திருக்குறள்

16/06/2013

அனைவருக்கும் ஓர் வருத்தமான செய்தி: இந்தியாவில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளார்கள்.'கொத்தடிமைகளாக ஒரு கோடிச் சிறார்' - சர்வதேச தொழிலாளர் நிறுவனம்

அனைவருக்கும் ஓர் வருத்தமான செய்தி: இந்தியாவில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளார்கள்

இந்தியாவில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு இந்தியாவில் எத்தனை குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று ஆய்வு மேற்கொண்டது. அதில் நம் நாட்டில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. அதிலும் நாட்டிலேயே அதிகமாக உத்தரகண்ட் மாநிலத்தில் 17.5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மேற்கு வங்கத்தில் 5.5 லட்சம் குழந்தை தொழிலாளர்களும், ராஜஸ்தானில் 4.05 லட்சம் பேரும், குஜராத்தில் 3.9 லட்சம் பேரும் உள்ளனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2013ம் ஆண்டை குழந்தை தொழிலாளர் பிரச்சனையை எதிர்த்து போராடும் ஆண்டாக அறிவித்துள்ளது. என்ன தான் அரசு குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்தக் கூடாது என்று கூறினாலும் இன்றும் பல தாபாக்கள், ஹோட்டல்கள், கட்டிடம் கட்டும் இடங்களில் பேனா பிடிக்க வேண்டிய பிஞ்சுக் கரங்கள் உழைப்பதை பார்க்க முடிகிறது.

'கொத்தடிமைகளாக ஒரு கோடிச் சிறார்' - சர்வதேச தொழிலாளர் நிறுவனம்

உலகில் ஒரு கோடி சிறார்கள் வீட்டு வேலையாட்களாகப் பணிபுரிவதாகவும், அவர்களது பணியிட நிலைமைகள் பெரும்பாலும் ஆபத்தானவையாகவும், சில வேளைகளில் கொத்தடிமை நிலைமைக்கு இட்டுச் செல்வதாக இருப்பதாகவும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment