திருக்குறள்

16/06/2013

கோவா பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் செக்ஸ் கல்வி நிபுணர் கமிட்டியின் பரிந்துரைகளை கோவா அரசு அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தும் என தெரிகிறது.



கோவாவில் சமீபத்தில் பள்ளிச் சிறுமி ஒருத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததால், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய எம்எல்ஏ தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. தொண்டு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோரை கொண்ட இந்தக் குழு, பள்ளிகளில் செக்ஸ் கல்வியை கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. உடல் நலம், செக்ஸ் கல்வி குறித்த பாடத் திட்டம் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். கருத்தரங்கு, தெரு நாடகம் போன்றவை மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு செக்ஸ் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை இந்தக் கமிட்டி அரசுக்கு அளித்துள்ளது. நிபுணர் கமிட்டியின் பரிந்துரைகளை கோவா அரசு அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தும் என தெரிகிறது.

No comments:

Post a Comment