திருக்குறள்

13/12/2014

தமிழ்நாட்டில் ஜெயலலிதா நடவடிக்கையால் கல்வித்துறையில் வளர்ச்சி: ஜெயவர்த்தன் எம்.பி பேச்சு

மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி கல்வித்துறை வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவை விலையில்லா புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள், பள்ளி புத்தக பைகள், சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி ஆகும். புரட்சித்தலைவியால் எடுக்கப்பட்ட இந்த முற்போக்கான நடவடிக்கை பெற்றோரின் நிதி சுமையைக் குறைத்துள்ளது. மேலும் பள்ளியிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைத்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு போதியளவு நிதி வழங்க வேண்டும். பிரதமரிடம் புரட்சித்தலைவியால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், ராஷ்டிரிய மத்திய மிக் சிஷ்கா அபிநயன் என்ற திட்டத்தின் படி இந்திய அரசு 2010–2011 மற்றும் 2011–2012 ஆண்டுகளுக்காக மொத்த கோரிக்கைகளில் நிலுவையில் உள்ள ரூ.599.62 கோடி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின்படி ரூ.25.13 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டியுள்ளது. பட்டியல் சாதி மாணவர்களுக்காக மெட்ரிக்குலேசன் படிப்பு உதவித்தொகைக்காக 2013–2014 ஆண்டிற்கான நிலுவை ரூ.451.41 கோடி உள்ளடங்கலாக ரூ.1104.20 கோடி ரூபாய் மத்திய அரசால் வழங்கப்பட வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment