திருக்குறள்

13/01/2014

மாசு இல்லாதபோகிப் பண்டிகையை கொண்டாட ஆட்சியர் வலியுறுத்தல்

மாசு இல்லாதபோகிப் பண்டிகையை கொண்டாட வலியுறுத்தல்
மாசில்லாத போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என பெரம்பலூர், அரியலூர் ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தைப்பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில், திருமகளை வரவேற்கும் வகையில் வீட்டில் உள்ள பழைய, வேண்டாத பொருள்களையும், செயற்கை பொருள்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவற்றை எரிக்கும் பழக்கத்தைக் கையாண்டு வருகின்றனர். இத்தகைய பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகைகளான கார்பன் மோனாக்ûஸடு, நைட்ரஜன் ஆக்ûஸடுகள், கந்தக டை ஆக்ûஸடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத் துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுவதோடு, கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகின்றன. இவ்வாறாக காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, பிரிவு (15)-ன் படி, தண்டனைக்குரிய குற்றம். எனவே, போகிப்பண்டிகையை முன்னிட்டு டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தாமல், குப்பைகளை முறைப்படி அகற்றி போகித் திருநாளை மாசு இல்லாமல் கொண்டாடுவதுடன், சுற்றுச்சூழலையும், மக்களின் உடல் நலனையும் பாதுகாக்க அனைவரும் ஒத்தழைக்க வேண்டும்.


No comments:

Post a Comment