திருக்குறள்

22/01/2014

அரியலூர் மாவட்டத்தை கல்வியில் முதன்மையானதாக உருவாக்க வேண்டும்: மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் முதல் இரண்டு இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வகுப்புகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் தொடங்கி வைத்து கூறியதாவது:–

நமது மாவட்டத்தில் 152 உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அளவில் முதல் இரண்டு இடம் பெற்ற மாணவ, மாண விகளை நடைபெற உள்ள 10–ஆம் வகுப்பு மற்றும் 12–ஆம் வகுப்பு பொதுதேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடிப்பதற்கான சிறப்பு வகுப்புகள் இன்று முதல் ஒரு மாத காலம் நடைபெறவுள்ளது.

10–ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வகுப்பு நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 12–ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வகுப்பு கலெக்டர் அலுவலக கூட்டமன்றத்திலும் காலை9 மணி முதல் பிற்பகல்2 மணி வரை நடைபெறும்.

வகுப்புகளில் சிறப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பு ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்பு தினமும் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு வகுப்புகளில் பொதுத்தேர்வு மாதிரி வினா தாள், வினா–விடை வங்கி புத்தகங்கள் மற்றும் மதிய உணவு ஆகியவை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.

இச்சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்தில் (சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் உட்பட) மூன்று நாட்கள் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிக்கப்படும்.

மேலும், பாடநூல் கொண்டு எவ்வாறு படிக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுத்தேர்வில் அனைத்து வினாக்களுக்கும் குறித்த நேரத்தில் விடைகளை எவ்வாறு எழுத வேண்டும் என்பது குறித்தும் இவ்வகுப்புகளில் பயிற்சி அளிக் கப்படவுள்ளது.

இச்சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் எதிர்வரும் பொதுத் தேர்வினை மனதில் கொண்டு பொழுதுபோக்கிற்கு முக் கியத்துவம் அளிக்காமல், பாடநூலை மட்டுமே படிக்க வேண்டுமென்றும் அரியலூர் மாவட்டத்தை கல்வியில் முதன்மை மாவட்டமாக உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டுமென்றும் கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறினார்.

No comments:

Post a Comment