திருக்குறள்

21/06/2013

அரியலூர் மாவட்டம் திருமானூரில் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் பயிற்சி வகுப்பு செல்ல அனுமதி வழங்காததால் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்



திருமானூர் ஒன்றிய பகுதியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் திருமானூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

உள்ளிருப்பு போராட்டம்

திருமானூர் ஒன்றியத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அரசு அனுமதியோடு பி.எட் படிப்பில் சேர்ந்துள்ளனர். அவர்கள் சுமார் 40 நாட்கள் பயிற்சி வகுப்பு செல்ல வேண்டும். பயிற்சி வகுப்பு செல்லும் 40 நாட் களுக்கும் பாதி சம்பளம் வழங்கப்படும். இவர்கள்பயிற்சி வகுப்பு செல்ல கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் அதற்கான அனுமதியினை கேட்டுள்ள னர். அவர் அனுமதி வழங்காத தால் நேற்று மாலை 5 மணி யளவில் 4 பெண் ஆசிரியைகள் உள்பட 10 இடைநிலை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உள்ளிருப்பு போராட் டம் தொடர்பாக போராட் டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஹென்றி, பாஸ்கரன், ஜான்சன், பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் கூறும்போது, நாங்கள் அரசு மற்றும் அதிகாரிகளின் அனுமதியோடு தொலைதூரக் கல்வியில் பி.எட் படித்து வருகின்றோம். அதற்கான பயிற்சி வகுப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான அனுமதியை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் சுமார் 1 வார காலமாக கேட்டு வருகிறோம். என்ன காரணமோ அவர் எங்களுக்கு அனுமதி வழங்க வில்லை. இதற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள் ளோம்.

இதே அலுவலகத்தில் உதவி தொடக்க கல்வி அதிகாரியாக உள்ளவர் அவரிடம் விண் ணப்பம் கொடுத்த ஆசிரியர் களுக்கு அனுமதி வழங்கும் போது அதே பொறுப்பில் உள்ள இந்த கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரி எங்களுக்கு ஏன் அனுமதி தர மறுக்கிறார் என தெரியவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

உதவி தொடக்க கல்வி அதிகாரி அனுமதி

இந்த போராட்டம் தொடர் பாக மாவட்ட கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருமானூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலக உதவியாளர் உங்களது விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலர் வாங்க சொல்லி விட்டார். உங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித் துள்ளார் என கூறியதன் பேரில் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு செல்வதற்கான அனுமதி விண்ணப்பங்களை அவரிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். திருமானூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத் தில் மாலை 5 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை நடைபெற்றது.

No comments:

Post a Comment