திருக்குறள்

22/06/2013

அனைவருக்கும் இடைநிலை கல்வியில் 18 வயது இளைஞர்களிடையே பிரசாரம்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு முதல் இடைநின்ற இளைஞர்களை பள்ளி,கல்லூரிகளில் சேர்க்கும் பிரசாரம் துவங்கியுள்ளது.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், 2009 முதல் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம், செயல்பாட்டில் உள்ளது. இத் திட்டத்தில் பள்ளிசெல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டுவரை 14 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், இந்த கல்வியாண்டு (2013-2014) முதல், 18 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 15 முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களுக்கான திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் (ராஷ்டீரிய மத்தியமா சிக்ஷா அபியான்) செயல்படுத்துகிறது.
இந்தாண்டு கணக்கெடுப்பில், 15 முதல் 18 வயது நிரம்பிய மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாத மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களிடம் தற்போது பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. 
எதிர்கால கல்வியின் முக்கியத்துவம், கல்விக்கு அரசு செய்யும் உதவிகள், பல்வேறு திட்டங்களில் பெறப்படும், உதவித் தொகைகள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது. பல மாணவர்களை, அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க, முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
பொருளாதார நிலையால், சேரமுடியாத மாணவர்கள் குறித்த அறிக்கையும், அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment