திருக்குறள்

12/06/2013

எச்சரிக்கை அரசு அங்கீகாரமின்றி மாணவர்கள் சேர்ப்பு , அங்கீகாரம் ரத்தால் தனியார் பள்ளிகள் முன் பெற்றோர் பரிதவிப்பு லபோ, திபோ!

பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ததை கல்வித்துறை கடைசி நேரத்தில் அறிவித்ததால், கல்வியாண்டின் துவக்க தினமான நேற்று, பெற்றோரும், குழந்தைகளும் குழப்பம் அடைந்தனர். புத்தாடை அணிந்து, பள்ளிகளில் ஆர்வத்துடன் சென்ற குழந்தைகள், பள்ளி மூடப்பட்டதால் கவலையுடன் திரும்பி சென்றனர். மூடப்பட்ட பள்ளிகளின் முன், நிர்வாகத்துக்கும், பெற்றோர்களுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று மாநிலம் முழுவதும் செயல்பட துவங்கின. தன் பிள்ளைகளை வகுப்பறையில் விட்டு செல்ல வந்த பெற்றோர், பள்ளியின் தகவல் பலகை வாயிலாக, "பள்ளி செயல்படாது' என்ற அறிவிப்பை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். இதனால், பள்ளி நிர்வாகங்களுடன், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

"இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம்- 2009'ன் படி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் துவங்க, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறுவது
அவசியம். மேலும், கட்டட உறுதி, உரிமம், தீயணைப்பு தடையின்மை உள்ளிட்ட சான்றிதழ்களுடன், உரிய காலத்துக்குள் ஒப்புதலை புதுப்பிப்பதும் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு. முற்றிலும் அங்கீகாரம் இல்லாததாலும், பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க தவறியதாலும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து, நேற்று இந்த பள்ளிகள் முன், பெற்றோர்கள் குவிந்தனர்.

பள்ளி நிர்வாகத்துக்கு போதிய அறிவிப்பு கொடுத்தும் அதற்கான நடவடிக்கை எடுக்காததால், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ""பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை. பெற்றோர்கள் விரும்பும் அருகாமை பள்ளியில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். .பிற பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பெரும்பாலும் முடிந்து வகுப்புகள் துவங்கிவிட்டன. பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கும், வசதிக்கும் தகுந்தபடி பள்ளிகளில் இடம் கிடைக்குமா, அவ்வாறு கிடைத்தாலும் கல்வி கட்டண சுமையை நம்மால் ஏற்க இயலுமா என்ற பயம் அனைத்து பெற்றோர்கள் முகத்திலும் காண முடிந்தது.

"தரமான அரசுப் பள்ளி இருக்க , வேறு பள்ளி தேடுவேனா...'

No comments:

Post a Comment