திருக்குறள்

30/06/2013

ஒரே மாணவருக்கு இரண்டு "டிசி'கள் கிடைக்கும் வாய்ப்பு பெற்றோர் ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்தாலே பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற முறையால் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டவும் வாய்ப்புள்ளது.

"மாணவர்களின் வயதிற்கு ஏற்ப கல்வி முறை திட்டத்தால், ஒரே மாணவருக்கு இரண்டு "டிசி'கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்,'' என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.மத்திய அரசின் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும், இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில், ஒரு மாணவரின் வயதிற்கு ஏற்ப, தகுந்த வகுப்புகளில் சேர்க்கலாம், என உத்தரவிடப்பட்டது. இதையொட்டி, ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில், 8ம் வகுப்பு வரை சேர்க்கும்போதும் (மாற்றுத்திறனாளி மாணவருக்கு 16 வயது வரை) அந்த மாணவரிடம் "டிசி' (மாற்றுச் சான்று) கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது .மாணவரின் பிறந்த தேதி தொடர்பாக, அவரது பெற்றோர் ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்தாலே பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனால், சம்மந்தப்பட்ட அந்த மாணவர் இடைநின்றவரா, எந்த பள்ளியில் படித்தவர், பெற்றோர் குறிப்பிடும் வயது சரியானதா என்ற விவரம் தெரியாமல் போக வாய்ப்புள்ளது. மேலும், பழைய மற்றும் புதிய பள்ளிகளில் ஒரே மாணவருக்கு இரண்டு "டிசி'கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும், என கல்வி அதிகாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வயதுக்கு ஏற்ப பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் விவரங்களை ஆய்வு செய்ய, கல்வி அலுவலர் குழு ஏற்படுத்த வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து, மற்றொரு பள்ளியில் சேரும் மாணவருக்கு, பழைய மற்றும் புதிய பள்ளிகள்என இரண்டு இடங்களிலுமே "டிசி'கள் இருக்க வாய்ப்புஏற்படும்.
இதை தவறாக பயன்படுத்தவும், உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டவும் வாய்ப்புள்ளது. இதை கல்வி அதிகாரிகள் வரைமுறைப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment