திருக்குறள்

25/06/2013

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைசட்டம்:செயல்படுத்தாத தனியார் பள்ளிகள்

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி சட்டம் 2009-ன் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அணை எண்:60 பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள தேதி 01.14.2013 இன் படி நுழைவு வகுப்பில் சேர்வதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கான (குடும்பதலைவரின் ஆண்டு வருமானம் ரூ 2 இலட்சம் மற்றும் பெற்றோர் இல்லாதோர், மாற்றுத்திறனாளிகள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்,துப்புரவு பணியாளர்கள் குழந்தைகள், எஸ்.சி,எஸ்.டி,எம்.பி.சி,மற்றும் பி.சி ஆகிய பிரிவுகளை சேர்ந்த குழந்தைகளுக்கு)25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி தனியார் மெட்ரிகுலேசன்பள்ளிகளில் நுழைவு வகுப்புகளான எல்.கே.ஜி மற்றும் ஆறாம் வகுப்புகள் துவங்கும் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இத்தகுதி உடைய பெற்றோர்கள் தங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 1 கீ.மீ அல்லது 3 கீ.மீ தொலைவிற்குள் உள்ள பள்ளிகளில் சேர்த்திடலாம் என்றும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன்,15 தேதி என்றும். முடிவுகள் ஜூன்,20 தேதி வெளியிடப்படும் என்று முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருந்தது.இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஒவ்வெரு மாவட்டத்திற்கும் சுமார் 1000 த்தில் இருந்து 5000 பேர் வரையிலான விண்ணப்பங்கள் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை சம்பந்த பட்ட பள்ளிக்கு அனுப்பபட்டு ஜூன்,20 தேதி முடிவு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனை கண்ட பெற்றோர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் அருகில் இருக்கும் மெட்ரிகுலேஷேன் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்த்து விடலாம் என்ற கனவில் கிராமநிர்வாக அலுவலகம்,வருவாய் ஆய்வாளர்,வட்டாட்சியர் ஆகியோரிடம் சென்று பலநாட்கள் காத்திருந்து சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை வாங்கி பூர்த்தி செய்து மாவட்டமுதன்மை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கஷ்டப்பட்டு ஒரு வழியாக சமர்பித்தனர்.அவ்வாறு விண்ணப்பம் செய்யப்பட்ட பெற்றோர்கள் பள்ளியில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தனர்.ஆனால் காத்திருந்ததுதான் மிச்சம் அறிவிப்பு வரவில்லை.இது சம்மந்தமாக முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கேட்டால்,பள்ளிகளில் இருந்து தான் அறிவிப்பு வரும் என்று கூறி ஒதுங்கிகொண்டார்கள்.பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டால் பல்வேறு காரணங்களை கூறி மாணவர்களின் பெற்றோர்களை விரட்டி விடுவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றனர்.மேலும் சில பள்ளிகள் பிரின்சிபல் இல்லை தலைவர் இல்லை என்று கூறி மாணவர்களின் பெற்றோர்களை அலைக்கழித்து வருகின்றனர்.மேலும் சில பள்ளிகள் பேருக்கு அவர்களுக்கு தெரிந்த மாணவர்கள் சிலரை மட்டும் சேர்த்து கொண்டு,மற்ற மாணவர்களை அலைக்கழித்து வருகின்றனர்.இது சம்மந்தமாக மாவட்ட முதன்மைகல்வி அலுவலகத்திடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்தால்.இது சம்மந்தமாக முதன்மை கல்வி அலுவலகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.இச்சட்டத்தால் எந்த பெற்றோரும் பயனடைய போவதில்லை மாறாக மாணவர்களின் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.அரசு இச்சட்டம் அறிவித்தால் மட்டும் போதாது.இச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமானால் ஒரு பள்ளியின் மாணவர் சேர்கையில் இந்தனை சதவீதம் ஏழை மாணவர்கள் கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்றும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் மாணவர்களை தேர்ந்தெடுத்து பள்ளிக்கு எழுத்து பூர்வமான அறிவிப்பு கொடுத்து மாணவர்களே சேர்க்கவேண்டும்.அதனை கண்காணிக்க வேண்டும்.மேலும் அப்படி செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்.மேலும் தற்போது செயல்படும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நகர் மற்றும் கிராமத்தில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அப்படி இருக்கும் போது 1 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டர் என்பதை மாற்றி 7 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பள்ளிகள் என்று அறிவித்தால் பல ஏழை மாணவர்கள் கல்வியறிவு பெறுவார்கள்.

9ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உடற்கல்வி தனிப்பாடமாக சேர்ப்பு

முப்பருவ பாடத்திட்ட முறையின் கீழ் 9ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உடற்கல்வியும் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதால் விளையாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உடற்கல்வி இயக்குனர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9ம் வகுப்புக்கும் முப்பருவ பாடத்திட்ட முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உடற்கல்வி பாடத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது 6 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடதிட்ட முறையின்படி தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் பிற பாடங்களை போன்று உடற்கல்வியும் 6 வது பாடமாக சேர்க்கப்பட்டுள்ள தால் அதற்கேற்ற முறையில் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்படுதல் வேண்டும். ஆண்டு தொடக்கத்தில் பள்ளி மாணவர்கள், மாணவிகளை உட்புற விளையா ட்டு போட்டிகள் நடத்துவதற்கு ஏற்றவாறு அணி அணியாக பிரித்து விளையாட்டுகளை தேர்வு செய்து முதல் பருவம் முதல் மூன்றாம் பருவம் வரை வெவ்வேறு கால கட்டங்களில் மாலை நேரங்களில் போட்டிகளை நடத்தி ஆண்டு இறுதியில் 'பள்ளி விளையாட்டுவிழா' நடத்தி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட வேண்டும் என்று கல்வித்துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள்,பதவி உயர்வு வாய்ப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்14 மற்றும் 16 ன்படி சம உரிமை மற்றும் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாககருதப்படுகிறது. இக்குறைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

1. பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிமூப்பு மற்றும் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் / வட்டாரவளமைய மேற்பார்வையாளர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் /மாவட்ட கல்வி அலுவலர் / மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்,முதன்மைக் கல்வி அலுவலர் / இனை இயக்குனர், இயக்குனர் போன்ற பலஉயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.ஆனால், அதே கல்வித் தகுதியுடன் ஒரே தேர்வு முறையில்தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கக் கல்வித் துறையில் பணியில் சேரும்பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பானது நடுநிலைப் பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணியிடமான உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பதவியுடன் கட்டுப்படுத்தப்படுகிறது.மேலும், பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் நேரடியாக உதவித் தொடக்கக்கல்வி அலுவலராக பணியில் சேருபவர்களுக்கு அவர்கள் பணிக்காலம்முழுவதும் பதவி உயர்வு வாய்ப்பு என்பது இல்லவே இல்லை.

2. தற்பொழுது சுமார் 125 – 150 மாணவர்கள் இருந்தாலே உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் நிலையில் அந்த ஒரு பள்ளியை மட்டும்நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி நிலையவிட, சுமார் 75 - 100 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின்கண்காணிப்பு, ஆய்வு மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் நிர்வாகப்பொருப்பை வகிக்கும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் பதவி நிலை கீழே வைக்கப்பட்டுள்ளது.

3. தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6 – 8 வகுப்புகளுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் வட்டார வள மையங்களின் மேற்பார்வையாளர்பதவிக்கு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைக்கொண்டே நிரப்பப்படுகிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின்எண்ணிக்கை பெரும்பான்மையாக உள்ள நிலையில், மேற்பார்வையாளர்பதவிக்கு தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம்வாய்ப்பளிக்கப் படாதது ஏன் ?.

4. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியானது தொடக்கக்கல்வித் துறைக்கு தொடர்பில்லாத உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கே அளிக்கப்படுகிறது.இப்பணி விதிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறை ஒன்றாகஇருந்தபொழுது வகுக்கப்பட்டது போல தோன்றுகிறது. தற்பொழுதுதொடக்கக் கல்விக்கென தனி இயக்ககம் உள்ள நிலையில், தொடக்கக்கல்வித்துறையிலும் பள்ளிக்கல்விதுறைப் போன்று தகுதிவாய்ந்தபட்டதாரி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் / நடுநிலைப்பள்ளிதலைமையாசிரியர் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் என பலர்உள்ளனர். இந்த நிலையில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்பதவியினை தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கே ஒதுக்கீடு செய்து, மேற்பத்தி 2 – ன்படி உயர்நிலைப் பள்ளிதலைமையாசிரியர் நிலைக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்விஅலுவலர்கள் மற்றும் மேற்பத்தி 3 – ன்படி தொடக்கக் கல்வித்துறையிலிருந்து பதவியுயர்வுப் பெற்ற வட்டார வளமையமேற்பார்வையாளர்களைக் கொண்டும் ஏன் நிரப்பக்கூடாது?.

5. பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை உதவி ஆசிரியர்களாகபணியில் சேருபவர்கள் B.Lit., & B.Ed. உயர்கல்வி தகுதி பெற்றதும்பணிமூப்பின் படி தமிழாசிரியர்களாகவும் பின்னர் உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். இவர்களதுமொத்தப்பணிக் காலத்தில் B.Lit., B.Ed. & M.A., உயர்கல்வி தகுதிகளுக்குஇரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் (4 ஊதிய உயர்வுகள்)பெற்றுவிடுகின்றனர். ஆனால், தொடக்கக் கல்வித் துறையில்இடைநிலை உதவி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்து தமிழாசிரியர்தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் B.Ed. தேர்ச்சிப் பெற்றால் ஊக்க ஊதியம் மறுக்கப்படுகிறது. இவர்களைவிட உயர் பதவியிலுள்ளஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் B.Lit., B.Ed. & M.A., தேர்ச்சிக்கு 2ஊக்க ஊதிய உயர்வுகளையும் பெற்றுவிடுகின்ற நிலையில் – கீழ் பதவிநிலையிலுள்ள நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இரண்டாவதுஊக்க ஊதியம் பெறுவதற்கு M.Ed. தகுதி பெற வேண்டியுள்ளது. இது எந்தவகையில் நியாயம் ?. இவை அனைத்திற்கும் காரணமாக, தொடக்கக்கல்வித் துறையில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் நிர்வாகப்பொருப்பில் உள்ள உயரதிகாரிகள் அனைவரும் பள்ளிக்கல்வித்துறையை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின்பாரபட்சமான நடவடிக்கை எனவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்14 மற்றும் 16 ன்படி சம உரிமை மற்றும் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கருதப்படுகிறது. இக்குறைகளை களைய தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?....

திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது - அரசு இணை செயலாளர்

01.04.2013 க்கு முன்னர் நிதியுதவி பள்ளியில் பணிபுரிந்து, பணி இடைமுறிவு இன்றி தற்போது அரசு பள்ளியில் பணியில் சேர்ந்து இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடரலாம்.

24.06.2013 - தலைமையாசிரியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்

24/06/2013

பிஎப் நிதிக்கு இந்த ஆண்டும் 8.5 சதவீத வட்டிதான்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) 2012,13ம் நிதியாண்டில் தந்த 8.5 சதவீத வட்டியையே நடப்பு ஆண்டிலும் தனது 5 கோடி சந்தாதாரர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎப்ஓ தனது சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டியை நிர்ணயித்து வழங்கி வருகிறது. 2011,12ம் நிதியாண்டில் 8.25 சதவீதமாக இருந்த வட்டியை கடந்த ஆண்டில் 8.5 சதவீதமாக உயர்த்தியது.

இந்நிலையில் இபிஎப்ஓ அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நடப்பு ஆண்டில் ஊழியர்கள், நிறுவனங்கள் மூலம் எவ்வளவு பிஎப் நிதி கிடைக்கும், அதற்கு எவ்வளவு வட்டியை வழங்கினால் சரியானதாக இருக்கும் என்று ஏற்கனவே கணக்கிடப்பட்டது. கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் வட்டி விகிதத்தை மாற்றாமல் 8.5 சதவீத வட்டி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறுவது போல வட்டி வழங்குவது குறித்த திட்டம் நிதி மற்றும் முதலீட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தலைமையிலான மத்திய அறங்காவலர் குழுவின் இறுதி பரிசீலனைக்கு செல்லும். அந்த குழு அனுமதி அளித்தால் மத்திய நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்படும். மத்திய பிஎப் ஆணையர் கே.கே.ஜாலன் தலைமையிலான நிதி மற்றும் முதலீட்டு குழு கூட்டம் அடுத்த மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி-நீதிமன்றங்கள் வழக்கை உடனுக்குடன் முடிக்கவும், அவமதிப்பு வழக்கை தவிர்க்கவும் புதிய மென்பொருள் தொடக்கக்கல்வித் துறையில் நடைமுறைப்படுத்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 25.06.2013 அன்று ஒரு நாள் பயிற்சி குறித்த உத்தரவு

கோவா பள்ளிகளில் இனி புத்தகங்கள் இருக்காது""இ-நோட்புக்" மட்டுமே

தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், தங்களது எடையை விட, அதிக எடையுள்ள புத்தக பையை சுமந்து செல்கின்றனர். ஆனால் கோவாவில் அடுத்த மாதத்தில் இருந்து இப்படிப்பட்ட குழந்தைகளை பார்க்க முடியாது. ஏனெனில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகங்களுக்கு பதிலாக, "இ-நோட்புக்" வழங்கப்பட உள்ளது.

இது குறித்து கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் தெரிவித்ததாவது: "5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் கட்டமாக 50 ஆயிரம் "இ-நோட்புக்" வழங்கப்படுகிறது. இதன் மூலம் புத்தக சுமையிலிருந்து மாணவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இந்த "இ-நோட்புக்" கில் அனைத்து பாடப் புத்தகங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டு இறுதிக்குள், கோவாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் "வை-ஃபை" இன்டர்நெட் வசதி செய்யப்படும், இதன் மூலம் மாணவர்கள் "இ-நோட்புக்" மூலம் வகுப்பறையிலேயே இன்டர்நெட் பயன்படுத்தலாம்.

இப்புதிய திட்டத்தினால் கரும்பலகை மற்றும் நோட்டுப் புத்தகத்தில் இருந்து தள்ளி வைக்கப்படுகின்றனர் என அர்த்தம் இல்லை. மாணவர்கள் நோட்டுப் புத்தகத்தையும் பயன்படுத்தலாம், கரும்பலகையிலும் பாடங்கள் வழங்கப்படும். வீடுகளில் நடத்திய பாடங்களை திருப்பி பார்ப்பதற்கு "இ-நோட்புக்" பயன்படும்" என்றார்.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (24.06.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடக்கக் கல்வி-சர்வதேச அளவில் பதக்கம் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் - 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடல்திறன் போட்டிகள் நடத்தி, உடற்திறன் திறமை அறிக்கை அட்டை செயல்படுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இல்லாவிட்டால் “கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்" மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

‘‘குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது, கல்வி ஆண்டின் இடையில்ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்’’ என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாகொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலைபார்த்து வருபவர் ராவணன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்தமனு வருமாறு:– வருகிற 30.6.2013 அன்று நான், ஓய்வு பெற உள்ளேன். கல்விஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியரை கல்வி ஆண்டு இறுதி வரைபணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி, இந்த கல்விஆண்டின்(2013–2014) இறுதி வரை பணியாற்ற என்னை அனுமதிக்க வேண்டும் என்றுபள்ளித் தலைமை ஆசிரியர் தஞ்சாவூர் முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்புதல்கேட்டார். ஆனால், ஒப்புதல் கோரிய மனு மீது முதன்மை கல்வி அதிகாரி எந்தவிதஉத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, உரிய உத்தரவு பிறப்பிக்க முதன்மை கல்விஅதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்குவந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.விசுவலிங்கம் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், “தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைஇருக்கிறது. அரசின் விதி இருக்கும் போது அதை செயல்படுத்த தஞ்சாவூர் மாவட்டகல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வது இல்லை. இதுபோன்ற ஒருவழக்கில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவுபிறப்பித்துள்ளது“ என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:– ‘‘மனுதாரர் மீது குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அவரது உடல்நிலை நன்றாகஇருப்பதற்கான மருத்துவ சான்றிதழை, கல்வி அதிகாரிக்கு தலைமை ஆசிரியர்அனுப்பி வைத்துள்ளார். குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்றஅனுமதி மறுக்கக்கூடாது. எனவே, மனுதாரர் இந்த கல்வி ஆண்டின்(2013–2014)இறுதி வரை பணியாற்ற தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனுமதிக்கவேண்டும்.’’ இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு / மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தல்- அனுமதியும்,தடையின்மைச் சான்றும் பெற்று கொள்ள வேண்டும்

"ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப் பணிக்கான தகுதிபெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால்அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெறவேண்டும். பிற மாநில அரசின் பணிக்கும் மத்திய அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்கத்துறைத்தலைவரிடம்/ அரசிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்" என்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்காற்றுச் சட்டம் கூறுகிறது. NET, SLET, TNTET, TNPSC தேர்வுகள், TRB தேர்வு, துறைத் தேர்வு போன்ற தேர்வுகள் எழுத அலுவலகத்தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். உயர்கல்வித் தகுதியை வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள நியமன அதிகாரியிடம் அனுமதியும்,தடையின்மைச் சான்றும் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வேறுபணிக்காகத் தெரிவு செய்யப்படும் நேர்வில், தற்போதுள்ள பணியிலிருந்துவிடுவிப்புப் பெறவும் முந்தைய பணிக்காலத்தைப் புதிய பணிக்காலத்துடன் சேர்த்துக்கொள்ளவும் சிக்கல் ஏற்படாமல் சுலபமாக அமையும்.

தொடக்கக் கல்வித் துறை:
அலுவலகத் தலைவர்- உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்.
நியமன அலுவலர்- மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்.
துறைத் தலைவர்- இயக்குநர்.

பள்ளிக் கல்வித் துறை:
அலுவலகத் தலைவர்- தலைமையாசிரியர்.
நியமன அலுவலர்- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
துறைத் தலைவர்- இயக்குநர்.

குறிப்பு:

ஒரு பணியிலிருந்து வேறு பணிக்கு நியமனம் மூலம் செல்கையில்முந்தைய பணிக்காலம் மட்டுமே இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள்,ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றின் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும். முந்தைய சம்பளம் எந்த விதத்திலும் கருதப்படமாட்டா. அதாவதுபுதிய பணியில் நுழைவுநிலை ஊதியம் மட்டுமே வழங்கப்படும். ஊக்க ஊதியஉயர்வுக்குத் தகுதி இருப்பின் பெறலாம். ஒத்த பணியெனில் தேர்வுநிலை,சிறப்புநிலைக்குத் தகுதியுள்ள முந்தைய பணிக்காலம் எடுத்துக் கொள்ளப்படும்.பழைய பணியிலிருந்து விடுவிப்பானவுடன் மீள்உரிமை துண்டிக்கப்படும். அதாவதுஒருவேளை புதிய பணியைத் தொடர்ச்சியாகச் செய்ய இயலாத நேர்வில்எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பழைய பணிக்கு வந்து சேர எவ்வித வாய்ப்பும்வழங்கப்படாது. மீண்டும் போட்டித் தேர்வில் தேர்ச்சி அல்லது வேலைவாய்ப்பகப்பதிவு சீனியாரிட்டிப்படி தான் நியமனம் பெற முடியும் என்பதைக் கவனத்தில்கொள்ளவும்.