திருக்குறள்

25/01/2014

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி



டெண்டர் நிராகரிக்கப்பட்டதால் வண்ண அடையாள அட்டை இப்போதைக்கு இல்லை


தமிழகத்தில் 76 லட்சம் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை தயாரித்து வழங்கும் டெண்டர் நிராகரிக்கப்பட்டது. அண்மையில் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 10 லட்சம் வாக்காளர்களுக்கு பல வண்ண அடையாள அட்டை தர முடிவு செய்யப்பட்டது. தேசிய வாக்காளர் தினமான நாளை இந்த புதிய அடையாள அட்டை தரப்படும் என்று கூறப்பட்டது. இதற்கான டெண்டர் எல்காட் மூலமாக வெளியானது. ஆனால், திட்ட மதிப்பீடு தொகை குறைவு காரணமாக டெண்டர் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'கலர் அடையாள அட்டை தயாரிக்கும் டெண்டர் மணுக்கல் தேர்தல் கமிஷன் நிபந்தனைக்கு ஏற்ப இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் டெண்டர் விட்டு புதிதாக அடையாள அட்டை தயாரிப்பதில் காலதாமதம் ஏற்படும்.எனவே கடந்த 6ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு புதிதாக கருப்பு வெள்ளையில் அடையாள அட்டை தயாரித்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பல வண்ண அடையாள அட்டை பயன்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை'' என்றனர். எக்ஸ்ட்ரா தகவல் தமிழகத்தில் 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் அளவில் 60,418 ஓட்டு சாவடிகள் உள்ளன.

No comments:

Post a Comment