திருக்குறள்

01/01/2014

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தொகை உயர்த்த சங்கம் வலியுறுத்தல்


பொங்கல் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், ஏ மற்றும் பி பிரிவு பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் குறைந்தபட்சம் 240 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர் ஆகியோருக்கு ரூ.1000 சிறப்பு போனசாக வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வை கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி ஒரு மாத ஊதியம் போனசாகவும், ஏ மற்றும் பி பிரிவு பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் குறைந்தபட்சம் 240 நாட்களுக்கு குறையாமல் தொடர்ந்து பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் சிறப்பு போனஸாக வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment