திருக்குறள்

25/06/2013

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைசட்டம்:செயல்படுத்தாத தனியார் பள்ளிகள்

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி சட்டம் 2009-ன் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அணை எண்:60 பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள தேதி 01.14.2013 இன் படி நுழைவு வகுப்பில் சேர்வதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கான (குடும்பதலைவரின் ஆண்டு வருமானம் ரூ 2 இலட்சம் மற்றும் பெற்றோர் இல்லாதோர், மாற்றுத்திறனாளிகள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்,துப்புரவு பணியாளர்கள் குழந்தைகள், எஸ்.சி,எஸ்.டி,எம்.பி.சி,மற்றும் பி.சி ஆகிய பிரிவுகளை சேர்ந்த குழந்தைகளுக்கு)25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி தனியார் மெட்ரிகுலேசன்பள்ளிகளில் நுழைவு வகுப்புகளான எல்.கே.ஜி மற்றும் ஆறாம் வகுப்புகள் துவங்கும் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இத்தகுதி உடைய பெற்றோர்கள் தங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 1 கீ.மீ அல்லது 3 கீ.மீ தொலைவிற்குள் உள்ள பள்ளிகளில் சேர்த்திடலாம் என்றும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன்,15 தேதி என்றும். முடிவுகள் ஜூன்,20 தேதி வெளியிடப்படும் என்று முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருந்தது.இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஒவ்வெரு மாவட்டத்திற்கும் சுமார் 1000 த்தில் இருந்து 5000 பேர் வரையிலான விண்ணப்பங்கள் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை சம்பந்த பட்ட பள்ளிக்கு அனுப்பபட்டு ஜூன்,20 தேதி முடிவு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனை கண்ட பெற்றோர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் அருகில் இருக்கும் மெட்ரிகுலேஷேன் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்த்து விடலாம் என்ற கனவில் கிராமநிர்வாக அலுவலகம்,வருவாய் ஆய்வாளர்,வட்டாட்சியர் ஆகியோரிடம் சென்று பலநாட்கள் காத்திருந்து சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை வாங்கி பூர்த்தி செய்து மாவட்டமுதன்மை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கஷ்டப்பட்டு ஒரு வழியாக சமர்பித்தனர்.அவ்வாறு விண்ணப்பம் செய்யப்பட்ட பெற்றோர்கள் பள்ளியில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தனர்.ஆனால் காத்திருந்ததுதான் மிச்சம் அறிவிப்பு வரவில்லை.இது சம்மந்தமாக முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கேட்டால்,பள்ளிகளில் இருந்து தான் அறிவிப்பு வரும் என்று கூறி ஒதுங்கிகொண்டார்கள்.பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டால் பல்வேறு காரணங்களை கூறி மாணவர்களின் பெற்றோர்களை விரட்டி விடுவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றனர்.மேலும் சில பள்ளிகள் பிரின்சிபல் இல்லை தலைவர் இல்லை என்று கூறி மாணவர்களின் பெற்றோர்களை அலைக்கழித்து வருகின்றனர்.மேலும் சில பள்ளிகள் பேருக்கு அவர்களுக்கு தெரிந்த மாணவர்கள் சிலரை மட்டும் சேர்த்து கொண்டு,மற்ற மாணவர்களை அலைக்கழித்து வருகின்றனர்.இது சம்மந்தமாக மாவட்ட முதன்மைகல்வி அலுவலகத்திடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்தால்.இது சம்மந்தமாக முதன்மை கல்வி அலுவலகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.இச்சட்டத்தால் எந்த பெற்றோரும் பயனடைய போவதில்லை மாறாக மாணவர்களின் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.அரசு இச்சட்டம் அறிவித்தால் மட்டும் போதாது.இச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமானால் ஒரு பள்ளியின் மாணவர் சேர்கையில் இந்தனை சதவீதம் ஏழை மாணவர்கள் கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்றும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் மாணவர்களை தேர்ந்தெடுத்து பள்ளிக்கு எழுத்து பூர்வமான அறிவிப்பு கொடுத்து மாணவர்களே சேர்க்கவேண்டும்.அதனை கண்காணிக்க வேண்டும்.மேலும் அப்படி செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்.மேலும் தற்போது செயல்படும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நகர் மற்றும் கிராமத்தில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அப்படி இருக்கும் போது 1 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டர் என்பதை மாற்றி 7 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பள்ளிகள் என்று அறிவித்தால் பல ஏழை மாணவர்கள் கல்வியறிவு பெறுவார்கள்.

No comments:

Post a Comment