திருக்குறள்

29/01/2014

சுற்றுச்சூழல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு பெற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றிவரும் கல்வி நிறுவனங்கள்,தனி நபர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் விருது வழங்கிக் கவுரவிக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இந்த விருதைப் பெற தகுதியுள்ள கல்வி நிறுவனங்கள், தனி நபர் உள்ளிட்டோர் விண்ணப்பத்தை இயக்குநர், சுற்றுச்சூழல் அலுவலகம், தரைதளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை என்ற முகவரியில் பெற்று, பிப்,28-க்குள் அனுப்ப வேண்டும்

No comments:

Post a Comment