திருக்குறள்

22/11/2013

8–வது வகுப்பு மாணவர்கள்: உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2 வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உதவித்தொகை வழங்குவதற்காக தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.

இந்த தேர்வை 7 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வாளர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tndge.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

எடை குறைந்த முட்டை கண்டறிய உத்தரவு

தமிழகத்தில் பள்ளி, அங்கன்வாடிகளில் இயங்கும் சத்துணவு கூடங்களுக்கு தினமும் சுமார் 60 லட்சம் முட்டை வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனத்தின் மூலமாக முட்டை டெண்டர் முறையில் பெறப்படுகிறது. சில மாவட்டங்களில் முட்டைகளின் எடை குறைவாக இருப்பதாக புகார் பெறப்பட்டுள்ளது. ஒரு முட்டை 49 கிராம் 
எடையில் இருக்கவேண்டும். இதை விட எடை அளவு குறைவாக இருந்தால் அவற்றை புல்லட் முட்டை என அழைக்கின்றனர். இந்த முட்டைகளை சத்துணவு கூடங்களுக்கு வினியோகம் செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து முட்டைகளும் ஒரே அளவு எடையில் இருக்கவேண்டும். முட்டைகளை முழுமையாக மாணவ மாணவிகளுக்கு வழங்கவேண்டும். பாதி முட்டை வழங்கினால் சம்பந்தப்பட்ட சத்துணவு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சத்துணவு கூடங்களில் உணவுகளின் அளவு குறைவாக இருக்ககூடாது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கள ஆய்வு செய்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்துணவு ஊழியர்கள் கூறுகையில், ‘‘ தரமற்ற கெட்டு போன முட்டைகளை தனியாக எடுத்து வைத்து விடுவோம். முட்டை வினியோகம் செய்பவர்கள் வாரம் ஒரு முறை அவற்றை சேகரித்து எடுத்து சென்று விடுவார்கள். முட்டைகளின் எடையை அளக்க எடை மெஷின் உள்ளது. 25 முதல் 35 கிராம் வரையுள்ள புல்லட் முட்டைகளை பெறுவதில்லை, ‘‘

பணியில் சேர்ந்து 5 ஆண்டு ஆன அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாது

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு வரும் டிச. 1ல் நடைபெற உள்ளது. தேர்வாணையத்தின் இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் வசதி முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.உரிய முறையில் விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி ஆணை யம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று மாலை இத்தேர்விற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் கூடுதல், குறைவான வயது, அரசு பணியாளர்களாக 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி மொத்தம் 1,0 55 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் இவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பணியில் சேர்ந்த தும் பிறதுறை மற்றும் உயர் பதவிகளுக்காக தொடர்ந்து தேர்வு எழுதும் நிலை தற்போது வழக்கத்தில் உள்ளது. இதனால் வேலை கிடைக்காதவர்களின் வாய்ப்பையும் இவர்கள் தட்டிப் பறிக்கும் நிலை இருந்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியில் சேர்ந்தாலும் 5 ஆண்டுகளுக்குள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதிக்கொள்ளும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் ஆசிரியர் காலியிட விபரங்கள் சேகரிப்பு

அரசு, நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது.

2013 நவ.,1ல், தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர் காலிப் பணியிடங்கள், 2013 நவ.,1 முதல் 2014 மே 31 வரை பணிநிறைவு காரணமாக ஏற்படும் காலி பணியிட விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதேபோல்,தொடக்க கல்வி அலுவலகங்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 2013 நவ.1 வரை காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், 2013 நவ.,1 முதல் 2015 மார்ச் 14 வரை, ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலி பணியிட பட்டியலை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டு - ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடக்கம் -அனுமதிக்கப் பட்ட தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 23.11.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு

20/11/2013

New rule lowers HRA exemption claim limit

The new rule is aimed at people claiming HRA exemption for living in their own house.

CHENNAI: If you are a salaried taxpayer claiming HRA (house rent allowance) deduction, watch out. The central government has lowered the exemption limit for reporting the rent received. Salaried taxpayers claiming HRA exemption and paying a rent of over Rs 1 lakh per year have to give landlord's PAN (permanent account number). Till now, if the total rent paid was less than Rs 15,000 a month there was no need to submit the landlord's PAN details. The new rule effectively lowers the rent limit from Rs 15,000 a month to Rs 8,333 per month for claiming HRA exemption without making any disclosures.

"Further, if annual rent paid by the employee exceeds Rs 1,00,000 per annum, it is mandatory for the employee to report PAN of the landlord to the employer," the Central Board of Direct Taxes said in its latest circular. "In case the landlord does not have a PAN, a declaration to this effect from the landlord along with the name and address of the landlord should be filed by the employee," it said.

Though incurring actual expenditure on payment of rent is a pre-requisite for claiming deduction under section 10(13A) of the I-Tax Act, it has been decided as an administrative measure that salaried employees drawing HRA up to Rs 3,000 per month will be exempted from production of rent receipt.

மாற்றுத் திறனாளிகள் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை தமிழக அரசு சலுகை

பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

ஓய்வூதியதாரர்கள் அனைவரும் உயிர்வாழ் சான்றிதழை (லைப் சர்டிபிகேட்) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்புநிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பு: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எஃப்) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் அனைவரும் உயிர்வாழ் சான்றிதழை டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கியின் கிளை மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த சான்றிதழில் தங்களின் ஓய்வூதிய ஆணை எண்ணையும்,செல்போன் எண்ணையும் அவசியம் குறிப்பிட வேண்டும். விதவை ஓய்வூதியதாரர்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்காதவர்களுக்கு 2014-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படும்.

2002ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 3% காலி பணியிடங்களை நிரப்ப - சிறப்பு தேர்வு நடத்த விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிக்கல்வி - 01.11.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

டிடோஜாக் கூட்டம் மாவட்ட ஆயுத்தக் கூட்டம் டிசம்பர் 4ஆம்தேதி மாலை 5.30 க்கு அந்தந்த மாவட்டத் தலைநகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

இன்றைய டிடோஜாக் கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது

இன்று காலை 11.30.க்கு தொடங்கிய டிட்டோஜாக் கூட்டம் இன்னும் தொடர்கிறது. இன்றைய ஆலோசனை கூட்டத்தில் மாவட்டந்தோறும் ஆயுத்தக் கூட்டங்கள் நடத்தும் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு சங்கத்திற்கு 4 மாவட்டங்கள் என பிரித்து மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்க முடிவு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆயுத்தக் கூட்டம் டிசம்பர் 4ஆம்தேதி மாலை 5.30 க்கு அந்தந்த மாவட்டத் தலைநகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

டிட்டோஜாக் தற்போதய நிலவரம்

இன்றைய முதல் அமர்வில் ஒவ்வொரு இயக்கமும் தலா 4 மாவட்டங்களை பிரித்துக்கொள்வது எனவும் எஞ்சியுள்ள மாவட்டங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிபோன்ற இயக்கஙகள் பங்கிட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டது..முதலில் மாவட்ட அமைப்பு ஏற்படுத்த முடிவு எட்டப்பட்டது.மதிய அமர்வு மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று. அதில் இரண்டு கோரிக்கைகளோடு இன்னும் சில கோரிக்கைகள் சேர்க்க கலந்தாலோசிக்கப்பட்டது அவை. மற்ற பணி நிலை ஆசிரியர்களை ஈர்ப்பதாக அமையும். மாவட்ட கூட்டங்களில் மாநில நிர்வாகிகள் பங்கேற்க முடிவாற்றப்பட்டது. மாவட்ட அமைப்பு கூட்டங்களை டிசம்பர் 4ந் தேதிமாலை 5.30 மணியளவில் மாவட்டத்தலைநகரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

டிட்டோஜேக் - ஏழு சங்கங்களுக்கும் மாவட்டங்கள் ஒதுக்கீடு

டிட்டோஜேக் கூட்ட முடிவின் படி போராட்ட ஆயத்த கூட்டங்கள் நடத்தவும்,தொடர்பணிக்காகவும் டிட்டோஜாக் மாவட்டதொடர்பாளர் நியமிக்கவும் ஏதுவாக சமபங்கீடாக 7 சங்கங்களும் இணைந்து தங்களுக்குண்டான மாவட்டங்களை ஒதுக்கீடு செய்து செயலாற்றுவதென முடிவாற்றப்பட்டது. ஒதுக்கீடு பெற்ற மாவட்டத்தின் சங்கத்தை சார்ந்த மாவட்டசெயலாளர் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் தொடர்பாளராக                     ( CO-ORDINATOR) செயல் படுவார்கள்.

மாவட்டப்பங்கீடு விவரம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
நாமக்கல்,ஈரோடு,திருப்பூர்,மதுரை,மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்கள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை,தர்மபுரி, இராமநாதபுரம்,பெரம்பலூர்,திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்கள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாகை,திருவாரூர்,கிருஷ்ணகிரி,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள்

தமிழக ஆசிரியர் கூட்டணி
அரியலூர்,திண்டுக்கல்,சேலம்,நீலகிரி,கோவை ஆகிய 5 மாவட்டங்கள்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தேனி,காஞ்சிபுரம்,விருதுநகர்,தூத்துகுடி, கன்யாகுமரி ஆகிய 5 மாவட்டங்கள்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தஞ்சாவூர்,திருச்சி,புதுக்கோட்டை,கரூர் ஆகிய 4 மாவட்டங்கள்

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்
திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள்


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்

குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில், உரிமை கோரலாம்" என பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா தெரிவித்தார்.

முந்தைய தி.மு.க., ஆட்சியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டது. எனினும், பெரும்பாலான அரசு பணிகளுக்கான கல்வி தகுதியை, தமிழ் வழியில் படிக்க முடியாத நிலைமை தான் உள்ளது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களில், பலர், தாங்கள் தமிழ் வழியில் படித்ததாக கூறி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.

மேலும், தமிழ் வழி கல்வித்தகுதி குறித்து, பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பாக, விண்ணப்பத்தாரர்கள் பலர், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் (டி.ஆர்.பி.,) வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழ் வழியிலான கல்வித்தகுதி எனில், "10ம் வகுப்பில் துவங்கி, பணிக்கு உரிய கல்வித்தகுதி வரை, அனைத்திலும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்" என முதலில், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், "குறிப்பிட்ட பணிக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும்" என, பின்னர் தெரிவித்தனர். எனினும், இந்த விவகாரத்தில், தற்போது வரை, குழப்பம் நிலவி வருகிறது.

இது குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா கூறியதாவது: தமிழ் வழியில் படித்தவர்கள், 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு வேலை பெறுவதற்கான வழி முறைகளில், தமிழக அரசு தெளிவான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனாலும், தேவையில்லாமல், இதில், பலரும் குழம்பி வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணி எனில், இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும். 10ம் வகுப்பையும், பிளஸ் 2 படிப்பையும், ஆங்கில வழியில் படித்திருந்தாலும், கவலையில்லை.

அதேபோல், முதுகலை ஆசிரியர் பணி எனில், குறிப்பிட்ட பாடத்தில், முதுகலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்; அவ்வளவு தான். பிளஸ் 2 கல்வித்தகுதி உடைய அரசு பணி எனில், பிளஸ் 2 படிப்பை, தமிழ் வழியில் படித்திருந்தாலே போதும். கல்லூரிகளில், ஆங்கில வழியில் சேர்ந்து படிக்கும் மாணவர், தேர்வை, தமிழ் வழியில் எழுதுகின்றனர். இதை வைத்து, "தமிழ் வழியில் படித்திருக்கிறேன்" என, கூறுகின்றனர். எந்த, மீடியத்தில் சேர்ந்திருக்கின்றனரோ, அது தான், கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

புதிய பள்ளிகளுக்கு கட்டட வசதி இல்லை: மத்திய அரசு நிதி வழங்காததால் தொய்வு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் சார்பில், நிலை உயர்த்தப்பட்ட, புதிய பள்ளிகளுக்கான கட்டட நிதியை இரு ஆண்டுகளாக, மத்திய அரசு வழங்கவில்லை; இதனால், பெரும்பாலான புதிய பள்ளிகளில், கட்டட வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதியுதவியுடன், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு கல்வித்தரத்தை மேம்படுத்த தமிழக அரசின் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககம் செயல்படுகிறது. இதில், ஒவ்வொரு, 5 கி.மீ., சுற்றளவில், ஒரு உயர்நிலைப் பள்ளி அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 2009-10ல், 200 நடுநிலைப் பள்ளிகள், 2010-11ல், 344 நடுநிலைப் பள்ளிகள், 2011-12ல், 710 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இதில் பாடவாரியாக குறைந்தது, ஐந்து ஆசிரியர் பணியிடங்கள், ஐந்து வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை, நூலகம் உள்ளிட்டவைக்காக ஒவ்வொரு பள்ளிக்கும், 58 லட்சம் ரூபாய் மத்திய அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிதி, 2009-10ல் நிலை உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின், நிலை உயர்த்தப்பட்ட 344 மற்றும் 710 பள்ளிகளுக்கு, கட்டட நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், நிதி வழங்கப்படவில்லை.

இதனால் தமிழகத்தில், புதிதாக நிலை உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகள், புதிய கட்டடம் ஏதுமின்றி, ஏற்கனவே இயங்கி வந்த, நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்தி வருகின்றன. வகுப்பறை கட்டட பற்றாக்குறையால், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் போது, எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளி, நிர்வாக ரீதியாகவும், கட்டட ரீதியாகவும் இரண்டாக பிரிக்கப்படும். அதில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் கட்டடம் உயர்நிலைப் பள்ளியில் இணைக்கப்படும். இவர்களுக்கான புதிய கட்டடம், திட்ட நிதியில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஏற்கனவே, நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 2009-10ல், நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும், ஒதுக்கீடு செய்த, கட்டட நிதியை, மத்திய அரசு வழங்கியுள்ளது. அதுவும், பற்றாக்குறையாக இருந்ததால், கட்டி முடிக்க முடியாத நிலையில், தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, அப்பணிகளை முடித்தது. ஆனால், பற்றாக்குறை நிதி கூட, அடுத்தடுத்த ஆண்டுகளில் வழங்கவில்லை. இதனால், 2010-11ம் ஆண்டிலிருந்து, நிலை உயர்த்தப்பட்ட, 1,054 புதிய பள்ளிகளில், புதிய கட்டட பணிகள் துவக்கப்படவில்லை.

ஏற்கனவே, நடுநிலைப் பள்ளியில் இருந்து பிரிக்கப்பட்ட, கட்டட வகுப்பறையை மட்டும் வைத்து, சமாளித்து வருகின்றனர். ஒரு வகுப்பறையில், இரண்டு வெவ்வேறு வகுப்பு மாணவர்களை அமர வைத்து, பாடம் எடுக்கும் நிலையும், பல பள்ளிகளில் உள்ளது. இதனால் அரசு பள்ளிகளின் மீதான நம்பிக்கை, மக்களிடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், இந்த கல்வியாண்டிலும், இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யுமா என, தெரியவில்லை.

மத்திய அரசிடம் இருந்து, நிதியை பெற்றுத் தருவதில், உயர் அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஆங்கிலச் சொல் "செல்பி


தன்னைத்தானே ஸ்மார்ட்போன்கள் மூலம் புகைப்படம் எடுத்து, அதை சமூக இணைய தளங்களில் தரவேற்றம் செய்த படங்களைக் குறிக்கும், " செல்பி" (selfie) என்ற சொல்லை ஆக்ஸ்போர்ட் அகராதிகள் இந்த ஆண்டின் வார்த்தையாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் செலவு


கல்வித் துறையில் அரசு 16 வகையான இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. இது போக மாணவர்கள் பற்றிய முழு விபரங்களை பதிவு செய்யும், தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களின் விபரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அந்த கார்டு மூலம் மாணவர் பற்றிய முழு விபரங்களையும் எளிதாக கண்டறிய முடியும்.தற்போது, இந்த பணிகளுக்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் விபரங்கள் 30.9.12ம் தேதி அடிப்படையில் சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய ஒரு மாணவருக்கு ரூ.15 வீதம் தலைமை ஆசிரியருக்கு செலவாகியுள்ளது. அதன்பின், மேலும் மாணவர்கள் விபரங்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு பள்ளிக்கும் குறுந்தகடு வழங்கப்பட்டு, 2 நாள் அவகாசத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான செலவையும் பள்ளி தலைமை ஆசிரியர்களே செய்தனர்.இந்நிலையில் 30.4.2013 நிலவரப்படி தகவல் தருமாறு கோரப்பட்டது. மேலும், மாணவர்களின் புகைப்படமும், ஆதார் எண்ணும் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் ஒரு மாணவருக்கு மேலும் ரூ.20 என்ற வீதம் தலைமை ஆசிரியர்கள் செலவு செய்துள்ளனர்.இது தவிர ஆரம்பப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 5ம் வகுப்பும், நடுநிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பும் முடித்த மாணவர்கள் உயர்கல்விக்காக வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த வகை மாணவர்களின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும் சேகரிப்பதில் மிகுந்த நடைமுறை சிக்கல்களை தலைமை ஆசிரியர்கள் சந்தித்துள்ளனர். சேகரிப்பதற்கான கால அவகாசமும் வழங்கப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்
.இந்த பணிகளை செய்வதற்கு கிராமப்பகுதியில் வசதி குறைவாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், புகைப்பட கலைஞர் மற்றும் கணினி படித்தவர்களை தேடி அலையும் நிலை உள்ளதால் கற்றல், கற்பித்தல் பணியும் பாதிக்கப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.அதேபோல பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் புத்தகப்பை, புத்தகங்கள், காலணி, சீருடை போன்ற பெரிய இலவச திட்டங்களை கல்வித்துறை செயல்படுத்தும் போது அவற்றை பள்ளிகளுக்கு எடுத்து செல்வதற்கான வழிச் செலவினங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.

விடுமுறை நாட்கள் - மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

பள்ளிக்கல்வி - இடைநிலைக்கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் RTE 2009 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத 499 ஆசிரிய நியமனங்களை உடனடியாக இரத்து செய்ய உத்தரவு

20 ஆண்டு பணியாற்றிய ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் தர முடியாது

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருளப்பன் உள்பட 129 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:நாங்கள் பள்ளி கல்வித்துறையில் கடந்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு இதுவரை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை.
இந்த சம்பளத்தை தர கோரி அரசுக்கு பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர்நீதிமன்றம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் வழக்கில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். அப்போது தமிழக அரசு சார்பாக அரசு சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி, மனுதாரர்கள் இடைநிலை ஆசிரியர்களாக பள்ளி கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலை பள்ளித்துறையின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடக்க பள்ளிகல்வித்துறையின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். இரண்டும் வேறு வேறு துறை எனவே மனுதாரர்களுக்கு இணையான சம்பளம் தர முடியாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு, உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் தர முடியாது என்று தீர்ப்பு கூறினார்.

PAY FIXATION, INCREMENT, JUNIOR GETTING MORE PAY, RULE AMENDMENT, ADVANCE INCREMENT, ADDITIONAL PAY, PAY ANOMALY ...போன்றவை பொருள்களில் தகவல்கள் கோர பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பொது தகவல் அலுவலர் பட்டியலினை வெளியிட்டுள்ளதை உங்களின் பார்வைக்கு தகவலுக்காக வெளியிடுகிறோம்.

18/11/2013

தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வருகிறது டயல் 104 சேவை

தொலைபேசி மூலம் வீட்டிலிருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெற தமிழகம் முழுவதும் 104 சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது.அவசர காலங்களில் உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 2008ல் அரசு 108 ஆம்புலன்ஸ் சேவையை அறிமுப்படுத்தியது.
இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்க 104 என்ற நம்பரில் இலவச மருத்துவ உதவி சேவையை அறிமுகப்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த 104 இலவச மருத்துவ உதவி சேவை மூலம் ஒருவர் வீட்டிலிருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெறலாம். அருகில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துதுவமனைகள், மருந்தகங்கள், சிடிஐ, எம்ஆர்ஐ, ஸகேன் சென்டர்கள் ஆகியவற்றின் விலாசம் மற்றும் தொடர்பு எண்களையும் தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளலாம். விபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு காயமடைந்தவருக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது போன்ற தகவல்களையும் பெறலாம். தொலைபேசி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு, நோய்க்கான மருந்துகளின் விவரங்கள் நோயாளிகளின் செல்போனுக்கு அனுப்பப்படும்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், Ô‘ 104 நம்பருக்கு அழைப்பவர்களின் பெயர் விவரங்கள் முதலில் பதிவு செய்யப்படும். பின்னர் அழைத்தவர்களின் பிரச்சனையை பொறுத்து அதற்கான மருத்துவர்களிடம் அழைப்பு இணைக்கப்படும். பிரச்சனைகளின் தீவிரத்தை அறிந்து அதற்கான ஆலோசனை வழங்கப்படும். இதற்கான முன்னோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.104 தொலைபேசி எண் மூலம் அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை, மருத்துவர்கள் உரிய நேரத்துக்கு வராமல் இருத்தல், போன்ற புகார்களையும் தரலாம். புகார்கள் நேரடியாக சுகாதாரத்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். புகார் பிரிவுக்காக 2 ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். 104 இலவச மருத்துவ உதவி சேவை அனைத்து மாவட்டங்களிலும் 2014 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறதுஎன்றார்.

கூட்டுக்கல்வி திட்டம் கல்வியை வணிகமாக்கும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அச்சம்

"மாதிரி பள்ளிகள் என்ற பெயரில், கொண்டு வரப்படும் கூட்டுக்கல்வி திட்டம், தனியாரை ஊக்கப்படுத்தி, கல்வியை வணிகமாக்கி விடும்" என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் அச்சம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்திலும், மாதிரி பள்ளிகளை தனியார் நடத்துவதற்கு, மத்திய அரசு அங்கீகரிக்கிறது. இந்த பள்ளிகளை யார் வேண்டுமானாலும் துவங்கலாம். பள்ளிகள் துவங்கக் கோரும் விண்ணப்பத்தில் "லாப நோக்கமற்ற" எனும் வார்த்தையை சேர்க்க வேண்டும். பள்ளி துவங்குவோருக்கு அடிப்படை தகுதி, ரூ.5 கோடி மற்றும் 3 ஏக்கர் நிலம் தான்.

நிலம் இல்லையெனில், மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும். இப்பள்ளிகளுக்கு, மத்திய அரசு 10 ஆண்டு மட்டுமே நிதியுதவி செய்யும். அதன் பின், மாநில அரசு நிதியளிக்க வேண்டும். இந்த பள்ளிகளின் கொள்கை முடிவில், மாநில அரசு தலையிட அதிகாரம் கிடையாது.

இந்தியா முழுவதும் துவங்கவிருக்கும் 2,500 மாதிரிப் பள்ளிகளில், 356 தமிழகத்தில் வரவிருக்கிறது. இதற்கு தமிழக அரசு மறுத்துள்ளதை வரவேற்கிறோம். மாதிரி பள்ளிகள் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

நவம்பர் 19ஆம் தேதி தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்க உத்தரவு

14/11/2013

How to use printing tool of students records -EMIS

அகஇ - தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான டிசம்பர் 2013 மாதத்திற்கான குறுவளமையப்பயிற்சி "சமூக சமநிலை நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல்" எனற தலைப்பில் 07.12.2013 அன்று நடைபெற உள்ளது.

இரட்டை பட்டம் சார்பான வழக்கு ஒரு தரப்பு வாதம் முடிந்தது, அரசுதரப்பு வாதங்கள் மற்றும் மூன்று வருட படிப்பு சார்பாக வாதம் எஞ்சியுள்ள நிலையில் வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று 12மணியளவில் முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மூத்தவழக்கறிஞ்சர்கள் பிரகாஷ் மற்றும் முத்துகுமாரசாமி வாதிட்டார்கள். அதை தொடர்ந்து மதிய உணவு இடைவெளிக்கு பிறகு அரசு தரப்பு வழக்கறிஞ்சர் வாதிட்டார், அப்பொழுது அரசின் நிலை குறித்து கேட்டறிந்த நீதியரசர்கள் வருகிற 25ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
அன்றைய தினம் எஞ்சிய வாதங்கள் அதாவது அரசுதரப்பு, அதற்கடுத்து மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

டிட்டோஜாக் இன்றைய நிகழ்வுகள்

1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.காமராஜ்.


2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் - திரு.ஜியாடோ ராபின்சன்.

3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - திரு.ரக்‌ஷித்.

4.தமிழக ஆசிரியர் கூட்டணி- திரு.வின்சென்ட் பால்ராஜ்.

5.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.மோசஸ் .

6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.தாஸ்.

7.தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் - திரு.சேகர் 
ஆகியோர் இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 ஆக மாற்றுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முறையாகத் தெரிவிக்கும் விதமாக

* முதலமைச்சர் அலுவலக முதன்மைச் செயலாளர்,
* கல்வி அமைச்சர் PA.
* நிதியமைச்சர் PA,
* தொடக்கக்கல்வி இயக்குனர்,
* பள்ளிக்கல்விதுறை செயலாளர்,
* தலைமைச் செயலாளர் PA. ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அவர்கள் அதை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்தனர். இது தொடர்பாக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து டிட்டோஜாக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை நவம்பர் 20-ல் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்
click here to view the application of the TAMILNADU ELEMANTARY TEACHERS ORGANISATIONS OF JOINT ACTION COUNCIL (TETOJAC)

13/11/2013

ஃபோட்டோவுடன் கூடிய பள்ளிமேலாண் தொகுப்பு படிவம் பூர்த்தி செய்வதற்கு மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை தவிர்க்க, பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு நிதியை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது


பள்ளி மேலாண் தொகுப்பு படிவம்: பராமரிப்பு நிதியை பயன்படுத்த கோரிக்கை.


தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 395 யூனியன்களில் 37 ஆயிரம் துவக்கப்பள்ளிகள், 9,438 நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கின்றனர்.மாணவர்களின் முழுவிபரங்களை அறிந்து கொள்ள வசதியாக, பெயர், பெற்றோர் விபரம், வகுப்பு, பிறந்த தேதி, ரத்தவகை, உடல் தகுதி, எடை, உயரம், முகவரி, பெற்றோர், பாதுகாவலர் மொபைல் எண் விபரங்களை அந்தந்த பள்ளிகள் பராமரிக்க வேண்டும் என, மாநில தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது.


அதேபோல், படிவம் தயாரித்து முறையாக பராமரிக்கவும் உத்தரவிட்டப்பட்டது. கம்ப்யூட்டர் மூலம் பள்ளி மேலாண் தொகுப்பு படிவம், ஃபோட்டோ இல்லாமல் பதிவு செய்ய அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மூலம் மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில், மாணவர்களின் ஃபோட்டோவுடன் பதிவு செய்ய வேண்டும் என, மாநில தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கான காலம் கடந்த 15ம் தேதியுடன் வடையும் நிலையில் உள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் எங்கிருந்தாலும் மாணவர்களின் முழு விபரங்களை உடனடியாக அறியவும் மாணவரின் பள்ளியில் படிக்கும் விபரம் மற்றும் இடைநிற்றல் விபரம் 100 சதவீதம் தெளிவாக அறியவும் உதவுகிறது.அதேபோல் ஒரு மாணவரின் பெயர் இரண்டு பள்ளியில் இருக்க முடியாது. மேலும், மாணவருக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் தமிழகத்தில் எந்த பள்ளியிலும் சேர்ந்து படிக்கலாம். அரசின் நலத்திட்டம், மாணவர்களுக்கு 100 சதவீதம் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.இந்த முறையில், அனைத்து விபரங்களும் பதிவு செய்வதால், விலையில்லா திட்டங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கு வசதியாக இருக்கும். மேலும், மாணவர்களுக்கு தனித்தனி அடையாள எண்ணும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களின் ஃபோட்டோ எடுக்கும் பள்ளி அந்தந்த பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது.அதற்கான தொகை, சம்பந்தப்பட்ட மாணவர்களிடமே வசூல் செய்ய ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதல் பருவத்தேர்வுக்கு மாணவர்களிடம் வசூல் செய்தது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஃபோட்டோ எடுப்பதற்கு 15 முதல் 20 ரூபாய் வரை செலவாகும். அதை மாணவர் தலையில் கட்டக்கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.
 ‌"ஃபோட்டோவுடன் கூடிய பள்ளி மேலாண் தொகுப்பு படிவம் தயாரிப்பதற்காக  அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செய்ய வேண்டிய நிலையில் பள்ளி தலைமையாசிரியர்களை மட்டுமே செய்ய பணிப்பது கல்விபணியை பாதிக்கும் ‌‌எனவே ‌இதற்கு பள்ளி மானியம் அல்லது பராமரிப்பு நிதியை பயன்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 16.11.2013 அன்றைய குறுவள மையப்பயிற்சிக்கான பயிற்சிக்கட்டகம்

SSA PROCEEDING TO MAKE NECEESARY ARRANGEMENTS FOR TLM / RP / TEA EXPENTIDURE FOR TEACHERS FROM BRC / CRC CONTIGENCY

கோர்ட் அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வி செயலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்.

ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்துவதாக, தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக்கல்வி செயலர் சபீதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்.

புதுக்கோட்டை ரங்கராஜன் தாக்கல் செய்த மனு: இடைநிலை ஆசிரியராக, 1986ல், பணியில் சேர்ந்தேன். பி.எட்., முடித்ததால், 2000ல், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, அரசு, பதவி உயர்வு வழங்கியது. தேர்வுநிலை ஆசிரியர்கள், கீழ்நிலை பணியில் இருந்தால், அவர்களுக்கு, சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கலாம் என, அரசு உத்தரவிட்டது.
அதன்படி, 2009ல், 65 பேருக்கு சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கி, அரசு உத்தரவிட்டது. அப்பட்டியலில், என் பெயர் இல்லை. எனக்கு பதவி உயர்வு வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தேன். மனுவை, பள்ளிக்கல்வி செயலர் பரிசீலித்து, எட்டு வாரங்களுக்குள், உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, 2011ல், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளிக்கல்வி செயலர் சபீதா, நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதி, நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. பள்ளிக்கல்வி செயலர் சபீதா மற்றும் மனுதாரர் தரப்பில், வக்கீல்மோகன்லால் ஆஜராகினர். அரசுத் தரப்பில், "நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி விட்டோம்' என, தெரிவிக்கப்பட்டதால், மனுவை முடிக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

இரட்டைப்பட்ட வழக்கு நாளையும் (14.11.2013) விசாரணை தொடர்கிறது

இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை மதியம் 2.30 முதல் 3.00 மணி வரை நடைபெற்றது. 
விசாரணை இருந்தாதால் மதியத்துக்குள் விசராணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அனால் பிற்பகலே விசராணைக்கு வந்தது.ஒரு வருட வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் தன்னுடைய வாதங்களை எடுத்துரைத்தார்.

மேலும் தலைமை நீதிபதி ஜார்கண்ட் மாநிலத்தில் பதவி ஏற்க உள்ளதால் அவர்களுக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெற இருந்ததால் நீதி மன்றம் விரைவாக முடிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை எஞ்சியுள்ளதால், இரட்டைப்பட்ட வழக்கு நாளையும் (13.11.2013) விசாரணை தொடர்கிறது.

12/11/2013

தொடக்கக்கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி , மாதிரி கால அட்டவணை மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கான கால அளவு வழிக்காட்டு அட்டவணையினை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியீடு | Elementary Dept 2013 -14 calendar

மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அஞ்சலக சேமிப்பு சேர்க்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர தொடக்கக்கல்வி இயக்ககம்உத்தரவு

மொகரம் பண்டிகை 14.11.2013 அன்றுக்கு பதிலாக 15.11.2013 மாற்றியமைக்கு அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு வெளியீடு

11/11/2013

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, வரும் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை உயர்வு

அதன்படி, இனி இளநிலை பட்டப்படிப்பு மாணவருக்கு ரூ 500, முதுகலைப் பட்டப் படிப்பு மாணவருக்கு ரூ.600ம், பி.எச்டி. மாணவருக்கு ரூ.800ம் வழங்கப்பட உள்ளது.

பிஎச்டி மாணவர்களுக்கு ரூ.1500 மற்றவர்களுக்கு ரூ.500ம் உயர்த்தப்படுகிறது. அதே போல் இதுவரை 450 மாணவர்களுக்கு வழநங்கப்பட்ட உதவித்தொகை, இனி 500 பேருக்கு வழங்கப்படும். இந்த உதவித்தொகையை பெற மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக இருக்க வேண்டும். மாணவர், 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும. மேலும், தற்போது முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.


இதற்கான விண்ணப்பத்தைப் பெற ரூ.10 அஞ்சல்தலை ஒட்டிய விலாசமிட்ட உறையை கௌரவச் செயலாளர், தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ராணி சீதை மன்றம், 6வது தளம், எண் 603, அண்ணா சாலை, சென்னை-600006 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டண விவரம்: மொபைல் எண் வாங்கும் பணி துவக்கம்.

மின் கட்டண விவரங்களை, நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க, அவர்களிடம் இருந்து, மொபைல் எண் வாங்கும் பணியை, மின்சார வாரியம் துவக்கிஉள்ளது.தமிழகத்தில், குடியிருப்பு, தொழிற்சாலை, விவசாயம் என, மொத்தம், 2.44 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.

20 நாட்களுக்குள்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம், மின் பயன்பாடு குறித்த விவரம், கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 நாட்களுக்குள் 
கட்டணத் தொகையை செலுத்த வேண்டும். மின் வாரிய கணக்கீட்டு பிரிவு ஊழியர்கள், மின் கட்டண தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்கு செல்லும் போது, நுகர்வோர் இல்லை என்றால், தகவல்பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் போவதால், அபராதத்துடன் செலுத்த வேண்டிய நிலைஏற்படுகிறது. இதையடுத்து, எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டண விவரத்தை, நுகர்வோருக்கு தெரியப்படுத்த மின்சார வாரியம் முடிவு செய்தது.

விரைவில் அறிமுகம்:

இத்திட்டத்திற்கான பணிகள், தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, மின் நுகர்வோரிடம் இருந்து, மொபைல் எண் வாங்கும் பணியை, மின்சார வாரியம் துவக்கியுள்ளது. இது குறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'அரசிடம் அனுமதி பெற்ற பின், எஸ்.எம்.எஸ், சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும்' என்றார்.

சுற்றறிக்கை தயார்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், தங்களின் மொபைல் போன் எண்ணை பதிவு செய்யும் மின் நுகர்வோருக்கு, மதிப்பு கூட்டு சேவையாக, எஸ்.எம்.எஸ்., மூலம், மின் கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்த கடைசி நாள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். ஆகையால், மின் நுகர்வோர் இவ்வசதியை பெற தங்களின் மொபைல் போன் எண்ணை பிரிவு அலுவலகங்களில், பதிவு செய்து பயன்அடையலாம்' என்ற சுற்றறிக்கை, நுகர்வோருக்கு தெரியப்படுத்தும் வகையில், மின் வாரியம் மூலம், அனைத்து பிரிவு அலுவலகங்களும் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.

மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு தேதி மாற்றம் - அரசு உத்தரவு

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

அனைத்து தொடக்க/நடுநிலை மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படத்தை 15.11.2013 க்குள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்காக (EMIS) கணினியில் பதிவேற்றம் முடிக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

பாரதியார் பல்கலைக்கழகம் - தொலைநிலையில் பி.எட். படிப்பு

கோவையில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகம் தனது தொலைநிலை பி.எட். படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்பு: பி.எட்.
காலம்: 2 ஆண்டுகள்
தகுதி :
குறைந்தது 2 வருட ஆசிரியப் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

முதுநிலை பொருளியல் மற்றும் வணிகவியல் படித்தவர்கள் இளநிலையிலும் அதே படிப்பை படித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை  
நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.


விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 28 பிப்ரவரி 2014.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 30 மார்ச் 2014.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தைக் காணவும்.

ஒரே பெண் குழந்தையா? UGC கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

"லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!' "தினமலர்' நாளிதழில், திங்கள்தோறும், வெளியாகவிருக்கும் சிறப்பு பகுதி

இது, "தினமலர்' நாளிதழில், திங்கள்தோறும், வெளியாகவிருக்கும் புதிய பகுதி."நான், இந்த தேசத்தை நேசிக்கிறேன்; எனது கடமையை செய்ய, ஒருபோதும் லஞ்சம் வாங்கமாட்டேன்...'என, வெளிப்படையாக அறிவித்து, கண்ணியத்துடன் கடமையாற்றி, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ விரும்பும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் விவரம், இப்பகுதியில் வெளியாகும். விருப்பமுள்ள அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, பெயர், வகிக்கும் பதவி, பணியாற்றும் துறை, தொலைபேசி எண் குறித்த விபரங்களை அனுப்பலாம்.

அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என்றாலே, "லஞ்சம் வாங்குபவர்கள்' என்ற எண்ணம், பெருவாரியான மக்களிடம் மேலோங்கியுள்ளது. குறிப்பிட்ட ஒரு சாராரின் லஞ்ச முறைகேடுகள், ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதும் கறை பூசச்செய்து விடுகிறது. இதனால், வெட்கித் தலைகுனியும் பலரும், "லஞ்சம் வாங்குவது போன்ற ஈனச் செயலில் நாங்கள் ஈடுபடுவதில்லை. ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதும் பழி சுமத்துவது நியாயமல்ல...' என, குமுறுகின்றனர். இவர்களின் மனக் காயத்துக்கு மருந்திடுவதே,

தேசிய கல்வி தினம்: அபுல் கலாம் ஆசாத்தை நினைவு கூர்வோம்

இந்தியாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், கல்வி துறை அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளையே, ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.

1888ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மௌலானா கைருதுனுக்கும், அலியாவுக்கு மகனாக பிறந்தார் மௌலான அபுல் கலாம் ஆசாத். அவரது கல்வியறிவை கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் கற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை கல்வி அமைச்சர் பதவியில் இருந்தார்.

சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.

வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார்.

"மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள்" என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத். அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார்.

தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951ல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐஐடி.,க்கள் அமைக்கப்பட்டன. 1955ல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை...ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்றார். நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழி நடத்திச் சென்றார்.

அனைத்து மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் ஆசாத். 14வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.

மெளலானா அபுல் கலாம் ஆசாத் தனது 69ம் வயதில் தில்லியில் காலமானார். இந்திய‌ நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான "பாரத ரத்னா" இவரது மறைவுக்கு பின் 1992ல் வழங்கப் பட்டது.!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்-எஸ்இ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதத்தில் பி.எட்-எஸ்இ., படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை அறிய www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

09/11/2013

திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்த வீரமா முனிவர் பிறந்த தினம் இன்று (1680)

வீரமாமுனிவர் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு


கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர் .கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர் அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு .

தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 23 நூல்களை தமிழில் இயற்றிய இவர்
கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார் . அந்நூலில் கதை மாந்தர்களின் பெயர்களை தமிழ்படுத்தினார். எடுத்துக்காட்டாக ஜோசப் என்பதை வளன் என்று மாற்றினார். இதற்கு மூல மொழியின் அர்த்தத்தை பயன்படுத்தினார் என்பது அவரின் உழைப்பை விளக்கும். திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார் .

தமிழில் செய்யுள்கள் மட்டுமே வழங்கிவந்த காலத்தில் உரைநடை காப்பியமாக இவர் பல நூல்களை இயற்றினார் .தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொன்னூல் விளக்கத்தை எழுதினார் .அதில் கொடுந்தமிழ் எனப்படும் பகுப்பளித்து பேச்சுத்தமிழை விவரிக்க முதல் முயற்சியை எடுத்தார் அவர் .தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார் .இவர் எண்ணற்ற தமிழ் சுவடிகளை தேடி அலைந்ததால் 'சுவடி தேடிய
சாமியார்' எனப்பெயர் பெற்றார் தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் சுமார் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.

பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போர்த்துக்கீய அகராதியை உருவாக்கினார்.தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல்
விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி "ஆ, ஏ" எனவும் , நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம்: சென்னை மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியின் மூலம் பிறப்பு – இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் இணைய தளத்தில் இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் விண்ணபித்து பெற்றுக் கொள்ளலாம்.இதுவரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டன. இனிமேல் தமிழிலும் கிடைக்கும் வகையில் மாநகராட்சி புதிய ஏற்பாட்டினை செய்துள்ளது.பிறப்பு – இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்யும் வசதியை ரிப்பன் மளிகையில் இன்று மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.www.chennaicorporation இணையதளத்தில் இன்று முதல் தமிழ் பிறப்பு – இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். இதில் பிறந்த மற்றும் இறந்த தேதி மற்றும் நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கும் எத்தனை மணிக்கு குழந்தை பிறந்தது என்பதை மருத்துவ அறிக்கையின் அடிப்படைப் பதிவு செய்து வழங்கப்படுகிறது.ஏற்கனவே, உள்ள பிறப்பு– இறப்பு சான்றிதழ்களில் தேதி மட்டுமே இடம் பெறும். நேரம் இடம் பெறாது.பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மேயர் சைதை துரைசாமி கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம்கபூர், துணை கமிஷனர் (சுகாதாரம்) பி.ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

9-11-2013 இன்று முதல் தானிய லட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ‌தொடக்கப்பள்ளிகளில்(1-5வகுப்புக்கு மட்டும்)வ‌ழங்கப்படுகிறது.இதனை மாவட்டஆட்சித்தலைவர் தொடங்கிவைத்தார்


இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் மாற்றம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து என 2 கோரிக்கைகளை முன் வைத்து போராட டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

தமிழகத்தின் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அமைப்பின்அனைத்து சங்கங்களின் மாநிலபொதுச்செயலர்கள்,தலைவர்கள்,பொருளாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட தொடக்கக்கல்வி இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழுவின்( TAMILNADU ELEMENTARY TEACHERS ORGANIZATION JOINT ACTION COMMITTY )பொதுக்குழு கூட்டம் 9/11/13 அன்று காலை 11.00 மணியளவில்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின்மாநிலஅலுவலகமான ஜே.எஸ்.ஆர்மாளிகையின் முதல் தள கூட்டஅரங்கில் கூடியது.


கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் சங்கங்கள்,

1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
4.தமிழக ஆசிரியர் கூட்டணி
5.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மற்றும்
7.தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் .
ஆகியன.

சுமார் இரண்டு மணிநேர கருத்துரையாடலுக்கு பின்னர்

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது
கடந்த கால நிகழ்வுகளை மறந்து ஒற்றுமையுடன்
"WE FOR SECONDARY GRADE TEACHERS" என்ற கோட்பாட்டின்படிஇடைநிலை ஆசிரியர் வாழ்வாதாரப்பிரச்சினையானஊதியக்குறைபாட்டினைக்களைய பாடுபடுவது என ஒருங்கிணைந்தகருத்துடன்
1.இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தினை மத்திய அரசுவழங்குவதுபோல
மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்


2.பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
என்ற இரு கோரிக்கைகள் மட்டும் டிட்டோ ஜாக் -ன் கோரிக்கைகளாகஅனைவராலும் ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது

அடுத்தகட்டமாக

முதலில் தொடக்கக்கல்வித்துறை சார்ந்த சங்கங்கள் இனைந்துபோராட முடிவெடுத்துள்ளதை அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்தஅமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் முரையாக தெரியப்படுத்தும்விதமாக வரும் 13/11/13 அன்று
மாண்புமிகு முதலமைச்சர்,
மாண்புமிகு நிதியமைச்சர்,
மாண்புமிகு கல்வியமைச்சர், ஆகியோர்களுக்கும்,
தமிழக அரசின் தலைமைச்செயலர்,
தமிழக அரசின் நிதிதுறைச் செயலர்,
தமிழக அரசின் கல்வித்துறைச் செயலர்,
மற்றும்
கல்வித்துறை சார்ந்த இயக்குனர்கள்
அனைவரையும்
7 சங்க பொறுப்பாளர்கள் ஒன்றினைந்து சந்தித்து கோரிக்கைமனுக்கள் அளிப்பது என்றும்,
வரும் 20/11/13 அன்று
அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும், மாவட்ட ,வட்டார அளவில்டிட்டோஜாக் கமிட்டிகள் அமைப்பது குறித்தும் பேச்சுநடத்த ஏதுவாகமாநில டிட்டோ ஜாக் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகமான “முத்துசாமிஅரங்கில்” நடைபெறும் என்றும் முடிவாற்றப்பட்டது,

அது சமயம் அனைத்து சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்களின்(தலைவர்,செயலர்,பொருளர்) பட்டியல் கொண்டுவரக்கேட்டுக்கொள்ளப்பட்டது

மேலும் டிட்டோ ஜாக் மாநில அமைப்பின் தொடர்பு அலுவலகமாக

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அலுவலகமே செயலாற்ற அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.

பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க உத்தரவு

எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய் பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய் இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

அதில், சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தேன். மாவட்ட ஆட்சியரும் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு 2009-ஆம் ஆண்டு அரசுக்கு பரிந்துரைத்தார். ஆனால், சமையலர் அல்லது சமையல் உதவியாளர் பணியில் தான் நியமிக்க முடியும், சத்துணவு அமைப்பாளராக நியமிக்க முடியாது எனக் கூறி சமூக நலத்துறை எனது கோரிக்கையை மறுத்து விட்டது. அதனால், கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்து வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இறந்த அரசு ஊழியர்களின் பதவியைப் பொறுத்து அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கூடாது. வாரிசுகளின் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதனால், மனுதாரின் தகுதி அடிப்பைடையில் 8 வாரங்களுக்குள் அவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

01.01.2006க்கு பிறகு தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தும் ஆசிரியர்களின் தர ஊதியம் ரூ.2800/- என்பது தொடருமேயானால் அவர்களுக்கு 01.01.2011 முதல் தனி ஊதியம் ரூ.750/- பெற தகுதியுண்டு என பள்ளிக்கல்வி மண்டல கணக்கு அலுவலரின் தெளிவுரை

பள்ளிக்கல்வி- EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும் முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலப் பதிவு மூப்புக்குப் பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாமா என அரசு பரிசீலித்து வருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.

இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மட்டுமே மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் 14,496 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளில் 12,596 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆயிரம் காலிப்பணியிடங்களும் உள்ளன.

கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் காலிப்பணியிடங்களை விட குறைவான ஆசிரியர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால் நியமன முறை அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

என்ன வழக்கு? இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு இரண்டிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

மனுவை ஏற்று இந்த வழக்கை முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு காலாவதியாகியுள்ளது.

எனவே, இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வெயிட்டேஜ் மதிப்பெண் முறை (அரசாணை எண் 252) மூலம் நியமனம் செய்யலாமா அல்லது மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யலாமா என தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!

"கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: முதல்வர் உத்தரவுப்படி, பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்களின் வருகை பதிவை அதிகாரிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டம் கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதலில் திருச்சி மாவட்டத்தில் செப்., 5ல் முதல்வர் துவக்கி வைத்தார்.

இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 56,573 பள்ளிகள், 5.63 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரம், இணையதளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து விவரமும் ஒருங்கிணைக்கப்பட்ட பின், எஸ்.எம்.எஸ்., திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்

06/11/2013

மாணவர் வருகை EMIS - SMARTCARD மூலம் பதிவு செய்தல் எப்படி? (படம்) TN government plans to issue smart cards to school students with the first lot to be issued to students of high schools and higher secondary schools.


Across the state of Tamil Nadu, there are 2,234 govt. high schools, 543 aided high schools, 2,388 govt. higher secondary schools and 1,044 aided higher secondary schools with about 60 lakhs students studying. Details of the students and their family, family income, marks, activities and interest on sports are kept as records in schools. Now, the government of Tamil Nadu plans to keep a track of these minute details through smart cards.
Earlier, students of central board schools were provided smart cards. Every, student of TN state board schools will be provided a smart card with a unique code number. This code number with details of the student (as mentioned above) will be included in an amalgamated computer server at the state.
After obtaining this card, the student should register his/her arrival at the classroom through swiping machine that will be provided.
As a result of this, clear details about every student and teacher can be accessed from any corner of the state. If a student needs to change schools, he/she need not obtain certificates from old school since these smart cards will play its role.
In India, Gujarat is a pioneer of smart card practice in government schools.
Smart Card will not only carry academic details but also medical records of the student. Every student will be subjected to periodical medical check-up and its details to be incorporated in this card.
With help of this card, it will also be possible to identify the 'student dropouts'. At first stage, students of high schools and higher secondary schools will be provided with this card. After reviewing the success, this project will be expanded to middle and elementary level schools of the state also.
Last month, an expert committee from Tamil Nadu went to Gujarat to make a detailed analysis of this project. Within few weeks, an inauguration programme for this project would be held in Tamil Nadu.
Educationists feel, "If this project is implemented, we can resolve various issues, prevailing in education department".

தொலைபேசி கட்டணத்தை மொபைல் மூலம் செலுத்தலாம்.

தொலைபேசி பில் கட்டணம் செலுத்த இனி மக்கள் கியூவில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் அல்லது ஐ_பேட் மூலமாகவே இனி கட்டணத்தைசெலுத்தலாம் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தொலைபேசி பில் கட்டணம் செலுத்த இனி கம்யூட்டர் உதவியை நாட வேண்டியதில்லை.வரிசையில் நின்று கட்டுவதோ தேவையில்லை. ஸ்மார்ட் மொபைல் அல்லது ஐ-பாட் ஆகியவை பயன்பாட்டில் இருந்தாலே போதுமானது. இவற்றின் மூலமாக தங்களது தொலைபேசி கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில்''மை பி.எஸ்.என்.எல். ஆப்'எனும் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஸ்மார்ட் மொபைல் கொண்டோ அல்லது ஐ_பாடில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்துகொள்ள வேண்டும். இதனை ''ஆன்ட்ராய்டு அப் ஸ்டோர்ஸ்'' அல்லது ''விண்டோஸ் அப் ஸ்டோர்ஸ்'' எனும்இணைய தளங்களிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்க் மற்றும் பி.எஸ்.என்.எல்._பிராண்ட் ட்ரஸ்ட் கார்டு மூலமாகவும் தங்களது பில் தொகையை செலுத்தலாம். இதில் மொபைல் போன் ரீ-சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களை ஆக்டிவேட் செய்யும் வசதியும் உள்ளன. பணம் செலுத்திய பின்னர் அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்தில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் புதிதாக 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்


தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. அரசு - தனியார் கூட்டுமுயற்சியுடன் இது நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படும்.




இதற்காக தனியார் புதிய பள்ளிகளை தொடங்கலாம். அல்லது தற்போதைய பள்ளிகளையே மாதிரி பள்ளிகளாக மாற்றிக்கொள்ளலாம். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிக்காக மொத்த செலவில் 25 சதவீத தொகையை மத்திய அரசு மானியமாக ஆண்டுதோறும் வழங்கும்.
அரசு ஒதுக்கீடு
பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களில் 40% பேர் அரசால் ஸ்பான்சர் செய்யப்படுவர். எஞ்சிய 60% பேர் பள்ளி நிர்வாகத்தால் சேர்க்கப்படுவார்கள். அரசு ஸ்பான்சர் செய்யும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே பள்ளிக்கு செலுத்திவிடும். நிர்வாகப் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே நிர்ணயித்துக்கொள்ளலாம். ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம்தான் சம்பளம் வழங்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட இந்த மாதிரிப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் போல் செயல்படும். இப்பள்ளிகளில் நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அரசு ஸ்பான்சர் செய்யும் மாணவர்களுக்கும் இது பொருந்தும். மாதிரிப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் 25 சதவீத மானிய உதவி 10 ஆண்டுகளுக்கு கிடைக்கும். அதன்பிறகு அந்தந்த மாநில அரசுகள் உதவிசெய்ய வேண்டும்.
356 பள்ளிகள்
நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ள 2,500 மாதிரிப் பள்ளிகளில் தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்காக கல்வியில் பின்தங்கிய பகுதி அல்லாத இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்னையில் எழும்பூர், அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரியமேடு, ராயபுரம், திருவல்லிக்கேணி, தி.நகர், பெரம்பூர் ஆகிய 9 இடங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
மாதிரிப் பள்ளிகள் தொடங்க விரும்பும் அறக்கட்டளைகள், சங்கங்கள், தனியார் நிர்வாகங்கள் போன்றோரிடம் இருந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கெனவே விண்ணப்பங்களை பெற்றுவிட்டது. மாதிரிப் பள்ளிகள் தொடங்குவதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தகவல் அனுப்பியிருக்கிறது. இதுவரை தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மாதிரிப் பள்ளிகள் தொடங்க நிச்சயம் அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
அரசு பள்ளிகள் பாதிக்கும்
சாதாரணமாகவே தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களின் பெற்றோர் படையெடுப்பது வழக்கம். ஆங்கில மோகம்தான் அதற்கு காரணம். தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பக்கமும் பல பெற்றோரின் பார்வை திரும்பியிருக்கிறது. இந்த நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான வசதியுடன் இலவசமாக படிக்கக்கூடிய வாய்ப்புடன் மாதிரி பள்ளிகள் வரும்பட்சத்தில் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை இதுபோன்ற பள்ளிகளில் சேர்க்கவே ஆசைப்படுவார்கள். இதனால். அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
வேண்டுகோள்
மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படுவது குறித்து பொதுப் பள்ளிமுறைக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “மத்திய அரசு-தனியார் கூட்டுமுயற்சியில் உருவாகும் மாதிரிப் பள்ளிகள் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக தனது ஆட்சேபணையை தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்திற்காக தனியாருக்கு மத்திய அரசு வழங்கும் 25 சதவீத மானியத்தொகையை தமிழக அரசு கேட்டுப்பெறவேண்டும். அதை இங்குள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக ்கொள்ளலாம். மாதிரி பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், கல்வி முற்றிலும் வணிகமயமாகிவிடும்” என்று குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில், தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வருங்கால வைப்பு நிதி முறைகேடு: கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர், "சஸ்பெண்ட்'

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்தது தொடர்பாக, கூடுதல் உதவி தொடக்கல்வி அலுவலர் உட்பட, மூன்று பேர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூரில், தலைமை ஆசிரியை ஒருவர், தன் மகள் திருமணத்திற்காக , தன் வருங்கால வைப்பு நிதியிலிருந்து, 4.35 லட்சம் ரூபாயை எடுக்க விண்ணப்பித்தார். பணம் கிடைப்பது தாமதமானது. 

விசாரித்ததில், அவரது பணம், கருவூலத்திலிருந்து வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. விசாரணையில், வேறு நபரின் பெயரில் அப்பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.

துறை ரீதியான விசாரணையில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி பணம், முறைகேடாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணக்கில் வரவு வைக்கப்படாமல், வேறு நபரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, மீண்டும் கடன் கேட்ட ஆசிரியரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இம்மோசடி தொடர்பாக, நேற்று முன்தினம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சுகுமார், அலுவலக கண்காணிப்பாளர் சத்யவாணிமுத்து, எழுத்தர் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 6½ லட்சம் பேரில் வெறும் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி!


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், தமிழகத்தில் தேர்வு எழுதிய 6½ லட்சம் பேரில் வெறும் 27 ஆயிரம் பேர் மட்டுமே 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் தாள் தேர்வை 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர் எழுதினர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். அந்த வகையில் தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேர் எழுதினர்.

முதல் தாள் எழுதிய 2,62,187 பேரில் ஆண்கள் 63,717 பேர், பெண்கள் 1,98,470 பேர். இவர்களில் 12,596 பேர், 60 சதவீதம் மதிப்பெண்க்கு மேல் (தேர்ச்சிக்கான மதிப்பெண்) பெற்றுள்ளனர்.

முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 2,908 பேர் (4.56 சதவீதம்) ஆண்கள்; 9,688 பேர் (4.88 சதவீதம்) பெண்கள்.

முதல் தாளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடம் ஆகிய மொழிக்கான தேர்வு நடத்தப்பட்டன. தமிழ் தேர்வில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 990 பேர் (ஆண்கள் 62,190, பெண்கள் 1,96,800) பங்கு பெற்றனர். அவர்களில் 12,433 பேர் (ஆண்கள் 2,823, பெண்கள் 9,610) 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாம் தாளை எழுதிய 4 லட்சத்து 311 பேரில், 1,15,954 பேர் ஆண்கள், 2,84,357 பேர் பெண்கள். இவர்களில் 14,496 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்துள்ள 14,496 பேரில், 4,835 பேர் ஆண்கள், 9,661 பேர் பெண்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் 3.62 ஆகும். ஆண்கள் 4.16 சதவீதம், பெண்கள் 3.39 சதவீதம் பேர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில், 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவீதம் 4.21 ஆகும்.

புதுச்சேரிக்கான முதல் மற்றும் இரண்டாம் தாள்களை 7 ஆயிரத்து 991 பேர் எழுதினர். முதல் தாளை 3,857 பேரும் (642 ஆண்கள், 3,215 பெண்கள்), இரண்டாம் தாளை 4,134 பேரும் (875 ஆண்கள், 3,259 பெண்கள்) எழுதினர்.

முதல் தாளை எழுதிய 3,857 பேரில் 181 பேர், 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்த 181 பேரில் 28 பேர் ஆண்கள் (4.36 சதவீதம்), 153 பேர் பெண்கள் (4.75 சதவீதம்). அந்த வகையில் முதல் தாளை எழுதியவர்களில் மொத்தம் 4.69 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இரண்டாம் தாளை எழுதிய 4,134 பேரில், 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் ஆண்கள் (0.08 சதவீதம்), 51 பேர் பெண்கள் (1.56 சதவீதம்). இரண்டாம் தாளை எழுதியவர்களில் 1.40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.எப். : விண்ணப்பம் கிடைத்த 10 நாட்களில் தீர்வு!'



வருங்கால வைப்பு நிதி கேட்டு விண்ணப்பித்த 10 நாட்களில் தீர்வு காணப்படும் என்று சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில், உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி உரிமை கோரும் படிவங்கள் முழுமையான வடிவில் பெறப்பட்ட நாளில் இருந்து 5 நாட்களுக்குள் பெரும்பாலும் தீர்வு செய்யப்படுகிறது. மீதம் உள்ள படிவங்களுக்கான கணக்கு தொகைகளும் 10 நாட்களில் தீர்வு செய்யப்படுகிறது.

முழுமையான வடிவில் பெறப்பட்ட எந்த ஒரு படிவங்களும் 20 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படாமல் இருப்பதில்லை. 20 நாட்களுக்கும் மேலாக தீர்வு செய்யப்படாத படிவங்கள் இருக்குமானால், உறுப்பினர்கள் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியை அணுகி விவரத்தை பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், வருங்கால வைப்பு நிதி ஆணையர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்து ஓய்வூதியதாரர்களும் உயிர்வாழ் சான்றிதழையும், விதவை ஓய்வூதியதாரர்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்றிதழையும் நவம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கும் சான்றிதழ்களில் தங்கள் ஓய்வூதிய ஆணை எண் மற்றும் செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்குதல் நிறுத்தி வைக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

9 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன் போட்ட


சென்னை: சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 9 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன் போட்டி நடைபெறவுள்ளது.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்ல, இந்திய வீரர் ஆனந்துக்கும், நார்வே வீரர் கார்ல்சனுக்கும் இடையே சென்னையில் செஸ் போட்டி நடைபெற உள்ளது. இதனைக்கொண்டாடும் வகையில் அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் சார்பில் தமிழ்நாடு செஸ் கழகம் 9 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன் போட்டிகளை நடத்த உள்ளது.

சென்னை, ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 350 சிறுவர், சிறுமியர் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் வெற்றிபெறும் முதல் இருவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பர்.

சிறுவர் மற்றும் சிறுமியர் பிரிவில் முதல் 12 இடங்களை வெல்லும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 20 ஆயிரமும், மொத்த பரிசுத் தொகையாக ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஆனந்த், கார்ல்சன் ஆகியோரின் உலக சாம்பியன்ஷிப் போட்டியைக் காண வசதியாக போட்டிகளின் நேரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


05/11/2013

EMIS & SMART CARD திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பயன்கள் / EMIS - Offline இல் உள்ளீடு செய்வது எப்படி

1.மாணவர்களின் விவரத்தை கல்வித்துறை அதிகாரிகள் எங்கிருந்தாலும் உடனடியாக அறியலாம்.

2. மாணவன் பள்ளியில் பயிலும் விவரம் மற்றும் இடைநிற்றல் விவரம் 100% தெளிவாக அறியலாம்.
3. ஒரு மாணவனுக்கு இரண்டு பள்ளிகளில் பெயர் இருக்க முடியாது. அப்படி இருப்பின் உடனே கண்டு பிடித்து விடலாம். ஆகவே தலைமை ஆசிரியர்கள் 100% சரியான விவரங்களை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும்.
4. மாணவன் மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் தமிழ்நாட்டின் எந்த பள்ளியிலும் சேர்ந்து பயிலலாம்.
5. அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சேருகிறதா என்பதை 100% உறுதி செய்ய முடியும்.
6. மாணவர்களின் கல்வி முன்னேற்ற நிலை, உடல் நிலை, தனித்திறன் முதலியவற்றை எளிதாக கண்டறியலாம்.
7. ஆசிரியர்கள் அடிக்கடி புள்ளிவிவரங்கள் அளிக்க வேண்டியதில்லை. ஆனால் தங்கள் பள்ளியில் ஏற்படும் மாணவர் சேர்க்கை மற்றும் நீக்கல் விவரங்களை உடனடியாக தங்கள் பள்ளி EMIS இல் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மாநில அதிகாரிகள் மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்களுக்கு தேவையான தகவல்களை பெற முடியும். தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி EMIS Passwordஐ இரகசியமாக வைத்திருப்பது நல்லது. 
8. EMIS உள்ளீடு முடிந்தவுடன் மாணவர்களுக்கு SMART CARD வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் மாணவர்களின் வருகை, பதிவு செய்யப்படலாம். குஜராத்தில் SMARTCARD மூலம் தான் மாணவர்களின் வருகை கண்காணிக்க படுவதாக சொல்லப்படுகிறது.
9. SMARTCARD மாணவர்களின் அடையாள அட்டையாக செயல்படும் இதில் மாணவரின் அடையாள எண் பதிவு செய்யப் பட்டிருக்கும். இந்த எண்ணை கணினியில் உள்ளீடு செய்வதன் மூலம் மாணவரின் கல்வி முன்னேற்ற நிலை உட்பட அனைத்து விவரங்களையும் பெறமுடியும்.
10. EMIS இல், மாணவர் தொலைபேசி எண் பதிவு செய்யப் பட்டுள்ளதால் எந்த கல்வி அதிகாரியும் மாணவருடன் அல்லது மாணவரின் பெற்றோருடன் தொடர்பு கொள்ள முடியும்.

EMIS - Offline இல் உள்ளீடு செய்வது எப்படி என்பதை காண

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "இ-வித்யா" திட்டம் மாநிலத்தில் முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
மாணவர்கள் "ஆப்சென்ட்" ஆனாலோ, தாமதமாக வந்தாலோ, பெற்றோர்களின் மொபைல் போனுக்குபள்ளியில் இருந்து தகவல் பறக்கும்.மேலும், ரேங்க் கார்டு வழங்குவது, பெற்றோர் சந்திப்பு கூட்டம், விடுமுறை போன்ற விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.சில பள்ளிகளில் மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள், தினசரி தேர்வில் எடுத்த மார்க் போன்ற தகவல்களும் எஸ்.எம். எஸ்., மூலம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் "கட்" அடித்தால் உடனடியாக தகவல் தெரிந்து கண்டிக்க முடியும் என்பதால், இத்திட்டம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டத்தை அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, "இ-வித்யா" என்றபெயரில் இந்த திட்டம் முதன் முறையாக ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.முதற்கட்டமாக ஏனாம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசு ஆங்கில உயர்நிலைப்பள்ளி, கிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், "இ-வித்யா" செயல்பாட்டுக்கு வருகிறது.மத்திய அரசு திட்டமான சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள, "இ-வித்யா" திட்டப் பணிகளில் ஏனாமில் உள்ள தேசிய தகவல் மைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இரு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல் போன் உள்ளிட்ட விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இரு பள்ளிகளை தொடர்ந்து ஏனாமில் உள்ள மற்ற பள்ளிகளில் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.இதைதொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், "இ-வித்யா" திட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

அகஇ - 2013-14ம் ஆண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவிடும் பொருட்டு அரசு / நகராட்சி / நலத்துறை / உதவி பெறும் தொ / ந.நி / உ.நி / மே.நி பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் பயிலும் மாணவர்களிடம் அடைவுத் தேர்வு மேற்கொள்ள முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு


Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Provisional Mark List for Paper I


Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Provisional Mark List for Paper II Click here...


TRB CUT OFF IN DETAILS

The Cutoff given by TRB is follows:
+2
Above 90%-10 mark
80 to 90 %- 8 mark
70 to 80% - 6 mark
60 to 70%- 4 mark
50 to 60% - 2 mark

UG
Above 70% - 15 mark
50 to 70% - 12 mark
Below 50%- 10 mark

B.Ed
Above 70% - 15 mark
50 to 70% - 12 mark

T.E.T
Above 90% - 60 mark
80 to 90% - 54 mark
70 to 80%- 48 mark
60 to 70%- 42 mark

Those who are getting 100 marks in tet and getting 90 in tet coming under the same category that is 42 marks out of 60

but by actual calculation it comes a lot of difference so convert actual marks into 60 don;t give slab for tet. 

For eg
90/150 in tet converted into 60 means they will get 36 marks 

100/150 in tet converted into 60 means they will get 40 marks

see the difference. getting marks in tet is very difficult. 

also see the weightage marks. earlier days it is very difficult to get the marks. now-a-days see most of the b.ed., candidates (private) colleges getting more than 70% then how can we competate with them. 
So at least consider the cutoff for experience and employment seniority instead of plus two marks. 
or give weightage for higher qualification (PG or m.phil)