திருக்குறள்

06/11/2013

9 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன் போட்ட


சென்னை: சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 9 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன் போட்டி நடைபெறவுள்ளது.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்ல, இந்திய வீரர் ஆனந்துக்கும், நார்வே வீரர் கார்ல்சனுக்கும் இடையே சென்னையில் செஸ் போட்டி நடைபெற உள்ளது. இதனைக்கொண்டாடும் வகையில் அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் சார்பில் தமிழ்நாடு செஸ் கழகம் 9 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன் போட்டிகளை நடத்த உள்ளது.

சென்னை, ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 350 சிறுவர், சிறுமியர் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் வெற்றிபெறும் முதல் இருவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பர்.

சிறுவர் மற்றும் சிறுமியர் பிரிவில் முதல் 12 இடங்களை வெல்லும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 20 ஆயிரமும், மொத்த பரிசுத் தொகையாக ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஆனந்த், கார்ல்சன் ஆகியோரின் உலக சாம்பியன்ஷிப் போட்டியைக் காண வசதியாக போட்டிகளின் நேரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment