தமிழக அரசு ஊழியர்களுக்கான கடந்த நிதியாண்டின் பொதுவருங்கால வைப்பு நிதியின் வருடாந்திர கணக்கு அறிக்கை ஜூலைமுதல் வாரம் முதல் மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தில்இருந்து அனுப்பப்பட உள்ளன. இந்த அறிக்கை சம்பந்தப்பட்ட பணம்பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் கடந்த பிப்ரவரி 28 ஆம்தேதியன்று எந்த அலுவலகத்தில் பணியாற்றினார்களோ, அந்தஅலுவலக பணம் பெற்று வழங்கும் அலுவலரை அணுகி அவரவர் கணக்குஅறிக்கையை பெற்றுக் கொள்ளலாம்.
கணக்கு அறிக்கையில் ஏதேனும் மாறுபாடுகள் காணப்பட்டால் அதுகுறித்த தகவல்களை மாநில கணக்காயர் அலுவலகத்துக்கு உடனடியாகத்தெரிவிக்க வேண்டும். மேலும், சந்தாதாரர் அல்லது வாரிசுதாரர்கள்தகவல் பரிமாற்றத்துக்கான தங்களது செல்பேசி எண் மற்றும் முழுமுகவரி ஆகியவற்றை அனைத்துக் கடிதத் தொடர்புகளிலும் தவறாமல்குறிப்பிடவும்.
அதேபோன்று, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள்அலுவலகத்தின் முழு முகவரி, தொலைபேசி, செல்பேசி, இ-மெயில்ஆகிய தகவல்களை தங்களின் அனைத்துக் கடித தொடர்புகளிலும்தவறாமல் குறிப்பிட வேண்டும்.
தகவல்கள் தெரிவிக்க...044-24314477. இணையதளம்: www.agae.tn.nic.in நேரடிக் கடிதம் மூலம்: வர்ஷினி அருண், துணை மாநில கணக்காயர்(நிதி), மாநில முதன்மைக் கணக்காயர் அலுவலகம் (கணக்கு மற்றும் பணிவரவு), 361, அண்ணாசாலை, சென்னை-600 018.
No comments:
Post a Comment