிகளில் அவர்களுக்கு எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது - இயக்குனர் உத்தரவு

தீத்தடுப்பான் கருவி இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்-தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை

டி.ஆர்.பி., தேர்வு மூலமே சிறப்பாசிரியர்கள் நியமனம்

2015 அரசு பொது விடுமுறை நாட்கள்

21/11/2014

SSA -திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக கருதப்படவில்லை, எனவே தொடர் நீட்டிப்பு வழங்க அவசியமில்லை என தமிழக அரசு உத்தரவு

அரசு பள்ளிகளில் பணிபுரிய உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர்கள் 1,028 பேர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வு நடத்தி பணிக்கு எடுக்கிறது

அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி,இசை, ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வுவாரியம்மூலம் எழுத்துத்தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.


1,028 ஆசிரியர்கள் நியமனம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள்,தையல் ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் எனமொத்தம் 1,028 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பணியை தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைத்தது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைசெயலாளர் த.சபீதா உத்தரவுப்படி ஆசிரியர்தேர்வு வாரிய தலைவர்விபுநய்யர் தலைமையில் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்செயலாளர் தண்.வசுந்தராதேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர்எழுத்துத்தேர்வு நடத்த உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில்வெளிவரும்.

எழுத்துத்தேர்வு
மொத்தம் 100 மதிப்பெண்கள் ஆகும். தேர்வு 95 மதிப்பெண்ணுக்கு 3மணிநேரம் நடைபெறும். ஆப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள்கேட்கப்பட்டிருக்கும். 190 கேள்விகள் இருக்கும். ஒவ்வொருகேள்விக்கும் சரியாக பதில் அளித்தால் ½ மதிப்பெண் உண்டு. மீதம்உள்ள 5 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.

இதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

சம்பளம் உயர்வு

ஏற்கனவே 16 ஆயிரம் சிறப்பு தொகுப்பு ஆசிரியர்கள் தமிழக அரசுபள்ளிகளில் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளனர். அவர்களுக்கு மாதம்தலா ரூ.5 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள்சம்பளம் போதாது என்று பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கைவிடுத்தனர். இதையொட்டி அவர்களின் சம்பளம் ரூ.7 ஆயிரமாகஉயர்த்தப்பட்டுள்ளது.





ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராகதிரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.

இந்தத் தொகையானது மத்திய அரசின், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் டெபாசிட் செய்யப்படும். ஆணையம் அந்த நிதியை பங்குச்சந்தை உள்ளிட்டவைகளில் முதலீடு செய்யும். சம்பந்தப்பட்ட பணியாளர்கள் ஓய்வுபெறும்போது இந்த சேமிப்பு நிதியிலிருந்து 40 சதவீதம் உடனடி ஓய்வூதியமாக வழங்கப்படும். எஞ்சிய 60 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.இது இல்லாமல், விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு 20 சதவீத தொகையானது உடனடியாக வழங்கப்படும். எஞ்சிய 80 சதவீதம் அந்த ஊழியரின் 58 வயது பூர்த்திக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். இவை அனைத்தும் திட்டம் சார்ந்த அரசின் அறிவிப்புகள். இந்தத் திட்டமானது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்ற யாருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதுதான் திகைக்க வைக்கும் செய்தி.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் பேசிய அரசு ஊழியர்கள் சிலர் கூறுகையில், “திருத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தில் சொல்லப்பட்ட விதிகள் எதையும் தமிழக அரசு பின்பற்றவில்லை. இந்தத் திட்டத்தில் தேசிய அளவில் சுமார் 39 லட்சத்து 55 ஆயிரம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக் கிறார்கள். இவர்களிடமிருந்து 49 ஆயிரத்து 474 கோடி ரூபாய் பிடித் தம் செய்யப்பட்டு ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 2000 கோடி ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நிலவரப்படி, ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தப்படவில்லை.

2006-க்கு பிறகு தொகுப்பூதியத்தில் இருந்து ரெகுலர் பணியில் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்றுவிட்டார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். இவர்கள் யாருக்கும் இதுவரை ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை’’ என்று தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் துரைப் பாண்டியனிடம் கேட்டபோது, “தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு எந்தவித ஓய்வூதிய பலன்களையும் இதுவரை வழங்காமல் வைத்திருக்கிறது. இதனால் பணிக் காலத்தில் இறந்துபோன ஆசிரியர்கள், போலீஸார், அரசு ஊழியர்கள் என சுமார் 440 பேரின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி மேலாளரை தமிழக அரசு உடனடியாக அறிவித்திருக்க வேண்டும். அந்த நிதி மேலாளர்தான் ஓய்வூதிய நிதியை உரிய இடத்தில் முதலீடு செய்யமுடியும். அப்படி நியமிக்காததால் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப் பணத்தை அரசு டேட்டா சென்டரிலேயே வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு சட்டம் போட்டார்களே தவிர அதை முறையாக நடைமுறைப்படுத்த வில்லை’’ என்றார்.

அ.க.இ - "பயிற்சிகளின் தாக்கம்" சார்பான பயிற்சி கட்டகம்

19/11/2014

அ.க.இ திட்டஅறிக்கையில் வெளியான பகுதிநேர ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ஏப்ரல் 2014 முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட வாய்ப்பு. நிலுவைத் தொகையும்ECS முறையில் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது


Kisan Vikas Patra (KVP) re-launched 18/11/2014

Salient Features of re-launched Kisan Vikas Patra :

1.Amount Invested doubles in 100 months ( 8years 4 months)
2.Available in denominations of Rs 1,000, 5000, 10,000 and Rs 50,000.
3.Minimum deposit Rs 1000/- and no maximum limit.
4.Certificate can be purchased by an adult for himself or on behalf of a minor or by two adults.
5.KVP can be purchased from any Departmental Post office. This facility will also be extended shortly to the designated branches of commercial Banks.
6.Facility of nomination is available.
7.Certificate can be transferred from one person to another and from one post office to another.
8.Certificate can be en cashed after 2 1/2 years from the date of issue.

Table Showing Premature closure of KVP ( for Den. Rs. 1000 )

Period -------------- Amount Payable

2 and half years but less than 3 years 1201
3 years but less than 3 and half years 1246
3 and half years but less than 4 years 1293
4 years but less than 4 and half years 1341
4 and half years but less than 5 years 1391
5 years but less than 5 and half years 1443
5 and half years but less than 6 years 1497
6 years but less than 6 and half years 1553
6 and half years but less than 7 years 1611
7 years but less than 7 and half years 1671
7 and half years but less than 8 years 1733
8 years but before maturity of the Certificate 1798

On maturity of Certificate -------- 2000
(8 Years 4 month = 100 months)

அனைவருக்கும் கல்வித் திட்டம்: 1- 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழாண்டில் முக்கியத்துவம்

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விக்கு நிகழாண்டு முக்கியத்துவம் வழங்க அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களுக்கு மிகக் குறைந்த வயதிலேயே மொழியறிவு, கணித அறிவு போன்றவற்றில் புரிதலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியது:

கணிதம், ஆங்கிலம், தமிழ், அறிவியல் பாடங்களில் மேல் வகுப்புகளுக்கு உதவும் வகையில், பல்வேறு புதிய பிரிவுகளைக் கொண்ட செயல் வழிக் கற்றல் அட்டைகள் நிகழாண்டில் வழங்கப்பட உள்ளன. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வகுப்புகளை எடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

இப்போது தமிழ் பாடத்தில் பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் விரைவில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சிகளின் மூலம் 5, 6-ஆம் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்படும்.

கணக்கெடுப்பு: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில், பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு இப்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, தமிழகம் முழுவதும் 44 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. இப்போதைய கணக்கெடுப்பில், புதிதாக மாணவர்கள் பள்ளிகளிலிருந்து இடையிலேயே நின்றிருந்தால், அவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படுவர். வெளி மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்து வரும் ஏப்ரல் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தக் குழந்தைகளுக்காக, அவரவர் தாய்மொழியில் சிறப்பு மையங்கள் நடைபெற்று வருகின்றன.

ரூ.2 ஆயிரம் கோடி: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக நிகழாண்டு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட அதிகம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் , தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்-இயக்குநர் உத்தரவு


16/11/2014

அகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "பயிற்சிகளின் தாக்கம்" (TRAINING IMPACT) என்ற தலைப்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 22.11.2014 அன்று குறு வளமைய பயிற்சி நடைபெறவுள்ளது.

தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகளை 31.03.2014 அன்றைய நிலையில் ஆசிரியர் சேம நல நிதியில் இருப்பிலுள்ள முடிவிருப்பத் தொகை மென்பொருளில் ஏற்றம் செய்து அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையாளரிடம் ஒப்படைக்க இயக்குனர் உத்தரவு

testfariyalur ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்

20 சிறுவர்களுக்கு தேசிய விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்




15/11/2014

22.11.2014 தொடக்க மற்றும் உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த வாரம் CRC நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன .

வரும் சனிக்கிழமை 22.11.2014 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள பயிற்சி (pri-CRC) மற்றும் உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும் (UP Pri -CRC) குறுவள மைய பயிற்சி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன .

அரியலூர் மாவட்டச் செயற்கு‌ழு கூட்டம் - இயக்ககாவல் தெய்வம் திரு.சு.ஈசுவ‌ரன் திருவுருவப்படதிறப்பு விழா மற்றும் ஆண்டிமடம் முன்னாள் வட்டா‌ரச் செயலாளர் க.தமிழ்மணி பா‌ராட்டு விழா







14/11/2014

TNTET : lnterim order GO71 and 5% relaxation at supreme court

B.Lit பட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆனவர்களுக்கு பதவி உயர்விற்கு பின்னர் பெறும் B.Edக்கு ஊக்க ஊதியம் இல்லை - தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியிலான தகவல்

நவம்பர் 14. குழந்தைகள் தினம்!



இந்தியா விடுதலைப்பெற்ற பின் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.ம்பர் 14 ம் தேதி நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அதே போல் குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.

பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்தார் பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்துவிட்டு சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் துணை நின்றார் இந்தியா சுதந்திரம் பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். அவர் குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் இவரது ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தின் போது அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் ஆனால் அச்சமயத்தில் ஆதரவற்ற அனாதை குழந்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை மாறி இந்த குழந்தைகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு இத்தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து கொண்டாடப்படும் கொண்டாட்டம்தான் நேரு நினைத்த உண்மையான குழந்தைகள் தின கொண்டாட்டமாக இருக்க முடியும்.

14.10.2014-குழந்தைகள் தின விழா கொண்டாட -இயக்குநர் உத்தரவு

44 வது சர்வேதேச தபால் துறையின் “கடிதம் எழுதும் போட்டி”பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க DEE அறிவுரை



13/11/2014

EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை தற்போது 2014-2015 கல்வியாண்டில் பயிலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் மட்டும் ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.


EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை

emis online website address :click here www.emis.tnschools.gov.in



1, முதலில் மேலே கண்ட படத்தின்படி லாக் இன் பக்கத்திற்கு வந்து உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்டு எண்டர் செய்து லாக் 
இன் செய்யவும்.


2, மேலே கண்ட படத்தின்படி ஸ்டூடண்ட் (சிறுவன் படம்) லோகோவை கிளிக் செய்யவும்.

3, தற்போது உங்களுக்கு மேலே உள்ள படம் தோன்றும். அதில் கிரியேட் சைல்டு டீடெய்ல்ஸ் என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.

4a, தற்போது மேலே உள்ள பக்கம் தோன்றும் (விளக்கம் தெரிவிக்க 4 ம் கலம்

( 4a,4b,4c,4d,4e) என பிரிக்கப்பட்டுள்ளது. 4a வில் தோன்றும் விபரங்களைக் கீழே காண்போம்.

முதலில் மாணவனின் பெயரை ஆங்கிலத்தில் பதிவிடவும். இனிசியல் அடுத்து வரவேண்டும்.
எ.கா : MAHALINGAM . S

4அ1 அடுத்து மாணவனின் பெயரை தமிழில் பதிவிட யுனிகோட் எழுதியில் எழுதுவது போல் டைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்தவும். அது கீழே உள்ள படம் போல் பட்டியலிடும் அதில் சரியானதை கிளிக் செய்யவும்.


4a, பிறந்த தேதி DD/MM/YYYY முறையில் பதிவிடவும்.

4a, ஆண் ,பெண் பதிவு செய்யவும்.

4a, வகுப்பு ஒன்று , இரண்டாம் வகுப்பு மட்டும் தோன்றும் அதில் சரியான வகுப்பை கிளிக் செய்யவும்.

4a, செக்சன் இருந்தால் குறிப்பிடவும் இல்லாவிட்டால் தேவை இல்லை.
எ.கா : 1 A

4a, மீடியம் தமிழ், அல்லது ஆங்கிலம் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

4a, குரூப் கோடு என்பது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குரியது. எனவே -------- என குறிக்கவும்.
4b, தேசியம் : இந்தியன், மற்றவை,விரும்பவில்லை , மதம் : இந்து , கிறிஸ்துவம்,முஸ்லீம் , விரும்பவில்லை. இவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.


4b, கம்யூனிட்டி இதில் எம்,பி.சி , எஸ்.சி அதர்ஸ், எஸ்.சி அருந்ததியர், பி.சி அதர்ஸ் ,பி.சி முஸ்லீம் , விரும்பவில்லை, இவற்றில் சரியான ஒன்றை பதிவிடவும்.

4b, கம்யூனிட்டி சர்டிபிகேட் அந்த மாணவனுக்கு தனியாக வருவாய் துறையால் வழங்கப்பட்டிருந்தால் (பெரும்பாலும் 3 ஆம் வகுப்புக்கு மேல்தான் வழங்கப்பட்டிருக்கும்) ஆம் என குறியிடவும். இங்கு 1,2 வகுப்பு என்பதால் இல்லை என்பதே சரியாக வரும்.

4b, ஜாதி இதில் கம்யூனிட்டி எதை தேர்வு செய்தோமோ அதைப்பொறுத்து பட்டியல் டிஸ்ப்ளே ஆகும் அதில் சரியானதை பதிவிடவும்.
குறிப்பு : சில கம்யூனீட்டிக்கு சப் கேஸ்ட் பட்டியல் வராமலிருக்கும், அதை EMIS தலைமையகத்துக்கு தெரிவித்து விட்டோம் ,சரி செய்து விடுவார்கள். எ.கா : எம்.பி.சி கம்யூனிட்டி க்கு சப்கேஸ்ட் பட்டியல் விடுபட்டிருக்கும். அது விரைவில் சரி செய்யப்படும். இப்போதைக்கு சப் கேஸ்ட் பாக்ஸில் --------- என்று குறியிட்டுவிட்டு அந்த மாணவனின் படிவத்தில் ( DATA CAPTURE FORM ) சப் கேஸ்ட் திருத்தப்படவேண்டும் என குறித்து வைக்கவும் (நினைவுக்காக).

4,b, தாய்மொழி சரியானதைத் தேர்வு செய்யவும்.

4b, தாயார் பெயர் ஆங்கிலத்தில் பதிவிடவும்.

4b, தாயார் வேலை விபரம் சரியானதை பதிவிடவும்.




4c, தாயார் மாத வருமானம் எவ்வளவோ அதைக்குறிப்பிடவும். ( வேலை விபரத்தில் ------ எனக்குறிபிட்டிருந்தால் கண்டிப்பாக மாத வருமானம் பகுதியில் 0 அல்லது -- எனப்பதியவும்)

4c, தந்தை/பாதுகாவலர் பெயர் குறிப்பிடவும்.

4c, தந்தை வேலை விபரம் , மாதவருமானம் குறிப்பிடவும் ( விளக்கம் தாயாருக்கு உள்ளதே இதற்கும் பொருந்தும்)

4c, மாற்று திறனாளி எனில் ஆம், இல்லாவிடில் இல்லை. என பதிவிடவும்.

4c, மாற்றுத் திறனாளி ஆம் எனில் புதிதாக ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் சரியானதை பதிவிடவும் (விளக்கம் அவனுடைய மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையில் அறியவும்)

4c, DISADVANTAGED மாணவன் என்றால் ஆம் , இல்லையேல் இல்லை என பதிவிடவும். ஆம் எனில் ஒரு பாக்ஸ் தோன்றும் அதில் எது சரியோ அதை பதிவிடவும் . மல்டி (பல) எனில் எ.கா : அனாதையான எய்ட்ஸ் நோய் மாணவன்) எனில் கண்ட்ரோல் கீயை அழுத்திக்கொண்டே மல்டி செலக்சன் செய்யவும்.

4c, STUDENT STATUS இதில் மூன்று விபரம் இருக்கும் (--------- இட தேவையில்லை ) முதலில் உள்ளது FORMAL SCHOOL , இது பெரும்பாலும் உள்ள மாணவனுக்கு உரியது. அடுத்து ENROLLED UNDER SPECIAL TRAINING , இது கட்டாய கல்வி சட்டப்படி அந்த பள்ளியில் அட்மிசன் ஆகி , HOME BASED ஆகவோ அல்லது SSA நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு உரியது. மூன்றாவது MAINSTREAMED UNDER SPECIAL TRAINING , இது கட்டாயக்கல்வி சட்டப்படி அட்மிசன் நம்பர் அந்த பள்ளியில் இருந்து , SPECIAL TRAINING ல் இருந்து நலம் பெற்று (இனி பயிற்சி தேவையில்லை) FORMAL SCHOOL ல் தொடர்ந்தால் மூன்றாவதை தேர்வு செய்யவும்(அரசு புள்ளி விபரத்திற்காகவே இந்த 3ம் பிரிவு)

4c, அட்ரஸ்,பின்கோடு , நேட்டிவ் டிஸ்டிரிக்ட் , சரியானதை தேர்வு செய்யவும்.

4d, போட்டோ ஆன்லைனில் பதிவிட BROWSE என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியின் உரிய இடத்தில் உள்ள அந்த மாணவனின் புகைப்படத்தை 200 X 200 RESOLUTION, 50 KB க்கு குறைவாக உள்ள படத்தை பதிவேற்றவும்.
அப்லோடு ஆகிவிட்டால் சிறிய கட்டமும் (இந்த பிழை விரைவில் சரி செய்யப்படும் ) , அப்லோடு ஆகாவிட்டால் மாணவனை வரைந்தது போல் படமும் காணப்படும். இந்த 2 படங்களை வைத்து போட்டோ அப்லோடு ஆனதை உறுதி செய்யவும்.

4d, இதில் ரெகுலர் ப்ரசன்ட் , லாங் ஆப்சன்ட் இந்த இரண்டில் ஒன்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் (நாட் அப்ளிகபுள் கிளிக் செய்யவேண்டாம்)

4d, போன் நம்பர் (இருந்தால் ) இரத்தவகை (இருந்தால் அல்லது பின்னர் அப்டேட் செய்யலாம்), உயரம் , எடை இவற்றில் சரியானதை பதிவிடவும்.

4d, இது அரசு உதவி பெறும் அல்லது சுயநிதி பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் (அரசு பள்ளிகள் --------- அல்லது நாட் அப்ளிகபுள் என பதிவிடவும்).

4d, அட்மிசன் நம்பர் பள்ளி சேர்க்கை பதிவேட்டில் இருந்து பார்த்து பதிவிடவும்.

4d,4e, பேங்க் , பேங்க் அக்கவுண்ட் நம்பர் , பேங்க் ஐஎப் எஸ் சி கோடு , இவை எவற்றையும் தொடவேண்டாம்.

4e, ஆதார் அட்டை தனியாக இந்த 1,2 வகுப்பு மாணவர்களுக்கு இருக்காது (கைரேகை சரியாக இல்லாமல் இருப்பதால வழங்கப்பட்டிருக்காது) எனவே இதையும் தொடவேண்டாம்)

4e, ஸ்போர்ட்ஸ் ப்ளேயர் என்பதில் இல்லை என்றே பதிவிடவும் (ஒன்றிய அளவில் 1,2 மாணவர் செல்ல வாய்ப்பு மிக மிக குறைவு)

4e, அகடமிக் இயர் 2014 - 2015 என பதிவிடவும்.

4e, பேமிலி டீட்டெய்லில் சகோதரன் ,சகோதரி விபரம் மட்டும் பதிவிடவும்.(add row என கிளிக் செய்து, எத்தனை தேவையோ அத்தனை row மட்டும், தேவையற்ற rows டெலிட் செய்யவும்)

நிறைவாக CREATE பட்டனை கிளிக் செய்யவும். உடனே அது பதிவாகி EMPTY(காலி) FORM அடுத்த பதிவிற்கு தயாராக தோன்றும். மேற்கண்ட முறைப்படி அடுத்த மாணவன் விபரம் பதிவிடலாம்..

சில டிப்ஸ்

1, சில வேளைகளில் கிரியேட் பட்டனை கிளிக் செய்தால் கிளிக் ஆகாமல் அதே மாணவனின் விபரம் தோன்றும். அப்போது விழிப்புடன் லாக் அவுட் செய்துவிட்டு, நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
முக்கியமாக சைல்ட் டீடெய்லில் அந்த மாணவனின் விபரம் ஏறியிருக்கிறதா என உறுதி செய்துவிட்டு ,ஏறாவிட்டால் மட்டுமே திரும்ப பதிவிட வேண்டும்(இல்லையேல் டபுள் என்ட்ரி ஆகிவிடும்)

பெஸ்ட் ஆப் லக்!! ஆங்கிலத்தை தமிழில் மொழி பெயர்க்காமல் அப்படியே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்(ஏனெனில் படிவம் ஆங்கிலத்தில் இருப்பதால் தான் சாரி!!!)

2, அடுத்து 404 ERROR , 503 ERROR , WEB SERVICE ERROR போன்ற ERROR MASSAGES வந்தால் நான் முன்பு குறிப்பிட்டது போல் நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.மீண்டும் மீண்டும் 

Internal Server Error வந்தால் லாக் அவுட் பண்ணிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து லாக் இன் செய்யவும்!!!

இப்பதிவு நீண்ட கட்டுரையாக தெரிந்தாலும் நேரடியாக 10 மாணவர்கள் விபரம் பதிவு செய்து விட்டால் நமக்கே எளிதாகிவிடும்.

இதில் மாற்றங்கள் பிழை இருந்தால் கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். அவ்வப்போது திருத்தி வெளியிடப்படும்.மேலே குறிப்பிடப்பட்ட படங்களைப்பார்த்து புரிந்து கொள்ளவும்.