திருக்குறள்

31/08/2014

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறது.

இந்த ஆண்டு தற்போது 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் பரிந்துரை செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே விரைவில் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும்.
இதன் மூலம் தற்போது 100 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி இனி 107 சதவீதமாக இருக்கும். இதன் மூலம் மத்திய அரசில் பணியாற்றும் 30 லட்சம் ஊழியர்களும், 50 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் அடைவார்கள்.
ஜூலை 1-ந்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக 10 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. தற்போது 7 சதவீதம் உயர்கிறது.
விரைவில் அமைச்சரவை கூடி ஒப்புதல் வழங்கியதும் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும்.

மாநில அரசு ஊழியர்களுக்கும் விரைவில் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, மாநில அரசும் அதேபோல செய்யும். எனவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment