திருக்குறள்

14/11/2013

டிட்டோஜாக் இன்றைய நிகழ்வுகள்

1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.காமராஜ்.


2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் - திரு.ஜியாடோ ராபின்சன்.

3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - திரு.ரக்‌ஷித்.

4.தமிழக ஆசிரியர் கூட்டணி- திரு.வின்சென்ட் பால்ராஜ்.

5.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.மோசஸ் .

6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.தாஸ்.

7.தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் - திரு.சேகர் 
ஆகியோர் இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 ஆக மாற்றுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முறையாகத் தெரிவிக்கும் விதமாக

* முதலமைச்சர் அலுவலக முதன்மைச் செயலாளர்,
* கல்வி அமைச்சர் PA.
* நிதியமைச்சர் PA,
* தொடக்கக்கல்வி இயக்குனர்,
* பள்ளிக்கல்விதுறை செயலாளர்,
* தலைமைச் செயலாளர் PA. ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அவர்கள் அதை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்தனர். இது தொடர்பாக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து டிட்டோஜாக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை நவம்பர் 20-ல் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்
click here to view the application of the TAMILNADU ELEMANTARY TEACHERS ORGANISATIONS OF JOINT ACTION COUNCIL (TETOJAC)

No comments:

Post a Comment