திருக்குறள்

24/06/2013

பிஎப் நிதிக்கு இந்த ஆண்டும் 8.5 சதவீத வட்டிதான்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) 2012,13ம் நிதியாண்டில் தந்த 8.5 சதவீத வட்டியையே நடப்பு ஆண்டிலும் தனது 5 கோடி சந்தாதாரர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎப்ஓ தனது சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டியை நிர்ணயித்து வழங்கி வருகிறது. 2011,12ம் நிதியாண்டில் 8.25 சதவீதமாக இருந்த வட்டியை கடந்த ஆண்டில் 8.5 சதவீதமாக உயர்த்தியது.

இந்நிலையில் இபிஎப்ஓ அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நடப்பு ஆண்டில் ஊழியர்கள், நிறுவனங்கள் மூலம் எவ்வளவு பிஎப் நிதி கிடைக்கும், அதற்கு எவ்வளவு வட்டியை வழங்கினால் சரியானதாக இருக்கும் என்று ஏற்கனவே கணக்கிடப்பட்டது. கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் வட்டி விகிதத்தை மாற்றாமல் 8.5 சதவீத வட்டி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறுவது போல வட்டி வழங்குவது குறித்த திட்டம் நிதி மற்றும் முதலீட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தலைமையிலான மத்திய அறங்காவலர் குழுவின் இறுதி பரிசீலனைக்கு செல்லும். அந்த குழு அனுமதி அளித்தால் மத்திய நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்படும். மத்திய பிஎப் ஆணையர் கே.கே.ஜாலன் தலைமையிலான நிதி மற்றும் முதலீட்டு குழு கூட்டம் அடுத்த மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment