திருக்குறள்

24/01/2014

2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-


2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட அனைத்து நோட்டுக்களும், மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும். ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து இந்த நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். பின்பக்கத்தில் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை 10-க்கும் அதிகமாக மாற்ற நினைப்பவர்கள், அந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக இல்லாவிட்டால் அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment