திருக்குறள்

19/07/2014

இளங்கலை பட்டம் முடித்தவர்கள் ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களைப் படிக்க முடியாது- தொடக்கக்கல்வித் துறையின் RTI Letter.

RTI-யின் பதில் ஏற்படுத்திய நம்பிக்கையின்மை:

இளங்கலை பட்டம் பெற்றவர்கள்

ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களை, வெவ்வேறு 
பல்கலைக்கழகங்களில் ,வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் 

(நேரத்தில்) தேர்வு எழுதி முடித்திருந்தால் அதை பணிப்பதிவேட்டில் 
பதிவு செய்து, பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் 
பள்ளிக்கல்வித்துறை பலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 
மூலம் பதில் அளித்துள்ளது..

ஆனால்,தொடக்கக்கல்வித் துறையோஒரே கல்வியாண்டில் இரண்டு
பட்டங்களை படிக்க முடியாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 
மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது..

ஏன் இந்த முரண்பாடு..?
இது RTI-ல் கொடுக்கப்பட்ட தவறான தகவலினால் ஏற்பட்ட முரண்பாடா...?

இல்லை,இரு துறையிலும் உள்ள வேறுபட்ட விதிமுறையினால் ஏற்பட்ட
முரண்பாடா..?

எது உண்மை...தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த இந்த 
முரண்பாடான தகவலினால் RTI-ல் வழங்கப்படும் தகவல்களின் மீதும் 
ஆசிரியர்களின் மத்தியில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது..

இதில் நமக்கு ஒரு தெளிவு பிறக்க நாம் நீதிமன்றத்தை நாடவேண்டிய
கட்டாயத்திற்க்குத் தள்ளப்பட்டுள்ளோம்

No comments:

Post a Comment