திருக்குறள்

24/01/2014

லோக்சபா தேர்தல் பணி: அரசு ஊழியர்கள் தயார் : கம்ப்யூட்டரில் பதிவு பணி தீவிரம்

லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களது, சுய விவரங்களை, கணினியில் பதிவு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. 

வரும், லோக்சபா தேர்தலுக்கான பணிகளில், தேர்தல் ஆணையம்ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும், மார்ச் மாதம் நடக்க இருக்கின்றன. அதற்குள், தேர்தல் பணியில் ஈடுபடும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில், தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. 

ஒரு ஓட்டுச் சாவடிக்கு, நான்கு அலுவலர்கள் வீதம், 13,500 பேர், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.அதற்காக, தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களை தேர்வு செய்து, அவர்களின் விவரங்களை, கணினியில் பதிவு செய்யும் பணி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட, வசதிகளை, வரும், 31ம் தேதிக்குள், செய்து முடித்து, அறிக்கை அனுப்ப வேண்டுமென, அதிகாரிகளுக்கு, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment