திருக்குறள்

30/01/2014

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாக்கீது!இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மிகச் சரியான வழிகாட்டுதலை அளித்துள்ளது.






சமூக நீதிக்கு எதிரான அணுகுமுறையால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிக்கான இடங்கள் நிரப்பப்படாத ஒரு கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (National Commission of Scheduled castes) தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள 23.1.2014 நாளிட்ட கடிதத்தில் 
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க வாய்ப்பு அளிக்கத் தவறியதைச் சுட்டிக் காட்டி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர் வாணையத்தின் செயல்பாடு தன்னிச்சையானது - அநீதியானது - சட்ட விரோதமானது - இடஒதுக் கீடுக்கு எதிரானது (Arbitrary, Unjust, Unlawful and Against the Reservation Policy) 
என்று கடினமான பதங்களையும் பயன்படுத்தியுள்ளது. அத்தோடு தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் நிறுத்திக் கொள்ளவில்லை; இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கத் தவறிய அதிகாரிகள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு எண் 4இன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களில் தளர்வு காட்டப்பட வேண்டும்.

ஆந்திரா, கேரளம், ஒரிசா, அஸ்லாம், பீகார் மாநிலங்களில் அத்தகு முறை பின்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முன்னேறிய ஜாதியினருக்கு 60 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட் டோருக்கு 50 மதிப்பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 40 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலும் பிடிவாதமும் காட்டாமல், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக் குரிய தளர்வு மதிப்பெண் அடிப்படையில் ஏற்கெனவே தேர்வு எழுதியவர்களைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத் துகிறோம்.

ஆசிரியர் தேர்வு ஆணையம் இனி நடத்தவிருக்கும் தேர்வுகளை இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தளர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அனைவருக்குமே வாய்ப்பு அளிக்க வாய்ப்பு உண்டே!

பேராசிரியர் முத்துக்குமரன் தலைமையிலான கல்விக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற ரீதியில் செயல்பட்டால் ஆசிரியர் பயிற்சி பெற்று வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் எளிதாகக் கிடைத்து விடுமே! இவற்றைப் பற்றி எல்லாம் தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும்.

வேலையில்லாதாருக்கு வேலை வாய்ப்பு அளிப்பது என்பதும் ஓர் அரசின் அடிப்படை கடமை என்பதையும் நினைவூட்டுகிறோம். தமிழ்நாடு அரசு செயல்படுமாக!

No comments:

Post a Comment