திருக்குறள்

09/07/2014

அரசாணை எண். 107 இன் படி பதவி உயர்வு...

உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு 12ம் வகுப்பு கல்வித்தகுதியினை வலியுறுத்தி வெளியிடப்பட்ட அரசாணை எண். 107 எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
ஆனால் தொடக்கக்கல்வித்துறை இதனை அமல்படுத்த தொடர்ந்து மறுத்து வந்த சூழ்நிலையில் தொடக்கக்கல்வி துறையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து உடனடியாக அமல்படுத்தவேண்டுமென நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து பலர் இவ்வருடம் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

1. விருதுநகர் மாவட்டம் - சிவகாசி ஒன்றியம் - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. முத்து திருவள்ளுர் மாவட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
2. அரியலூர் மாவட்டம் - ஆண்டிமடம் ஒன்றியம் - திரு. முருகேசன்
3. செயங்கொண்டம் ஒன்றியம் - திருமதி. முனியம்மாள்
4. கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர் - திருமதி. சுகுணா
5. புதுக்கோட்டை மாவட்டம் - திருமதி. கலைச்செல்வி
6. திருப்பூர் மாவட்டம் - காங்கேயம் ஒன்றியம் - ரெஜினா தங்கம்
ஆகியோர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment