திருக்குறள்

30/06/2013

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,அரியலூர் மாவட்ட கிளையின் சார்பாக 7அம்சகோரிக்கையை வென்றெடுக்க தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்க மாநாடு இன்றுஅரியலூர் மாவட்ட கிளையின் சார்பாக PNM மண்டபத்தில் நடைபெற்றது.உலக கல்வி அமைப்பின் துணைத் த‌லைவர்,அகில இந்திய பொதுச் செயலாளர் மதிப்புமிகு சு.ஈஸ்வரன் அவர்கள் பேருரையாற்றினார்.



மறியல் போராட்ட ஆயத்த விளக்க மாநாடு

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அரியலூர் மாவட்டக் கிளை சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்க மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அரியலூர் மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச்செயலர் சு. ஈசுவரன் கோரிக்கைகளை விளக்கினார். கூட்டத்தில், கல்வித் துறை அலுவலக காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை அமல்படுத்த வேண்டும். 1.6.1988க்கு தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக் காலத்தையும் கணக்கிட்டு தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 25 முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் காமராஜ், பொதுச்செயலர் ரெங்கராஜன், மாநிலப் பொருளாளர் ஜோசப் சேவியர், மாநிலத் துணைச் செயலர் ராஜேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் அருமைக்கண்ணு, மாவட்டச் செயலர் (ஓய்வு பிரிவு) கருப்புசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் எழில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்மணி, மாவட்டத் துணைத் தலைவர்கள் சச்சிதானந்தம், இளவரசன், மாவட்டத் துணைச் செயலர்கள் வேல்முருகன், அய்யாகண்ணு உள்பட பலர் கலந்துகொண்டனர்.மாவட்டச் செயலர் பாண்டியன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் மார்ட்டின் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment