திருக்குறள்

13/06/2013

தமிழக அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களுடன் அரசு 19 ஆம் தேதியும் ,அனைத்து உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி சங்கங்களுடன் 20ஆம் தேதியும் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை


தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 14321 / இ1 / 2013, நாள்.15.06.2013ன் படி மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட பார்வையில் காணும் அரசு கடித எண்.18000/ GE(2) / 2013-1, நாள்.12.06.2013ல் உத்தரவிடப்பட்டது.

அந்தந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2 மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து விவாதிக்கும் வகையில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள் சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள் கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.


ஜூன் 19 புதன் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கபிரதிநிதிகள், மாண்புமிகு கல்வி அமைச்சர்.கல்வித்துறை செயலாளர்,தொடக்கக்கல்வி, பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோர் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு


ஜூன் 20 வியாழன் அனைத்து பள்ளிக்கல்வி சார்ந்த உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கபிரதிநிதிகள்,மாண்புமிகு கல்வி அமைச்சர்.கல்வித்துறை செயலாளர் , தொடக்கக்கல்வி,பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோர் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு

No comments:

Post a Comment