திருக்குறள்

20/05/2013

அரசு ஊழியர் விவரம் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்-தமிழக அரசு

"அரசு ஊழியர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அரசு ஊழியர்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய மைய தரவுத் தளத்தின் மூலம், மேலாண்மை தகவல் முறையில், பணியாளர்களின் விவர எண்ணிக்கை, சம்பளம் மற்றும் அதை சார்ந்த பிற விவரங்களை பெற, வலைதள பட்டியல் மென்பொருள் உருவாக்கப்படும்.

இத்திட்டம், 2013-14ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக வலைதள பட்டியல் மென்பொருள் தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மனித வள மேலாண்மை தொடர்பான திட்டமிடலுக்கு, உகந்த கருவியாக அமையும் என, பொதுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment