திருக்குறள்

13/08/2013

குழந்தைகள் கடத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

பள்ளி வளாகத்தில் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்தால் அதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் கடத்தப்படுவதற்கு பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். எல்.கே.ஜி மாணவன் கடத்தல் சென்னையில் அண்மையில் தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படிக்கும் சூர்யா என்ற மாணவன் பள்ளி வளாகத்தில் இருந்து கடத்தப்பட்டான். இந்த சம்பவத்தில் 5 மணி நேரத்தில் மாணவரை போலீஸார் மீட்டனர். கடந்த சில ஆண்டுகளாக இது போன்று பள்ளி மாணவர்களை கடத்தும் சம்பவம் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது பற்றி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பள்ளி நிர்வாகிகளுடன் காவல்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். சி.சி.டி.வி கேமரா பள்ளி வளாகங்களில் மாணவர்கள் சி.சி.டி.வி கேமரா பொருத்தவேண்டும். 

"பள்ளிக் குழந்தைகளை வரவேற்கவும், அனுப்பவும் பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; அழைக்க வருபவர்களுக்கு, முறையான, "அடையாள அட்டை' வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகளை, பள்ளி நிர்வாகங்களுக்கு, சென்னை போலீஸ் வழங்கியுள்ளது.


* பெற்றோர் - ஆசிரியர் கழகத்துடன் இணைந்து, பள்ளிகளின் நிர்வாகங்கள், பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும், அழைத்துச் செல்லும், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், சரியானவர்களா என்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.அவர்களது நன்னடத்தை, நம்பகத் தன்மை குறித்து, அவர்களது பின்னணி குறித்து ஆய்வு செய்து, அறிந்து கொள்ள வேண்டும்.

* பள்ளி வளாகத்திற்குள், அங்கீகாரம் பெற்றவர்கள் தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனரா என்பதை உறுதி செய்யும் வகையில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் வருவோரை, சோதனை செய்யும் வகையில், வாயிற்பகுதியில் முறையான, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

* பள்ளி நேரத்திற்கு முன்பும், பின்னும், குழந்தைகளை அழைப்பதற்கும், வீட்டிற்கு அனுப்புவதற்கும், பள்ளியில் முறையான அமைப்பு இருக்க வேண்டும். பள்ளியில் குழந்தைகளை விடவும், அழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நபர், குழந்தை மற்றும் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மேலும், பள்ளியில் இருந்து குழந்தைகளை அனுப்பும் போதும், அழைக்கும் போதும், முறையான சோதனை நடத்த, ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியைகளை நியமிக்க வேண்டும்.

* அனைத்து பள்ளிகளிலும், தேவையான அளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி வாயில்கள், குழந்தைகள் அழைக்கப்படும் மற்றும் அனுப்பப்படும் இடங்களை, கண்காணிப்பதாக இருக்க வேண்டும். பலமுனை கண்காணிப்பு கேமராக்கள், இதற்கு பயன்படுத்தலாம்.

* இது போன்ற பாதுகாப்பு விஷயங்களில், பள்ளிகளுக்கு அனைத்து வகையிலும் போலீஸ் உதவி செய்யும்.இந்த, ஐந்து அறிவுறுத்தல்களையும், சென்னை போலீஸ் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment