திருக்குறள்

01/07/2013

தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு...

ஒரு வகுப்பில் 5 பிரிவுகளுக்கு மேல் நடத்தும் தனியார் பள்ளிகள் குறித்தும் கூடுதலாக படிக்கும் மாணவர்கள் விவரங்கள் குறித்தும் ஆய்வு நடத்தி அறிக்கை தர மெட்ரிக் பள்ளி இன்ஸ்பெக்டர்களுக்கு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவால், தனியார் பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.தமிழகத்தில் 7000 நர்சரி, பிரைமரி பள்ளிகள், 1500 மெட்ரிக் பள்ளிகள், 4500 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், 2000 தனியார் சுயநிதி பள்ளிகள், 650 சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 15650 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 1.5 கோடி மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒரு லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அனைவருக்கும் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி (ஆர்டிஇ) அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு வகுப்புக்கு 30 மாணவர்களும், 6 முதல் 10ம் வகுப்பு வரை 35 மாணவர்களும், 11, 12ம் வகுப்புகளில் 40 மாணவர்கள் வரை மட்டுமே சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல தனியார் பள்ளிகள் விதிகளை மீறி ஒரு வகுப்பில் கூடுதல்மாணவர்களை சேர்த்துள்ளதாகவும், இதனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு அதிகபட்சம் ஐந்து பிரிவுகளுக்கு (செக்ஷன்) மேல் நடத்தக்கூடாது என்றும், ஆர்டிஇ விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டு இருந்தது. மாணவர் சேர்க்கை முடிந்து, பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில் திடீரென்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் இவ்வாறு அறிவித்தது, தனியார் பள்ளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல தனியார் பள்ளிகள் ஒரு வகுப்புக்கு ஏ முதல் எல் வரை 12 பிரிவுகள் நடத்தி வருகின்றன. தற்போதைய உத்தரவால் கூடுதலான பிரிவுகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளி இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநிலம் முழுவதும் 300 தனியார் பள்ளிகளில் கூடுதல் பிரிவுகள் இயங்குவது தெரியவந்துள்ளது. இவற்றில் எத்தனை மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தர, மெட்ரிக் பள்ளி இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடு குறித்து அரசுதான் முடிவு செய்யும் என்றார். இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் நந்தகுமார் கூறும்போது, ''மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை வரவேற்கின்றன. போதிய கட்டிட வசதிகளும், ஆசிரியர்களும் இருந்தால் எத்தனை பிரிவுகள் வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம். இதுதான் நடைமுறை. மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுத்திருந்தால் தனியார் பள்ளிகள் விதிகளுக்கு உட்பட்டு பிரிவுகளை குறைத்திருக்கும். இப்போது திடீரென உத்தரவு போட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஆசிரியர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படும். இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment